ஒரு முதியவர் ஒரு.. ஹோட்டலுக்கு சாப்பிட சென்றார்..! வெயிலில் வந்த களைப்பு.. அவர் முகத்தில் தெரிந்தது..! அவர் அங்கு ஓர் இடத்தில் அமர்ந்து சர்வரை.. அழைத்து கேட்டார்..! " தம்பி இங்கு சாப்பாடு என்ன விலை..! என்று..! அதற்கு சர்வர் "50 ரூபாய்" என்றான்..! பெரியவர் தனது சட்டை பைக்குள்.. கை விட்டு பார்த்து சர்வரிடம் கேட்டார்.. "தம்பி அதற்கும் சற்று.. குறைவாக சாப்பாடு கிடைக்காதா.."? சர்வர் கோபமாக "யோவ் ஏன்யா இங்க வந்து எங்க உயிர எடுக்கிறிங்க.. இதை விட மலிவான ஹோட்டல் எவ்வளவோ.. இருக்கு அங்க போய் தொலைங்கயா..? என்றான்..! பெரியவர் சொன்னார்.. "தம்பி தெரியாமல் இங்கு வந்துவிட்டேன்.. வெளியே வெயில் வேறு..அதிகமா இருக்கு.. நான் இனி வேறு ஹோட்டலுக்கு செல்வது சற்று சிரமம்..! என்றார்..! சர்வர்.. சரி..சரி எவ்ளோ பணம் குறைவா வச்சுயிருக்க..! என்று கேட்டான்..! பெரியவர் என்னிடம் 45 ரூபாய் தான் இருக்கிறது..! என்றார்..! சர்வர் சரி..தருகிறேன் ஆனால் உனக்கு தயிர் இல்லை சரியா..? என்றான்..! பெரியவர் 'சரி' என சம்மதித்தார்..! சாப்பாடு கொடுத்தான்..! பெரியவர் சாப்பிட்டு ...
Anger is an acid that can do more harm to the vessel in which it is stored than to anything on which it is poured. -Mark Twain பக்கத்து ஊருக்குச் செல்லும் கடைசி பரிசல் அது. அதை விட்டால் மறுநாள் காலையில் தான் பரிசல். பரிசலில் கூட்டம் நிரம்பி வழிந்தது. பரிசல் புறப்பட தயார் ஆனது. தாமதமாக வந்த துறவி ஒருவர் அந்த பரிசலில் ஏறினார். பரிசலில் இருந்தவர்கள் "நாங்களே இங்கே நெருக்கி அமர்ந்து இருக்கிறோம். உங்களுக்கு இடமில்லை. காலையில் வாருங்கள் " என்றார்கள். படகோட்டியோ " துறவியாரே நீங்கள் இங்கே அமருங்கள் " என்று அவருக்கு ஒரு இடம் தந்தார். பரிசல் புறப்பட்டது. பயணிகள் அனைவரும் வெறுப்புடன் துறவியை பார்தனர். அவரோ கண்களை மூடியபடி தியானத்தில் ஆழ்ந்து இருந்தார். " தடிமாடு போல இருக்கிறான். உழைத்து சாப்பிட்டால் என்ன? காவி உடை அணிந்து உலகத்தை ஏமாற்றுவது ஒரு பிழைப்பா? " என்று கேலி செய்தான் ஒருவன். அவரோ ஏதும் பேசாமால் அமைதியாக இருந்தார். என்ன நடந்தாலும் அவர் எதுவும் பேசமாட்டார் என்பது மற்றவர்களுக்கு புரிந்தது. அவர்கள் எல்லோரும் அவரைத் தாறுமாறா...
அமெரிக்க பாராளுமன்றத்தில், அதிபர் ஆப்ரஹாம் லிங்கன் உரை நிகழ்த்தும்போது, அவரை மட்டம்தட்டும் நோக்கில் எதிர் தரப்பு பிரமுகர் ஒருவர் எழுந்து, . ஆப்ரஹாம் ... ... . உங்கள் தந்தை தைத்துக்கொடுத்த செருப்பு இன்னும் என் கால்களை அலங்கரித்துக்கொண்டு இருக்கிறது என்றாராம் .... . அதற்கு ஆப்ரஹாம் லிங்கன் சொன்னாராம், . " நண்பரே என் தந்தை இறந்து பலவருடங்கள் ஆகிவிட்டது, இருப்பினும் அவர் தைத்து கொடுத்த செருப்பு உங்களின் காலை இன்னும் அலங்கரித்துக்கொண்டு இருக்கிறதென்றால், அது அந்த அளவுக்கு நேர்த்தியாக தைக்கப்பட்டுள்ளது ...... . இருப்பினும் அவர் தைத்த இடத்தில் ஏதேனும் பழுது ஏற்ப்பட்டிருந்தால் அதை என்னிடம் கொடுங்கள் நான் அதை உங்களுக்கு சரி செய்து தருகிறேன் . எனக்கு செருப்பு தைக்கவும் தெரியும் .... . நாட்டை ஆளவும் தெரியும் என்று பதிலுரைத்தாராம் ... . தன்னம்பிக்கை விடாமுயற்சி இவைகளில் இருந்து பெற்ற ஏழ்மையின் அனுபவ அறிவுக்கு நிகராக ... . வேறெதுவும் போட்டியிட முடியாது......... .
Comments
Post a Comment