அமெரிக்க பாராளுமன்றத்தில், அதிபர் ஆப்ரஹாம் லிங்கன் உரை நிகழ்த்தும்போது, அவரை மட்டம்தட்டும் நோக்கில் எதிர் தரப்பு பிரமுகர் ஒருவர் எழுந்து, . ஆப்ரஹாம் ... ... . உங்கள் தந்தை தைத்துக்கொடுத்த செருப்பு இன்னும் என் கால்களை அலங்கரித்துக்கொண்டு இருக்கிறது என்றாராம் .... . அதற்கு ஆப்ரஹாம் லிங்கன் சொன்னாராம், . " நண்பரே என் தந்தை இறந்து பலவருடங்கள் ஆகிவிட்டது, இருப்பினும் அவர் தைத்து கொடுத்த செருப்பு உங்களின் காலை இன்னும் அலங்கரித்துக்கொண்டு இருக்கிறதென்றால், அது அந்த அளவுக்கு நேர்த்தியாக தைக்கப்பட்டுள்ளது ...... . இருப்பினும் அவர் தைத்த இடத்தில் ஏதேனும் பழுது ஏற்ப்பட்டிருந்தால் அதை என்னிடம் கொடுங்கள் நான் அதை உங்களுக்கு சரி செய்து தருகிறேன் . எனக்கு செருப்பு தைக்கவும் தெரியும் .... . நாட்டை ஆளவும் தெரியும் என்று பதிலுரைத்தாராம் ... . தன்னம்பிக்கை விடாமுயற்சி இவைகளில் இருந்து பெற்ற ஏழ்மையின் அனுபவ அறிவுக்கு நிகராக ... . வேறெதுவும் போட்டியிட முடியாது......... .
8.5 கோடிப் பிரதிகள் விற்றுச்சாதனை படைத்துள்ள நூல் ஆன்மாவிற்குப் பரவசமூட்டுகின்ற ஞானத்தை உள்ளடக்கிய எளிய, சக்திவாய்ந்த இப்புத்தகம், ஆன்டலூசியா பகுதியைச் சேர்ந்த, சான்டியாகோ என்ற செம்மறியாட்டு இடையன் ஒருவனைப் பற்றியது. அவன் ஸ்பெயினில் உள்ள தன்னுடைய சொந்த கிராமத்திலிருந்து புறப்பட்டு, பிரமிடுகளில் புதைத்து வைக்கப்பட்டுள்ள ஒரு பொக்கிஷத்தைத் தேடி எகிப்தியப் பாலைவனத்திற்குச் செல்லுகிறான். வழியில் அவன் ஒரு குறவர்குலப் பெண்ணையும், தன்னை br>ஓர் அரசர் என்று கூறிக் கொள்ளுகின்ற br>ஓர் ஆணையும், ஒரு ரசவாதியையும் சந்திக்கிறான். அவர்கள் அனைவரும், அவன் தேடிக் கொண்டிருக்கின்றன பொக்கிஷத்திற்கு இட்டுச் செல்லக்கூடிய பாதையை அவனுக்குக் காட்டுகின்றனர். அது என்ன பொக்கிஷம் என்பதோ, வழியில் எதிர்ப்படும் முட்டுக்கட்டைகளை சான்டியாகோவால் சமாளிக்க முடியுமா என்பதோ அவர்கள் யாருக்கும் தெரியாது. ஆனால், லௌகிகப் பொருட்களைத் தேடுவதில் தொடங்குகின்ற ஒரு br>பயணம், தனக்குள் இருக்கும் பொக்கிஷத்தைக் கண்டறிகின்ற ஒன்றாக மாறுகிறது. வசீகரமான, உணர்வுகளைத் தட்டியெழுப்புகின்ற, மனிதாபிமானத்தைப் போற்றுகின்ற இக்கதை, நம்முடைய...
Anger is an acid that can do more harm to the vessel in which it is stored than to anything on which it is poured. -Mark Twain பக்கத்து ஊருக்குச் செல்லும் கடைசி பரிசல் அது. அதை விட்டால் மறுநாள் காலையில் தான் பரிசல். பரிசலில் கூட்டம் நிரம்பி வழிந்தது. பரிசல் புறப்பட தயார் ஆனது. தாமதமாக வந்த துறவி ஒருவர் அந்த பரிசலில் ஏறினார். பரிசலில் இருந்தவர்கள் "நாங்களே இங்கே நெருக்கி அமர்ந்து இருக்கிறோம். உங்களுக்கு இடமில்லை. காலையில் வாருங்கள் " என்றார்கள். படகோட்டியோ " துறவியாரே நீங்கள் இங்கே அமருங்கள் " என்று அவருக்கு ஒரு இடம் தந்தார். பரிசல் புறப்பட்டது. பயணிகள் அனைவரும் வெறுப்புடன் துறவியை பார்தனர். அவரோ கண்களை மூடியபடி தியானத்தில் ஆழ்ந்து இருந்தார். " தடிமாடு போல இருக்கிறான். உழைத்து சாப்பிட்டால் என்ன? காவி உடை அணிந்து உலகத்தை ஏமாற்றுவது ஒரு பிழைப்பா? " என்று கேலி செய்தான் ஒருவன். அவரோ ஏதும் பேசாமால் அமைதியாக இருந்தார். என்ன நடந்தாலும் அவர் எதுவும் பேசமாட்டார் என்பது மற்றவர்களுக்கு புரிந்தது. அவர்கள் எல்லோரும் அவரைத் தாறுமாறா...
Comments
Post a Comment