கடவுளை கண்டவர் மற்றவர்களுக்கு காண்பிக்க முடியுமா - ராமகிருஷ்ண பரமஹம்சர்

 *ஒரு நாள் ராமகிருஷ்ண பரமஹம்சரைப் பார்க்க டாக்டர் ஒருவர் வந்தார்...!!*


வந்தவர் கேட்டார்: ....    *“ஐயா நீங்கள் காளியைப் பார்த்திருக்கிறீர்களா?”*

*பரமஹம்ஸர் சட்டென்று பதில் சொன்னார்:*

*“ஓ....!*   *பார்த்திருக்கிறேனே...!!*

*காலையில் கூட தாயுடன் பேசினேன்”*

*“நீங்கள் பார்த்தது உண்மை என்றால் எனக்குக் காட்டுங்கள்”*


 என்று டாக்டர் பதிலுக்குக் கேட்டவுடன் ,


    *சுற்றி அமர்ந்திருந்தவர்கள் பரமஹம்ஸர் என்ன பதில் சொல்லப் போகிறார் என்று,*


 ஆவலோடு காத்திருந்தனர்.


*பரமஹம்சர் சிறிதும் அலட்டிக் கொள்ளாமல் கேள்வி எழுப்பிய டாக்டரிடம்,*

 

    *“நீங்கள் என்ன வேலை பார்க்கிறீர்கள்?”*

 என்று கேட்டார்.....!!


அவர் சொன்னார்:


      *“நான் டாக்டர் வேலை செய்கிறேன்”...!!*


*“டாக்டர் தொழில் உங்களுக்கு நன்றாகத் தெரியும் தானே...?”*


*“நன்றாகத் தெரியும்”*


“அப்படியானால்,

    *என்னை ஒரு டாக்டர் ஆக்குங்கள்”*


*“அது எப்படி....?*


*நீங்கள் டாக்டருக்குப் படிக்க வேண்டுமே....?”*


*“டாக்டராவதற்கே ஒரு படிப்பு வேண்டும் என்றால்,*


*கடவுளைப் பார்க்க ஒரு படிப்பு வேண்டாமா....?*


 *நான் அதைப் படித்திருக்கிறேன்.*


*நீங்களும் அதைப் படித்தால் கடவுளைக் காணலாம்”*


*என்று பரமஹம்சர் நெத்தியில் அடிப்பது போல அவருக்குப் பதில் சொன்னார்.*


*டாக்டர் அதிர்ந்துபோய் விட்டார்.*


*மற்றவர்கள் வியந்து மகிழ்ந்தனர்....!!*🙏🌹

Comments

Popular posts from this blog

ரசவாதி - The Alchemist (Tamil) : பாலோ கொயலோ

உயர்வு

சூழ்நிலை