Posts

Showing posts from October, 2022

பெரிய பணக்காரர்களால் கூட காசு கொடுத்து வாங்க முடியாதது என்ன/எது?

 இளமை. உலகின் மிகப்பெரிய பணக்காரரான ராக்பெல்லர் தினமும் காலையில் காலாற நடைப்பயிற்சி செய்வது வழக்கம். அப்போது, ஒரு இளைஞன் விரக்தியுடன் நடப்பதை கவனித்தார். என்னவென்று விசாரித்தபோது, அவனுக்கு வாழ்க்கையில் பல்வேறு பிரச்சனைகள். அவன் தற்கொலை செய்துக்கொள்வதற்காக செல்வதாக கூறினான். அவர் அவனை பல்வேறு விதங்களில் தேற்ற முயற்சித்தார். அவன் கூறினான். "உங்களுக்கென்ன, நீங்கள் உலகின் பணக்காரர். உங்களுக்கு எல்லாம் எளிதில் கிடைக்கும். உங்களுடைய எல்லா சொத்துக்களையும் எனக்குத் தர முடியுமா ? " என்றான். "தாராளமாக தருகிறேன். ஆனால், அதற்கு பதிலாக, எனக்கு நீ ஒன்று மட்டும் கொடு. உனது இளமை. உன்னுடைய இளமையை எனக்கு நீ தந்துவிட்டால், நான் மறுபடி உழைத்து, இத்தகைய சாம்ராஜ்யத்தை உருவாக்க முடியும்." என்றார் ராக்பெல்லர். இளைஞன், தனது பிரச்சனையை சமாளிக்கும் தன்னம்பிக்கையை அடைந்து, உழைத்து வாழ்வதென்று முடிவெடுத்தான். உலகத்தின் மிகப்பெரிய பணக்காரரும், கடந்த இளமையை மறுபடி பெற இயலாது. வாழ்க்கையில் மறுபடி இளமை திரும்பி வராது. அந்தந்த காலகட்டங்களை அப்போதே பயன்படுத்திக் கொள்ள வேண்டும். காலம் பொன் போன்றது.

குழந்தைகளை வளர்ப்பது எப்படி

 ஒரு இளைஞனும் ஒரு வயதான ஓய்வு பெற்ற ஆசிரியரும் ஆளுக்கொரு செடி வாங்குகிறார்கள்.அந்த இளைஞன் அந்த செடியை நன்றாக வளர்க்க வேண்டும் என நினைக்கிறான். தினமும் தண்ணீர் விடுகிறான். இணையதளங்களில் தேடி நல்ல சிறந்த உரங்களை வாங்கி வைத்து கண்ணும் கருத்துமாக வளர்க்கிறான். அந்த ஆசிரியரோ அந்த செடிக்கு தினமும் தண்ணீர் விடுகிறார். மாட்டு சாணத்தை எப்போதோ ஒரு சில நேரம் மட்டும் உரமாக இடுகிறார்.இளைஞன் வளர்த்த செடி நன்றாக செழித்து வளர்ந்து புஸு புஸுவென்றுக் காணப்படுகிறது. ஆசிரியரின் செடி இரண்டு மூன்று கிளைகளுடன் சாதரணமாக உள்ளது. அந்த இளைஞன் அடிக்கடி அந்த ஆசிரியரிடம், "என்ன பெருசு இப்படி இருக்கு உன் செடி.. என்னோடத பாரு. எப்படி புஸு புஸுன்னு இருக்கு. நல்ல உரம் வைக்க மாட்டியா?" என்று கேட்கிறான்.அதற்கு ஆசிரியர் கூறுகிறார், "உள்ளது போதும் ப்பா". திடீரென்று ஒருநாள் கஜா புயல் போன்றதொரு கடுமையான புயல் வீசுகிறது. மறுநாள் இளைஞனின் செடி வேருடன் வீழ்ந்து கிடக்க ஆசிரியரின் செடி நன்றாக நிற்கிறது. ஆசிரியரிடம் செல்கிறான் இளைஞன். "நான் நல்ல உரமெல்லாம் வச்சு என் செடிய நல்லா பாத்துக்கிட்டேன். ஆனாலும் என்

கண்ணனின் மனதில் யார் இருக்கிறார்?

 அபிமன்யுவின் மனைவி உத்தரைக்கு முனிவர் ஒருவர், மாயக்கண்ணாடி ஒன்றை பரிசாக வழங்கினார். அந்தக் கண்ணாடி முன் ஒருவர் வந்து நின்றால், அவர் மனதில் யார் இருக்கிறாரோ, அவர் அதில் தெரிவார். உத்தரையே முதலில் அதை சோதனை செய்தாள். திருமணமானதில் இருந்து, அவளது அன்புக்கணவன் அபிமன்யுவைத்தவிர அவளது உள்ளத்தில் வேறு யாருமில்லை. எனவே, அபிமன்யு கண்ணாடியில் தெரிந்தான். அபிமன்யுவும், மனைவி மீது தீராக்காதல் கொண்டிருந்தான். அவனை கண்ணாடி முன்னால் நிறுத்தினர். அப்போது, உத்தரை அதில் தெரிந்தாள். அந்த சமயத்தில் மாயக்கண்ணன் அங்கு வந்தார். அவர் மனசுக்குள் யார் இருக்கிறார் என்று பார்க்க எல்லாருக்கும் ஆசை. அர்ஜுனன் என்னை விட்டால் யார் இருப்பார்? எனச்சொல்ல, போடா! அவன் மனதில் நான் தான் இருப்பேன், என பீமன் வம்புக்குப்போக, இருவருமே இல்லை! நான் தான் இருப்பேன், என தர்மர் பிடிவாதமாய்ச்சொல்ல, ஏன்... அவனது தந்தை வசுதேவனின் தங்கையான நானல்லவா இருப்பேன், என மனதுக்குள் நினைத்துக் கொண்டாளாம் குந்தி. எல்லாரும் ஆர்வமாயினர். கண்ணனைக் கையைப் பிடித்து இழுக்காத குறையாக கண்ணாடி முன் கொண்டு வந்து நிறுத்தினர். என்ன ஆச்சரியம்! யாருக்கு கண்ணனை அ

இரண்டு வகையான ஆசிரியர்கள்

1. சிலர் நடைமுறை அறிவை வழங்குகிறார்கள். 2. இன்னும் சிலர் ஒழுக்கம் மற்றும் நெறிமுறைகளை வழங்குகிறார்கள் சுருக்கம் பணியிடத்தில், இளைஞர்கள் தங்கள் விஸ்வாமித்திரர்களை சந்திக்கிறார்கள், வழிகாட்டிகள் மற்றும் பயிற்சியாளர்கள், பணியிடத்தில் சிறப்பாக செயல்பட , நடைமுறை அறிவை வழங்கி நம் முன்னேற்றத்திற்கு உதவுபவர்கள். ராமாயணத்தில், ராமருக்கு வசிஷ்டர் மற்றும் விஸ்வாமித்ரா என்ற இரு ஆசிரியர்களால் கல்வி கற்பிக்கப்படுகிறது. இந்த இரண்டு ஆசிரியர்களும் இரவும் பகலும் போல ஒருவருக்கொருவர் வேறுபட்டவர்கள். வசிஷ்டர் முதல் ஏழு முனிவர்களில் ஒருவர். அவர் வேத ஞானத்துடன் தொடர்புடையவர். ராமர் தனது படிப்பை முடித்த பிறகு, அவர் உலகம் முழுவதும் பயணம் செய்து,  உலகின் மாயையான தன்மையால் ஏமாற்றமடைந்து உலக வாழ்க்கையில் ஆர்வமின்றி இருக்கிறார். அச்சமடைந்த அவரது தந்தை தசரதன் வசிஷ்டரை அழைக்கிறார், அவர் இது ஒரு நல்ல விஷயம் என்று அறிவிக்கிறார், ராமர் இப்போது வேதங்களின் இறுதி ஞானத்தைப் பெறத் தயாராகிவிட்டார்.பின்னர், 21 நாட்களுக்கு, ராஜாவின் அரசவையில் யோக வசிஷ்டர் கற்பித்தலின் மூலம், அறிவொளி பெற்ற ராமர் யதார்த்தத்தின் உண்மையான தன்மையைப