Posts

Showing posts from November, 2021

இரவு தூக்கத்தைத் தொலைப்பதால் ஏற்படும் பாதிப்புகள்

  நள்ளிரவைத் தாண்டியும், இன்றைய இளைஞர்களின் கை விரல்கள் இயங்குவதை நிறுத்திய பாடில்லை. காரணம்... வாட்ஸ் அப், டுவிட்டர், பேஸ்புக் போன்ற சோஷியல் மீடியாக்கள். இரவு 2 மணிக்கு மேல் தூங்கி, காலையில் தாமதமாக எழுந்து மனதையும், உடலையும் கெடுத்துக் கொள்பவர்களின் எண்ணிக்கை மிக மிக அதிகம். இரவு தூக்கத்தைத் தொலைப்பதால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி தெரிந்து கொள்வோம். சராசரியாக மனிதனுக்கு 6 முதல் 8 மணி நேரம் தூக்கம் அவசியம். தூங்குவதற்கு சரியான நேரம், இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தான். ஏனெனில், அப்போதுதான் ‘மெலட்டோனின்’ என்ற ஹார்மோன் சரியாக சுரக்கும். வெளிச்சமே இல்லாத இரவில் தூங்கி வெளிச்சம் வந்தவுடன், எழுந்துவிட வேண்டும். அப்போதுதான், நமது உடலுக்குத் தேவையான ஓய்வு கிடைத்து, ஆரோக்கியம் மேம்படும். சிலர், வேலை காரணமாக நள்ளிரவு 12 மணிக்கு மேல் தூங்க வேண்டிய சூழல் வரலாம். அவர்களும் இந்த 6-8 மணி நேர தூக்கத்தைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும். இரவில் தூக்கத்தைத் தொலைத்துவிட்டு, பகலில் கொஞ்ச நேரம் தூங்குகிறேன் என்பது சரியானது அல்ல. பேஸ்புக்கில் அப்லோடு செய்த போட்டோவுக்கு எத்தனை லைக்ஸ் வந்திருக்கிறது, யாராவது

இன்றைய சிந்தனை ( 01.12.2021)

  *"நம் எண்ணங்கள் நமது அதிர்வெண்ணை நிர்ணயிக்கின்றன, மேலும் நாம் என்ன அதிர்வெண்ணில் இருக்கிறோம் என்பதை நம் உணர்வுகள் உடனடியாக நமக்குத் தெரிவிக்கும்."* *மருத்துவத்திற்காக த்தான் கண்டுபிடிக்கப்பட்டது "மது" இன்று பல குடும்பங்களின் மரணங்களுக்கு பயன்படுகிறது என்பதை உணருங்கள்...!!* *அன்று வேதங்களையும் புராணங்களையும் அன்பையும் சொல்லிக் கொடுத்த கல்வி இன்று பணம் சம்பாதிக்க மட்டுமே சொல்லிக் கொடுக்கப்படுகிறது...!!* *நல்லதை செய்து நல்லதை அறுவடை செய்ய நினைப்பவர்கள் நல்லதையே பெற்றுக்கொள்கிறார்கள். ஆகவே நல்லதே செய்யுங்கள்.* *என் மகிழ்ச்சியை பார்த்து என்னை தீர்மானித்து விடாதீர்கள். உங்களால் நினைத்து பார்க்க முடியாத சோகங்கள் எனக்கும் உண்டு...!!* *எதிர்மறை எண்ணங்கள் வாழ்விற்கு ஒத்து வருவதில்லை. நேர்மறை எண்ணங்கள் இருந்துவிட்டால் வாழ்வது கடினம் இல்லை.* *மனநிலை என்பது மிகவும் சிறியதுதான். அதனால் ஏற்படும் மாற்றம் மிகப் பெரியது.* *"மாற்றான்" தோட்டத்து மல்லிகை மணக்கும். "மாற்றான்" எண்ணமும் அதுவாகத்தானே இருக்கும்...!!* *கோபம் கொள்வது எந்த மனிதனும் செய்யக்கூடிய மிக எளிதான

அமெரிக்காவில் இந்தியர்கள் ஆதிக்கம்.. தேடித்தேடி இந்தியர்களுக்கு சிஇஓ பதவி கொடுக்க என்ன காரணம்..?!

Image
  உலகின் மாபெரும் டெக் நிறுவனங்களாகத் திகழும் பல நிறுவனத்தில் தற்போது இந்தியர்கள் உயர் பதவி வகிக்கிறார்கள். கூகுள் நிறுவனத்தில் சுந்தர் பிச்சை-யில் துவங்கி தற்போது டிவிட்டர் பராக் அகர்வால் வரையில் பல நிறுவனங்களில் அடுத்தடுத்து திட்டமிட்ட வகையில் இந்தியர்களைச் சிஇஓ-வாக நியமிக்க என்ன காரணம்..?!   உண்மையில் இது திட்டமிட்டு தான் நியமிக்கப்படுகிறார்களா அல்லது பிற நிறுவனத்தில் ஏற்பட்ட வளர்ச்சியைப் பார்த்து வியந்து பிற நிறுவனங்களும் இந்தியர்களை நியமிக்கிறார்களா..? அமெரிக்க நிறுவனங்களுக்கு இந்தியர்கள் ஏன் ரொம்ப ஸ்பெஷல்..? இந்திய பெரும் தலைகள்.. சாந்தனு நாராயண் - அடோப் சுந்தர் பிச்சை - ஆல்பபெட் சத்யா நாதெல்லா - மைக்ரோசாப்ட் புனிட் ரென்ஜென் - டெலாய்ட் அரவிந்த் கிருஷ்ணா - ஐபிஎம் விவேக் சங்கரன் - ஆல்பர்ட்சன் வாஸ் நரசிம்மன் - நோவார்டிஸ் அஜய் பங்கா - மாஸ்டர்கார்டு இவான் மானுவல் மெனெஸ் - டியாஜியோ நிராஜ் எஸ். ஷா - வேஃபேர் சஞ்சய் மெஹ்ரோத்ரா - மைக்ரான் ஜார்ஜ் குரியன் - NetApp நிகேஷ் அரோரா - பாலோ ஆல்டோ நெட்வொர்க்ஸ் தினேஷ் சி. பாலிவால் - ஹர்மன் இன்டர்நேஷனல் இண்டஸ்ட்ரீஸ் சந்தீப் மாத்ரானி - WeWork அரவிந்த்

When something is free, You are the product

 Netflix doesn't cost Rs. 499, it costs you your time. Pepsi doesn't cost Rs. 25, it costs your health. Social media isn't free, it costs you your focus. There is always a hidden cost Remember the Golden Management quote : "When something is free, You are the product"

Six tech giants run by Indian origin CEOs

Image
 இந்திய வம்சாவளியைச் சேர்ந்த CEO's நடத்தப்படும் ஆறு தொழில்நுட்ப ஜாம்பவான் நிறுவனங்கள் 

Deep breathing improves immunity

Image
 ஆழ்ந்த சுவாசம் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது

இன்றைய சிந்தனை (30-11-2021)

  திருக்குறள் : பால்:பொருட்பால் இயல்:அமைச்சியல் அதிகாரம்:அமைச்சு குறள் எண்:631 குறள்: கருவியும் காலமும் செய்கையும் செய்யும் அருவினையும் மாண்டது அமைச்சு. பொருள் :ஒரு செயலைச் செய்ய ஏற்ற கருவி,காலம், செயல்வகை,செலவின் அருமை ஆகியவற்றை ஆராய்ந்து செய்பவனே அமைச்சன் ஆவான். பழமொழி : As the fool thing so, the bell clicks. பயந்தவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் இரண்டொழுக்க பண்புகள் : 1. உழாத நிலமும், இறைக்காத கிணறும், உழைக்காத உடலும் கெடும் இத்தவறை செய்ய மாட்டேன்.  2. இரக்கமில்லாத மனமும், இயற்கை அழிக்கும் நாடும் கெடும். எனவே இல்லாதவர்களுக்கு இரங்குவேன், இயற்கை வளம் ஒரு நாளும் அழிக்க மாட்டேன். பொன்மொழி : எதிலும் அளவுகடந்த பற்றுக் கொள்வதே எல்லாத் துன்பங்களுக்கும் காரணமாகும்.இன்ப துன்பங்களைக் கடந்த நிலையில் மட்டுமே உண்மையான ஆனந்ததை உணர முடியும்.______ பரம ஹம்சர் பொது அறிவு : 1. சுயமரியாதை இயக்கத்தைத் தமிழ்நாட்டில் ஏற்படுத்தியவர் யார்?  பெரியார் ஈ.வெ. ரா.  2. இந்தியாவில் இரும்புபப் பாலம் முதன் முதலில் எங்கு அமைக்கப்பட்டது?  லக்னோ. English words & meanings : Altar - a high table that is the center

அவசியம் கடைபிடிக்க வேண்டிய ஆரோக்கிய குறிப்புகள்!!

 1. பசிக்கும்போது மட்டும் சாப்பிடுங்கள். தாகமெடுத்தால் தண்ணீர்  குடியுங்கள். குளிர் பானங்களை தவிர்த்து விடுங்கள். 2. பசிக்கும் போது பயமில்லாமல் பிடித்த உணவை போதுமான அளவு சாப்பிடுங்கள். பசிக்கும் போது எந்த உணவு சாப்பிட்டாலும் அது இலகுவாக ஜீரணமாகிவிடும். உணவை நிதானமாக மென்று சாப்பிடுங்கள். டிவி பார்த்துக் கொண்டு சாப்பிடாதீர்கள். 3. தரையில் அமர்ந்து சாப்பிடுங்கள். உங்கள் கை விரல்களால் சாப்பிடுங்கள். கை இல்லாதவர்களுக்குத் தான் ஸ்பூன் தேவை. உங்கள் ஜீரணத்திற்கும் விரல்களுக்கும் தொடர்பு உள்ளது. 4. இயற்கை உணவு மற்றும் பழங்களை தேவையான அளவு எடுத்துக் கொள்ளுங்கள். பதப்படுத்தப்பட்ட உணவுகளையும், குளிர்சாதனப் பெட்டியில் வைத்த உணவுகளையும் தவிர்த்து விடுங்கள். விளம்பரம் செய்யப்படுவதை ஒருபோதும் வாங்காதீர்கள்.  5. பசிக்கும்போது மட்டுமே சாப்பிடுபவர்களுக்கு உடற்பயிற்சி தேவையில்ல.  6. தினமும் முடிந்த அளவு விளையாடுங்கள். விளையாட்டு சிறுவர்களுக்கு மட்டுமல்ல.  7. ஒரு நாளைக்கு 10 நிமிடமாவது தனிமையில் அமைதியாக  இருந்து சிந்தியுங்கள். உங்கள் ஆற்றல் வெளிப்படும். அவ்வப்போது  மனதுக்குள் சிறிது நேரம்  பிரார்த்தனை செ

Habits we need to break - உடைத்தெறிய வேண்டிய பழக்கங்கள்..!

  இளைஞர்கள் உடைத்தெறிய வேண்டிய சில பழக்கங்கள், செயல்பாடுகள் இருக்கின்றன 1. வலைதள உலாவல் நம்மில் பலருக்கும் இன்று விரல் நுனியில் இணைய வசதி இருப்பதால் மனதில் சிறு கேள்வி உதித்தால்கூட செய்யும் வேலையை அப்படியே போட்டுவிட்டு ‘தேடி ஆராய’ ஆரம்பித்துவிடுகிறோம். இவ்வகையான தேடல்கள் நேரத்தை விரயமாக்கி, நம் வேலையையும் பாதிக்கும். இதை தவிர்க்க, வேலை நேரத்தில் தோன்றும் கேள்விகளையெல்லாம் ஒரு நோட்பேடில் குறிப்பெடுத்து வைத்துக்கொண்டால், ஓய்வு நேரத்தில் இந்த ஆற்றல் நிறைந்த தேடலில் ஈடுபடலாம். 2. ஒரே நேரத்தில் பல வேலைகள் இது பெரிய திறமை எனக் கருதி நம்மில் பலரும் ஒரே நேரத்தில் இரண்டு வேலைகள் செய்வதுண்டு. ஆனால் அறிவியல் ஆராய்ச்சியின்படி 2 சதவிகித மக்களே இந்த மல்டி டாஸ்க்கிங்கில் சிறப்பாக செயல்படுவதாக கூறப்படுகிறது. மற்றவர்கள் ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என அநாவசிய சாகசங்களைக் குறைத்தால் சிறப்பாக செயல்பட முடியும். 3. மெசேஜ், ஈ-மெயில்களை கண்காணிப்பது இது ஒரு வகையான மயக்கமாகவே மாறிவிட்டது. இந்தப் பழக்கம் வேலையை மட்டுமல்ல மனநிலையையும் பாதிப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. 4. காரணம் தேடுதல் ஒரு வேலையை தொடர்ந

விருந்தோம்பலுக்கும் தகுதியானவர்கள்

  தந்தை ஒருவர் ஒரு பெரிய மாட்டை வெட்டி நெருப்பினில் வதக்கி, தன் மகளிடம் சொன்னார். "மகளே, எங்களுடன் சாப்பிட எங்கள் நண்பர்களையும் அண்டை வீட்டாரையும் அழைக்கவும் ... எல்லோரும் சாப்பிடுவோம் என்றார். அவருடைய மகள் தெருவுக்கு வந்து கத்த ஆரம்பித்தாள். "தயவுசெய்து எங்கள் அப்பாவின் வீட்டில் எரியும் தீயை அணைக்க எங்களுக்கு உதவுங்கள்!". சில நிமிடங்களுக்குப் பிறகு, ஒரு சில மக்கள் வெளியே வந்தனர், மீதமுள்ளவர்கள் உதவிக்கான கூக்குரலைக் கேட்காதது போல் செயல்பட்டனர். வந்தவர்கள் நள்ளிரவு வரை நன்றாக சாப்பிட்டு குடித்தார்கள். திகைத்த தந்தை! தன் மகளிடம் திரும்பி, அவளிடம் சொன்னார். "வந்த மக்களை எனக்கு தெரியாது, இதுவரை அவர்களைப் பார்த்ததில்லை, எனவே எங்களுடைய நண்பர்கள் மற்றும் அயலவர்கள் எங்கே?". மகள் சொன்னாள். "தங்கள் வீடுகளில் இருந்து வெளியே வந்தவர்கள் எங்கள் வீட்டில் எரிவதாக நினைத்த தீயை அணைப்பதர்க்கே அன்றி விருந்து உண்ண அல்ல. இவர்களே எங்கள் தாராள மனப்பான்மைக்கும் விருந்தோம்பலுக்கும் தகுதியானவர்கள். " முடிவுரை: நீங்கள், உங்கள் வாழ்க்கையில் துன்பப்படுகிறீர்கள் என்று தெரிந்தும்,

பெற்றோர் பெற்றோராக இருங்கள்.

  பெற்றோர் பெற்றோராக இருங்கள். திரு. நாராயண மூர்த்தி INFOSYS அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரை. நாம் நமது தற்காலக் குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்கத் தவறி விட்டோமா? திரு. நாராயணமூர்த்தி அவர்களின் ஆங்கிலப் பதிவின் தமிழாக்கம் இது. அவர் தனது அண்டை வீட்டுக்காரர் தன்னுடன் மன வருத்தத்தோடு பகிர்ந்து கொண்ட விஷயத்தை நமக்குப் பதிவு செய்கிறார். பணி முடிந்து வெகு தொலைவு பயணம் செய்து களைப்புடன் திரும்பிய நான் என் மனைவியை கடும் காய்ச்சலுடன் படுக்கையில் படுத்திருக்கக் கண்டேன். எனக்காக அந்த ஜுரத்திலும் சமையல் செய்து உணவை ட்ரேயில் வைத்து மூடி வைத்திருந்தாள். நான் வழக்கமாக உண்ணும் எல்லாவற்றையும் சமைத்து வைத்திருந்தாள். அவளுக்கு தான் என் மேல் எவ்வளவு கரிசனம். உடல் நலம் சரியில்லாத நேரத்தில் கூட எனக்காக சமைத்து வைத்திருக்கிறாளே. சாப்பிட அமர்ந்த பின் தான் ஏதோ குறைவதை உணர்ந்தேன். டிவி பார்த்துக் கொண்டிருந்த என் வளர்ந்த மகளிடம் செல்லம் என் மாத்திரையையும் தண்ணீரும் எடுத்துக் கொண்டு வா என்று கூறினேன். அவளை நான் தொந்தரவு செய்ததை விரும்பாமல் கண்ணை உருட்டி அவள் அதிருப்தியைத் தெரிவித்து விட்டு நான் கேட்டதைக் க

எதுவாகவேண்டுமோ அதுவாக மாறிவிடு

  எல்லோரும் மற்றவர்களைப் பார்த்து உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன? என்று கேட்கத் துடிப்பார்கள். அது மட்டுமல்ல பலர், வெற்றி பெற்றவர்களைப் பார்த்து, அவரின் வெற்றியின் ரகசியம் என்னவாக இருக்கும்? யாரோ பலே பார்ட்டியின் சப்போர்ட் இருக்கும் போல… இல்லேன்னா எப்படி வெற்றியை இவ்வளவு எளிதில் அடைந்து இருக்க முடியும்’ என்று தலையைப் பிய்த்துக் கொள்வதும் உண்டு. இதோ அந்த ரகசியம் உங்களுக்கு மட்டும்!! ஒரு மகாராஜா தன் அரண்மனையில் மிகச் சிறந்த சேவல் ஓவியத்தை வைக்க நினைத்தார். மன்னனின் ஆசை காட்டுத் தீ போல் எல்லா ஊரிலும் பரவியது. ஏத்தனையோ ஓவியங்கள் வந்தும் அவற்றில் மன்னனுக்கு முழுத் திருப்தி ஏற்படவில்லை. மற்ற நாடுகளில் உள்ள ஓவியர்களுக்காக ஒரு போட்டி வைத்தார் மன்னர். அவரது ஆசை போல், மற்ற நாட்டு ஓவியர்கள் வரைந்த படங்கள் மன்னரின் பார்வைக்காக வைக்கப்பட்டன. மன்னர் தான் குழந்தையாக இருந்த போது தனக்கு ஓவியம் கற்றுக் கொடுத்த அந்த வயதான ஓவிய ஆசிரியரை இப்போட்டியின் நீதிபதியாக நியமித்தார். எல்லா ஓவியங்களையும் பார்த்த அந்த வயதான ஆசிரியர் மீண்டும் ஒருமுறை ஓவியங்களைப் பார்த்தார். கன்னத்தைத் தடவிய படியே நடந்த அவரிடம், மன்னர்

உங்கள் வீட்டில் பணம் செழிக்க..

  க டந்த சில மாதங்களாக உலகளவில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி எல்லோரையும் பயமுறுத்தி வருகிறது. இன்று இருக்கும் வேலை, நாளை இருக்குமா என்ற சந்தேகத்திலேயே பலர் நாட்களை கடத்துகின்றனர். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் கை கொடுப்பது சேமிப்பு பழக்கம்தான்! சேமிப்பு என்பது பணம் மட்டுமல்ல.. அது பல வழிகளிலும் இருக்கலாம். இதோ, நிரூபிக்கப்பட்ட 25 ரகசியங்கள்.. 1. வங்கிகளில் இருக்கும் பணம்.. சாதாரணமாக சேமிப்பு என்றதும், வங்கியில் ஒரு சேமிப்பு கணக்கு தொடங்கி அதில் பணம் போட்டு வருவதுதான் நினைவுக்கு வரும். ஆனால், சேமிக்கும் பணம் முழுவதும் சேமிப்புக் கணக்கிலேயே இருந்தால் அது எந்தவிதமான பயனையும் தராது. அவசரத் தேவைக்கு எவ்வளவு பணம் தேவையோ அதை மட்டும் சேமிப்புக் கணக்கில் வைத்துவிட்டு, மீதமுள்ள பணத்தை பிக்சட் டெபாசிட்டில் போடுவதுதான் உத்தமமான காரியம். அது, அதிக வட்டி மற்றும் வருமானத்தைப் பெற்றுத் தருவதால் பணம் பெருக வழி வகுக்கும். பல வங்கிகளில் ‘ஃப்ளெக்ஸி டெபாசிட்’ என்று உள்ளது. அதில் போட்டு வைத்தால் அவர்களே நிரந்தர வைப்புக் கணக்கிற்கு மாற்றி விடுவார்கள். 2. ரெகரிங் டெபாசிட் நல்ல சாய்ஸ்! மாதாமாதம் ஒரு சிறிய தொகைய