Posts

சந்தைகளில் வர்த்தகர்கள் தவிர்க்க வேண்டிய 5 விலையுயர்ந்த தவறுகள்

  டிரேட் வைஸ்: சமீபத்திய SEBI ஆய்வு, டெரிவேட்டிவ் பிரிவில் தனிநபர் வர்த்தகர்களின் நடத்தையை ஆய்வு செய்ததில், 10 தனிநபர் வர்த்தகர்களில் 9 பேர் FY26-லும் தொடர்ந்து பணத்தை இழப்பது தெரியவந்துள்ளது. சந்தைகளில் வர்த்தகம் செய்யும்போது தவறுகளைத் தவிர்ப்பது மிகவும் முக்கியம். குறிப்பாக, அதிக நம்பிக்கை, இழப்பை ஈடுகட்டும் அவசரம், பழிவாங்கும் வர்த்தகம், உணர்ச்சிவசப்பட்ட முடிவுகள் போன்றவை வர்த்தகர்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்துகின்றன. 1. காலை 9:15 மணி அவசரம் — “The 9:15 Reflex” சந்தை திறந்த முதல் 15 நிமிடங்களில் வர்த்தகர்கள் அதிகமாக செயல்படுவது வழக்கமான ஒன்றாகிவிட்டது. சந்தை திறந்தவுடன் ஏற்படும் விலை மாற்றங்களைப் பார்த்து உடனடியாக வர்த்தகம் செய்வது ஆபத்தானது. சிலர் சந்தை தொடங்கியவுடன் கிடைக்கும் வாய்ப்பை தவறவிடக்கூடாது என்று நினைத்து அவசரமாக வர்த்தகத்தில் ஈடுபடுகின்றனர். ஆனால் சந்தையின் ஆரம்ப நேரங்களில் விலை மாற்றங்கள் மிகவும் வேகமாகவும் எதிர்பாராத வகையிலும் இருக்கலாம். எனவே, ஆரம்பக் கட்ட விலை இயக்கத்தைப் பார்த்து உடனடியாக முடிவெடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. 2. முதல் வெற்றிக்குப் பிறக...

காலத்தைக் கொண்டாடுங்கள்

  ஒரு ஊரில் ஒரு தொழிலதிபர் இருந்தார். ஒருநாள் காலையில் அவரது வங்கி மேலாளரிடமிருந்து ஒரு போன் வந்தது. “சார் உங்க கணக்கில யாரோ ஒருவர் 86,400 ரூபாய் டெபாஸிட் போட்டிருக்கிறார். என்ன பண்ணலாம் என்றார். அவர் யார் என்று தெரியுமா?’என்று கேட்டால் தெரியாது’ என்றார் வங்கி மேலாளர். ஏகப்பட்ட மகிழ்ச்சி. ஒரு ரூபாயா? இரண்டு ரூபாயா? 86,400 ரூபாய். சும்மாவா? தலைகால் புரியவில்லை மனிதருக்கு. இரவு மறுபடியும் தொலைபேசி அலறுகிறது. “சார் அந்த 86,400 ரூபாயை யாரோ எடுத்துட்டாங்க () சார்” என்றார் வங்கி மேலாளர். “அதெப்படி முடியும்” என்று இவர் அலற பெரிய ஆர்ப்பாட்டமே நடந்துவிட்டது. 86,400 டெபாஸிட் செய்தபோது யார் செய்தது என கவலைப்படாதவர் பணம் போனதும் கவலையோடு அலறுகிறார். நாள்தோறும் பெயர் தெரியாத ஒருவர் நம் கணக்கில் 86,400 டெபாஸிட் செய்து இரவே அதை எடுக்கவும் செய்தால் வருத்தம் வராதா? என்ன அந்த 86,400 ரூபாய்…? ஒரு நாளைக்கு இருபத்து நாலு மணிநேரம். ஒரு மணிக்கு அறுபது நிமிடம். ஒரு நிமிடத்திற்கு அறுபது விநாடிகள். அப்படியானால் 86,400ரூபாய். அதாவது ஒவ்வொரு நாளும் நாம் பயன்படுத்திக் கொள்ள 86,400 விநாடிகளைக் கடவுள் நமக்காக டெ...

makkal tv image

Image
 

விதையிலிருந்து விருட்சம்

Image
 

ரசவாதி - The Alchemist (Tamil) : பாலோ கொயலோ

Image
  8.5 கோடிப் பிரதிகள் விற்றுச்சாதனை படைத்துள்ள நூல் ஆன்மாவிற்குப் பரவசமூட்டுகின்ற ஞானத்தை உள்ளடக்கிய எளிய, சக்திவாய்ந்த இப்புத்தகம், ஆன்டலூசியா பகுதியைச் சேர்ந்த, சான்டியாகோ என்ற செம்மறியாட்டு இடையன் ஒருவனைப் பற்றியது. அவன் ஸ்பெயினில் உள்ள தன்னுடைய சொந்த கிராமத்திலிருந்து புறப்பட்டு, பிரமிடுகளில் புதைத்து வைக்கப்பட்டுள்ள ஒரு பொக்கிஷத்தைத் தேடி எகிப்தியப் பாலைவனத்திற்குச் செல்லுகிறான். வழியில் அவன் ஒரு குறவர்குலப் பெண்ணையும், தன்னை br>ஓர் அரசர் என்று கூறிக் கொள்ளுகின்ற br>ஓர் ஆணையும், ஒரு ரசவாதியையும் சந்திக்கிறான். அவர்கள் அனைவரும், அவன் தேடிக் கொண்டிருக்கின்றன பொக்கிஷத்திற்கு இட்டுச் செல்லக்கூடிய பாதையை அவனுக்குக் காட்டுகின்றனர். அது என்ன பொக்கிஷம் என்பதோ, வழியில் எதிர்ப்படும் முட்டுக்கட்டைகளை சான்டியாகோவால் சமாளிக்க முடியுமா என்பதோ அவர்கள் யாருக்கும் தெரியாது. ஆனால், லௌகிகப் பொருட்களைத் தேடுவதில் தொடங்குகின்ற ஒரு br>பயணம், தனக்குள் இருக்கும் பொக்கிஷத்தைக் கண்டறிகின்ற ஒன்றாக மாறுகிறது. வசீகரமான, உணர்வுகளைத் தட்டியெழுப்புகின்ற, மனிதாபிமானத்தைப் போற்றுகின்ற இக்கதை, நம்முடைய...

கல்வியை சமூக அடிப்படையாக செயல்படுத்துவது முட்டாள்தனம்

Image
 இன்றய  உலகில்  ஒவ்வொருவரின்  வெற்றி, அந்தஸ்துக்கு  கல்வியே அளவுகோலாகும். கடந்த 50+ ஆண்டுகளாக இந்தியாவில் அல்லது உலகம் முழுவதும் பிரிட்டிஷ் காலனித்துவ காலத்திற்குப் பின் - கல்வி சமூகத்தில் ஒரு முக்கிய இடத்தை பிடித்துள்ளது  கல்வி அல்லது கல்வியறிவு இல்லாமல், இந்த சமூகத்தில் வாழ்வது மற்றும் பொருளாதார ரீதியாக கண்ணியமான வாழ்க்கையை நடத்துவது மிகவும் கடினம். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை, கல்வியறிவு இல்லாத மக்கள், சம்பாதித்து, திருமணம் செய்து, குழந்தைகளை வளர்த்து, தங்கள் வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்தனர். படிக்காத மனிதன் பழைய நாட்களில் வாழ நிறைய வாய்ப்புகள் இருந்தன. இப்போதெல்லாம் கல்வி இல்லாமல் வாழ முடியாது. நாம் கல்வியால் கட்டுப்படுத்தப்பட்ட ஒரு மோசமான சமூக காலகட்டத்தில் வாழ்கிறோம், மேலும் ஒவ்வொருவரும் கல்வி கற்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். வேட்டைக்காரர்கள் அங்கீகரிக்கப்பட்ட காலங்கள் இருந்தன, பின்னர் விவசாயிகள் அங்கீகரிக்கப்பட்டனர், பின்னர் வீரர்கள் அங்கீகரிக்கப்பட்டனர், பின்னர் கவிஞர்கள், ஓவியர்கள், சிற்பங்கள் அங்கீகரிக்கப்பட்டனர். சுதந்திரப் போராட்ட வீரர்...

மனம் எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதற்கு ஒரு சின்ன உதாரணம்..

 ஒரு பெண், லண்டன் நகரத்தில் வாழ்பவர். அங்குள்ள கால நிலைக்கு ரோஜா மலர்கள் நன்கு வளரும். அவை எல்லோருக்கும் பிடிக்கும். ஆனால், இந்த பெண்ணிற்கு ரோஜா மலர்கள் என்றாலே அலர்ஜி. ஒரு பூ அருகிலிருந்தாலே, அவர் கண்களிலிருந்து கண்ணீர் வரும், தும்மல் வரும். ரொம்பவும் கஷ்டப்படுவார். அதனால் ரோஜா மலர்கள் அருகில் செல்லாமல் பார்த்துக் கொள்வார். இந்த சூழ்நிலையில் ஒருநாள், அவருடைய ஆபீசில் ஒரு மீட்டிங். கலந்து கொள்ளப் போனார். அந்த மீட்டிங் அறைக்குள் நுழைந்தவுடன் அவருக்கு ஒரே அதிர்ச்சி. ஒரு பெரிய டேபிளில் நூற்றுக்கணக்கான ரோஜா மலர்களை வைத்து அலங்கரித்திருந்தார்கள். ஒரு பூ அருகில் இருந்தாலே நமக்கு அலர்ஜியாச்சே, இவ்வளவு பூக்கள் மத்தியில் நாம் எப்படி மீட்டிங்கை அட்டென்ட் செய்யப் போகிறோம்’ என்று பயந்தார். ஆனால் வேறு வழியில்லாமல், அவருக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் சென்று அமர்ந்தார். பூக்களைப் பார்த்ததுமே அவருக்கு கண்களில் இருந்து நீர் வந்தது, தும்மலும் வந்தது, முகமெல்லாம் சிவந்து விட்டது. மீட்டிங் இன்னும் ஆரம்பிக்கப் படவில்லை, இந்த சூழ்நிலையில், பின்னாலிருந்து ஒருவர் எழுந்து வெளியில் செல்கிறபோது “இந்த பூக்களைப் பா...