Posts

Showing posts from February, 2022

கதையல்ல நிஜம்

  பொதுவாக   நீதிமன்றங்களில்   யாரை   பெயர்   சொல்லி   அழைக்கிறார்களோ   அவர்கள்தான்   உள்ளே   போவார்கள் . ஆனால்   அன்றைக்கோ   வாய்தாவுக்கு   வந்திருந்த   அனைவருமே   கும்பலாக   நீதிமன்றத்திற்குள் ‌  குழுமியிருந்தார்கள் . நானும்   ஒரு   வாய்தாவுக்கு   ஆஜராகத்தான்   போயிருந்தேன் . உள்ளே   கூட்டத்தோடு   கூட்டமாக   எட்டிப்பார்த்தேன் . இது   சில   வருடங்களுக்கு   முன்னால்   நடந்த   சம்பவம் . அதாவது   மதுரையில்   ஒரு   பெண்ணை   ஒரு   இளைஞன்   கேலி   பண்ணுகிறான் . அந்தப்   பெண்ணின்   அக்காள்   மாப்பிள்ளை   அந்தப்   பையனை   கண்டிக்கிறார் . பையனின்   மனசில்   வன்மம்   குடியேறி   பழிவாங்கும்   வெறியாக   மாறுகிறது . தன்னைக்   கண்டித்தவரின்   இரண்டு   வயசு   பெண்   குழந்தையை   கடத்துகிறான் . மதுரையிலிருந்து   திருநெல்வேலிக்கு   குழந்தையுடன்   வந்து   ஊர்   சுற்றுகிறான் . குழந்தை   அழத்   தொடங்குகிறது . ஒரு ‌ பெரிய   யானைப்   பொம்மையை   வாங்கிக்   கொடுக்கிறான் . ஆனாலும்   குழந்தையின்   அழுகை   நிற்கவில்லை . நகரத்தை   விட்டு   தனியே   இருக்கும்   ஒரு   கோயிலுக்குப்   போய்   சேரும்போது   சாயங்காலமாகிவி

மன உறுதியை அதிகப்படுத்த… பயத்தினுள் பாயுங்கள, வலியைக் கேளுங்கள்

Image
  பயத்தினுள் பாயுங்கள, வலியைக் கேளுங்கள். உங்களுக்கு நினைவிருக்கிறதா? உடற்பயிற்சி செய்ய துவங்கிய இரண்டாவது நாள் நமது உடலில் பெரும்பாலான இடங்களில் வலியை அனுபவித்திருப்போம். அந்த வலி ஊசியை வைத்து குத்துவது போன்ற அல்லது எரியும் நெருப்பை தொடுவது போன்றோ தீவிரமான வலி அல்ல ஆனால் அந்த வலி நம்மை மீண்டும் உடற்பயிற்சி செய்ய விடாமல் தடுக்கும் வல்லமை பெற்றது. ஏனென்றால், அடிப்படையாகவே நமது மூளை எப்பொழுதும் நம்மை வலியிலிருந்து காப்பற்றவே நினைக்கும். இதன் காரணமாக தான் பெரும்பாலான நபர்கள் முதல் 5 நாட்களில் உடற்பயிற்சி கூடத்திற்கு செல்வதை நிறுத்தி விடுகின்றனர். சிலர் மட்டுமே அந்த வலியுடன் தொடர்கின்றனர். இதற்கு காரணம் நாம் அனுபவிக்கும் வலிகளே நம்மை வலிமையாக்கும் என்பதை அவர்கள் அறிந்திருப்பதே. இதை அறிந்திருப்பதே மிக பெரும் வித்தியாசத்தை ஏற்படுத்துகின்றது. வலியுடன் தொடரும் பொழுது, சில காலம் கழிந்த பின்னர் அந்த வலி வலியாக அல்லாமல் ஒரு வித சுக அனுபவத்தைக் கொடுக்கும். உடற்பயிற்சியினால் வரும் வலிகள் நம்மை மேலும் உறுதி படைத்தவனாக மாற்றுகிறது. மனதின் வலிமையும் இதே போல் தான் வேலை செய்கிறது.  ஒரு விடயத்தைப் பற்றி

குழந்தைகளின் எதிர்காலத்தை கட்டமைக்கும் ‘கோடிங்’

Image
  சமீபகாலமாக பெற்றோர் மத்தியில் அதிகம் பேசப்படும், விவாதிக்கப்படும் தலைப்புகளில் ‘கோடிங்' தலைப்பும் ஒன்று. இன்று நிறைய குழந்தைகள், பள்ளி கல்வியோடு சேர்த்து கோடிங் கல்வியும் கற்கிறார்கள். அது அவசியமான ஒன்றா?, அது குழந்தைகளின் வாழ்வில் எத்தகைய மாற்றத்தை உண்டாக்கும்... போன்ற பல கேள்விகளுக்கு, பதிலளிக்கிறார் கல்பனா சேட்டு. சென்னை அயனாவரம் பகுதியை சேர்ந்த வரான இவர், கடந்த 5 வருடங்களாக ஏழை குழந்தைகளுக்கு இலவச கோடிங் பயிற்சி வழங்கி வருகிறார். அவர் கோடிங் பற்றி பல தகவல்களை பகிர்ந்து கொள்கிறார். குழந்தைகளுக்கு ‘கோடிங்’ கற்றுக்கொடுக்கும் மோகம் எல்லா பெற்றோர்கள் மத்தியிலும் இருக்கிறது. இது நல்லதா? நல்லதுதான். ஓவியப்பயிற்சி, நடனப்பயிற்சி, கராத்தே பயிற்சிகளை போல குழந்தைகளின் திறன் வளர்க்கும் பயிற்சி பட்டியலில் நவீன அப்டேட்டாக கோடிங் பயிற்சி இணைந்திருக்கிறது. இது மற்ற பயிற்சிகளைவிட சிறப்பானது. எந்த வயதில் கோடிங் கற்றுக்கொள்வது சிறந்தது? 6 வயதில் இருந்தே, கோடிங் கற்கலாம். இருப்பினும் 8 வயதிற்கு பிறகான கோடிங் பயிற்சி, சிறப்பானதாக இருக்கும். ஏனெனில் அப்போதுதான் குழந்தைகளிடத்தில் புரிந்து கொள்ளும் த