Posts

Showing posts from 2022

மனம் எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதற்கு ஒரு சின்ன உதாரணம்..

 ஒரு பெண், லண்டன் நகரத்தில் வாழ்பவர். அங்குள்ள கால நிலைக்கு ரோஜா மலர்கள் நன்கு வளரும். அவை எல்லோருக்கும் பிடிக்கும். ஆனால், இந்த பெண்ணிற்கு ரோஜா மலர்கள் என்றாலே அலர்ஜி. ஒரு பூ அருகிலிருந்தாலே, அவர் கண்களிலிருந்து கண்ணீர் வரும், தும்மல் வரும். ரொம்பவும் கஷ்டப்படுவார். அதனால் ரோஜா மலர்கள் அருகில் செல்லாமல் பார்த்துக் கொள்வார். இந்த சூழ்நிலையில் ஒருநாள், அவருடைய ஆபீசில் ஒரு மீட்டிங். கலந்து கொள்ளப் போனார். அந்த மீட்டிங் அறைக்குள் நுழைந்தவுடன் அவருக்கு ஒரே அதிர்ச்சி. ஒரு பெரிய டேபிளில் நூற்றுக்கணக்கான ரோஜா மலர்களை வைத்து அலங்கரித்திருந்தார்கள். ஒரு பூ அருகில் இருந்தாலே நமக்கு அலர்ஜியாச்சே, இவ்வளவு பூக்கள் மத்தியில் நாம் எப்படி மீட்டிங்கை அட்டென்ட் செய்யப் போகிறோம்’ என்று பயந்தார். ஆனால் வேறு வழியில்லாமல், அவருக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் சென்று அமர்ந்தார். பூக்களைப் பார்த்ததுமே அவருக்கு கண்களில் இருந்து நீர் வந்தது, தும்மலும் வந்தது, முகமெல்லாம் சிவந்து விட்டது. மீட்டிங் இன்னும் ஆரம்பிக்கப் படவில்லை, இந்த சூழ்நிலையில், பின்னாலிருந்து ஒருவர் எழுந்து வெளியில் செல்கிறபோது “இந்த பூக்களைப் பாருங்

வல்லுனர் டிப்ஸ் ஒருவர் வாழ்க்கையை வீணடித்துக் கொண்டிருக்கிறார் என்பதற்கான 12 அறிகுறிகள்!

 1. வீட்டிலும் வேலையிலும் ஒழுங்கின்மை வீட்டில் எந்தெந்த வேலைகளில் முதலில் முடிப்பது, எதற்கு முன்னுரிமை அளிப்பது என்று தெரியாமல் நினைத்ததை நினைத்த நேரத்தில் செய்வது, வீட்டில் உள்ள அறைகளில் எந்தப் பொருளையும் இருந்த இடத்தில் வைக்காமல் ஏனோ தானோவென கிடாசிவிட்டு, பின்னர் தேவைப்படும் பொருட்களைத் தேட அதிக நேரம் எடுத்துக்கொள்வது எல்லாமே ஒழுங்கின்மையின் கீழ்தான் வரும். அலுவலகத்திலும் அன்றாட வேலைகளை சரியாக திட்டமிடாமல் செய்வதும், பின்னர் குறிப்பிட்ட வேலைகளை செய்து முடிக்க முடியாமல் திணறுவதும் கூட ‘Disorganized’ என்று சொல்லக் கூடிய ஒழுங்கின்மைதான். இந்தப் பழக்கம் அதிகரிக்கத் தொடங்குவதும் நம் வாழ்க்கையை வீணடித்துக் கொண்டிருக்கிறோம் என்பதற்கான முக்கிய அறிகுறியே. 2. நேரத்தை உண்ணும் விரல்! கையில் மொபைலை வைத்துக் கொண்டு எந்த நேரமும் சமூக வலைதளங்களில் விரல்களால் ஸ்க்ரால் செய்வது வருவது நம்மில் பலரிடமும் நம்மை அறியாமல் புகுந்துவிட்ட அடிக்‌ஷன் என்றே சொல்லலாம். ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டா போன்ற சமூக வலைதளங்களில் போஸ்டுகளை அடிக்கடி பார்ப்பது ஒரு பக்கம் என்றால், கிடைக்கிற சில நிமிட இடைவெளிகளில் ஷார்ட்ஸ், ர

சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல்

 குறள் எண் – 645 பால் – பொருட்பால் இயல் – அமைச்சியல் அதிகாரம் – சொல்வன்மை சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து. மு. வரதராசன் உரை : வேறோரு சொல் அந்தச் சொல்லை வெல்லும் சொல்லாக இல்லாதிருந்தால் அறிந்த பிறகே சொல்லக்கருதியதைச் சொல்லவேண்டும். சாலமன் பாப்பையா உரை : தாம் சொல்லும் சொல்லை வெல்ல, வேறொரு சொல் இல்லை என்பதை அறிந்து சொல்லுக. கலைஞர் உரை : இந்தச் சொல்லை இன்னொரு சொல் வெல்லாது என்று உணர்ந்த பிறகே அந்தச் சொல்லைப் பயன்படுத்த வேண்டும்

ஆள் பார்த்து பேசணும்!

 ஒரு அறிஞருக்கு இலக்கண சுத்தமாகப் பேசுபவர்களை மிகவும் பிடிக்கும். மாற்றிப் பேசுபவர்களைக் கண்டால் கோபப்படுவார். ஒருநாள் இரவில், அவர் ஒரு கிணற்றுக்குள் விழுந்து விட்டார். உள்ளே தண்ணீர் இல்லை. அடிப்பாகத்தில் மணல் கிடந்ததால், காயமில்லாமல் தப்பி விட்டார். ஆனால், வெளியே வரும் உபாயம் தெரியவில்லை. ""யாராவது என்னைக் காப்பாற்றுங்கள்,'' என்று ஓலக்குரல் இட்டார். இதை அவ்வழியாகச் சென்ற ஒருவன் இதைக் கேட்டான். கிணற்றுக்குள் எட்டிப்பார்த்தான். அவனால், அவரை தனியாக மீட்க முடியாதென புரிந்து விட்டது. ""ஐயா! சற்றுப் பொறுங்கள். ஊருக்குள் சென்று உதவிக்கு ஆட்களைக் கூட்டி வருகிறேன். இருளாக வேறு இருக்கிறது. விளக்கிற்கும் ஏற்பாடு செய்கிறேன்,'' என்றான். ஆபத்தில் கிடந்தவர், ""நன்றியப்பா! விரைந்து வா,'' என்று சொல்லியிருந்தால் பரவாயில்லை. யாரிடம் என்ன சொல்வது என்று இல்லாமல், ""தம்பி! நீ பேசியதில் இலக்கணப்பிழை இருக்கிறது. "ஆட்களைக் கூட்டி வருகிறேன்' என்பது நிகழ்காலம். "கூட்டி வருவேன்' என்றால் தான் எதிர்காலம். எதிர்காலத்தில் நடக்கப் போவதை

பெரிய பணக்காரர்களால் கூட காசு கொடுத்து வாங்க முடியாதது என்ன/எது?

 இளமை. உலகின் மிகப்பெரிய பணக்காரரான ராக்பெல்லர் தினமும் காலையில் காலாற நடைப்பயிற்சி செய்வது வழக்கம். அப்போது, ஒரு இளைஞன் விரக்தியுடன் நடப்பதை கவனித்தார். என்னவென்று விசாரித்தபோது, அவனுக்கு வாழ்க்கையில் பல்வேறு பிரச்சனைகள். அவன் தற்கொலை செய்துக்கொள்வதற்காக செல்வதாக கூறினான். அவர் அவனை பல்வேறு விதங்களில் தேற்ற முயற்சித்தார். அவன் கூறினான். "உங்களுக்கென்ன, நீங்கள் உலகின் பணக்காரர். உங்களுக்கு எல்லாம் எளிதில் கிடைக்கும். உங்களுடைய எல்லா சொத்துக்களையும் எனக்குத் தர முடியுமா ? " என்றான். "தாராளமாக தருகிறேன். ஆனால், அதற்கு பதிலாக, எனக்கு நீ ஒன்று மட்டும் கொடு. உனது இளமை. உன்னுடைய இளமையை எனக்கு நீ தந்துவிட்டால், நான் மறுபடி உழைத்து, இத்தகைய சாம்ராஜ்யத்தை உருவாக்க முடியும்." என்றார் ராக்பெல்லர். இளைஞன், தனது பிரச்சனையை சமாளிக்கும் தன்னம்பிக்கையை அடைந்து, உழைத்து வாழ்வதென்று முடிவெடுத்தான். உலகத்தின் மிகப்பெரிய பணக்காரரும், கடந்த இளமையை மறுபடி பெற இயலாது. வாழ்க்கையில் மறுபடி இளமை திரும்பி வராது. அந்தந்த காலகட்டங்களை அப்போதே பயன்படுத்திக் கொள்ள வேண்டும். காலம் பொன் போன்றது.

குழந்தைகளை வளர்ப்பது எப்படி

 ஒரு இளைஞனும் ஒரு வயதான ஓய்வு பெற்ற ஆசிரியரும் ஆளுக்கொரு செடி வாங்குகிறார்கள்.அந்த இளைஞன் அந்த செடியை நன்றாக வளர்க்க வேண்டும் என நினைக்கிறான். தினமும் தண்ணீர் விடுகிறான். இணையதளங்களில் தேடி நல்ல சிறந்த உரங்களை வாங்கி வைத்து கண்ணும் கருத்துமாக வளர்க்கிறான். அந்த ஆசிரியரோ அந்த செடிக்கு தினமும் தண்ணீர் விடுகிறார். மாட்டு சாணத்தை எப்போதோ ஒரு சில நேரம் மட்டும் உரமாக இடுகிறார்.இளைஞன் வளர்த்த செடி நன்றாக செழித்து வளர்ந்து புஸு புஸுவென்றுக் காணப்படுகிறது. ஆசிரியரின் செடி இரண்டு மூன்று கிளைகளுடன் சாதரணமாக உள்ளது. அந்த இளைஞன் அடிக்கடி அந்த ஆசிரியரிடம், "என்ன பெருசு இப்படி இருக்கு உன் செடி.. என்னோடத பாரு. எப்படி புஸு புஸுன்னு இருக்கு. நல்ல உரம் வைக்க மாட்டியா?" என்று கேட்கிறான்.அதற்கு ஆசிரியர் கூறுகிறார், "உள்ளது போதும் ப்பா". திடீரென்று ஒருநாள் கஜா புயல் போன்றதொரு கடுமையான புயல் வீசுகிறது. மறுநாள் இளைஞனின் செடி வேருடன் வீழ்ந்து கிடக்க ஆசிரியரின் செடி நன்றாக நிற்கிறது. ஆசிரியரிடம் செல்கிறான் இளைஞன். "நான் நல்ல உரமெல்லாம் வச்சு என் செடிய நல்லா பாத்துக்கிட்டேன். ஆனாலும் என்

கண்ணனின் மனதில் யார் இருக்கிறார்?

 அபிமன்யுவின் மனைவி உத்தரைக்கு முனிவர் ஒருவர், மாயக்கண்ணாடி ஒன்றை பரிசாக வழங்கினார். அந்தக் கண்ணாடி முன் ஒருவர் வந்து நின்றால், அவர் மனதில் யார் இருக்கிறாரோ, அவர் அதில் தெரிவார். உத்தரையே முதலில் அதை சோதனை செய்தாள். திருமணமானதில் இருந்து, அவளது அன்புக்கணவன் அபிமன்யுவைத்தவிர அவளது உள்ளத்தில் வேறு யாருமில்லை. எனவே, அபிமன்யு கண்ணாடியில் தெரிந்தான். அபிமன்யுவும், மனைவி மீது தீராக்காதல் கொண்டிருந்தான். அவனை கண்ணாடி முன்னால் நிறுத்தினர். அப்போது, உத்தரை அதில் தெரிந்தாள். அந்த சமயத்தில் மாயக்கண்ணன் அங்கு வந்தார். அவர் மனசுக்குள் யார் இருக்கிறார் என்று பார்க்க எல்லாருக்கும் ஆசை. அர்ஜுனன் என்னை விட்டால் யார் இருப்பார்? எனச்சொல்ல, போடா! அவன் மனதில் நான் தான் இருப்பேன், என பீமன் வம்புக்குப்போக, இருவருமே இல்லை! நான் தான் இருப்பேன், என தர்மர் பிடிவாதமாய்ச்சொல்ல, ஏன்... அவனது தந்தை வசுதேவனின் தங்கையான நானல்லவா இருப்பேன், என மனதுக்குள் நினைத்துக் கொண்டாளாம் குந்தி. எல்லாரும் ஆர்வமாயினர். கண்ணனைக் கையைப் பிடித்து இழுக்காத குறையாக கண்ணாடி முன் கொண்டு வந்து நிறுத்தினர். என்ன ஆச்சரியம்! யாருக்கு கண்ணனை அ

இரண்டு வகையான ஆசிரியர்கள்

1. சிலர் நடைமுறை அறிவை வழங்குகிறார்கள். 2. இன்னும் சிலர் ஒழுக்கம் மற்றும் நெறிமுறைகளை வழங்குகிறார்கள் சுருக்கம் பணியிடத்தில், இளைஞர்கள் தங்கள் விஸ்வாமித்திரர்களை சந்திக்கிறார்கள், வழிகாட்டிகள் மற்றும் பயிற்சியாளர்கள், பணியிடத்தில் சிறப்பாக செயல்பட , நடைமுறை அறிவை வழங்கி நம் முன்னேற்றத்திற்கு உதவுபவர்கள். ராமாயணத்தில், ராமருக்கு வசிஷ்டர் மற்றும் விஸ்வாமித்ரா என்ற இரு ஆசிரியர்களால் கல்வி கற்பிக்கப்படுகிறது. இந்த இரண்டு ஆசிரியர்களும் இரவும் பகலும் போல ஒருவருக்கொருவர் வேறுபட்டவர்கள். வசிஷ்டர் முதல் ஏழு முனிவர்களில் ஒருவர். அவர் வேத ஞானத்துடன் தொடர்புடையவர். ராமர் தனது படிப்பை முடித்த பிறகு, அவர் உலகம் முழுவதும் பயணம் செய்து,  உலகின் மாயையான தன்மையால் ஏமாற்றமடைந்து உலக வாழ்க்கையில் ஆர்வமின்றி இருக்கிறார். அச்சமடைந்த அவரது தந்தை தசரதன் வசிஷ்டரை அழைக்கிறார், அவர் இது ஒரு நல்ல விஷயம் என்று அறிவிக்கிறார், ராமர் இப்போது வேதங்களின் இறுதி ஞானத்தைப் பெறத் தயாராகிவிட்டார்.பின்னர், 21 நாட்களுக்கு, ராஜாவின் அரசவையில் யோக வசிஷ்டர் கற்பித்தலின் மூலம், அறிவொளி பெற்ற ராமர் யதார்த்தத்தின் உண்மையான தன்மையைப

தேவையான மருந்து எப்போதும் மருந்தகங்களில் கிடைப்பதில்லை

 தேவையான மருந்து எப்போதும் மருந்தகங்களில் கிடைப்பதில்லை* I. *உடற்பயிற்சி* என்பது மருத்துவம். ii *விரதம்* இருப்பது மருத்துவம். iii *இயற்கை உணவே* மருந்து. iv. *சிரிப்பு* ஒரு மருந்து. v. *காய்கறிகளே* உண்பது மருந்து. vi. *தூக்கமே* மருந்து. vii. *சூரிய ஒளியே* ‌ ‌மருந்து viii. ஒருவரை *நேசிப்பது* மருத்துவம். ix. *நேசிக்கப்படுவது* மருத்துவம். x. *நன்றியுணர்வு* என்பது மருத்துவம். xi குற்றத்தை *மன்னிப்பது* மருத்துவம். xi *தியானம்* என்பது மருத்துவம். xiii. புத்தகங்களை.... வரலாற்றை.... தத்துவங்களை... படிப்பதும் மருத்துவம். xiv. *பாடுவதும்* *ஆடுவதும்* மருத்துவம். xv *சரியான* நேரத்துக்குச் சாப்பிடுவதும் மருத்துவம். xvi சரியாகச் *சிந்திப்பதும்*, சரியான மனநிலையுடன் இருப்பதுவும் மருத்துவம். xvii. *தன்னை நம்புவதும்* மருத்துவம் xviii. *நல்ல நண்பர்கள்* இருப்பதும் மருத்துவம். xix. தன்னை *மன்னிப்பதும்* மற்றவர்களை *மன்னிப்பதும்* மருத்துவம். *இந்த மருந்துகளை போதுமான அளவு எடுத்துக் கொள்ளுங்கள், மருந்தகங்களின் மருந்து உங்களுக்கு அரிதாகவே தேவைப்படும்*

முன்னாள் நீதிபதி சா.நாகமுத்து அவர்களின் மனக்குமுறல்!

 # படித்ததில் வலித்தது # முன்னாள் நீதிபதி சா.நாகமுத்து அவர்களின் மனக்குமுறல்! "எனது நீதிமன்றத்தில் எத்தனையோ வழக்குகள் வந்திருக்கின்றன... அதில் ஒரு வழக்கு என்னை மிகவும் உணர்ச்சிவசப்பட வைத்தது!" என் எதிரே பரிதாபமே உருவெடுத்து வந்தது போல ஒரு நடுத்தர வயது பெண் நின்று கொண்டிருந்தார். வழக்கு தொடுத்தவரும், அவரே! ஐயா, "எங்களுக்கு ஒரே மகள்; என் வீட்டுக்காரருக்கு கைகால் வராது; நான் நாலைந்து வீட்டில் வீட்டு வேலைசெய்து அதில் வரும் சம்பாத்யத்தில் தான் கணவரையும் மகளையும் காப்பாற்றி வந்தேன்; வருகிறேன்! மகளைக் கஷ்டம் தெரியாமல் வளர்த்தேன்; பலரது கால்களில் விழுந்து நல்ல பள்ளியில் படிக்க வைத்தேன்; வேலை செய்யும் வீட்டில் நல்ல உணவு கொடுத்தால், அதை சாப்பிடாமல் மகளுக்கு கொண்டுவந்து கொடுத்து அவள் சாப்பிட்டு சந்தோஷப்படுவதை பார்த்து மகிழ்வேன்! அதே போல யார் யாரிடமோ கெஞ்சி வேலையும் வாங்கிக் கொடுத்தேன். அவள் இப்போது சம்பாதிக்க ஆரம்பித்து விட்டாள்; இனி எங்கள் கஷ்டம் எல்லாம் போய்விடும்; அவள் எங்களை பார்த்துக் கொள்வாள் எனறு நினைத்தபோது... திடீரென ஒருநாள் அவள் காணாமல் போய்விட்டாள்; அவளை அவளது விருப்பமின

குருதேவர் சொன்ன குட்டிக் கதை - நல்லது கேட்டது - ராமகிருஷ்ண பரமஹம்சர்

 குருதேவர் ராமகிருஷ்ணர் சீடர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார். “எல்லாம் நாராயணன்தான்; எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். நல்லவர்களிடமும் அவர் இருக்கிறார்; கெட்டவர்களிடமும் அவர் இருக்கிறார். இருந்தாலும் தீயவர்களிடமிருந்து நாம் சற்று விலகியே இருக்க வேண்டும். இல்லாவிட்டால் நமக்குத் துன்பம்தான் வரும்” என்று கூறியவர், அதை விளக்க கதை ஒன்றைச் சொல்ல ஆரம்பித்தார். ஒரு குருவினிடத்தில் சீடன் ஒருவன் இருந்தான். அந்தச் சீடரிடம் குரு “அனைத்தும் நாராயணன் தான், அதனை மறந்து விடாதே” என்று அடிக்கடி கூறிக் கொண்டிருப்பார். குருவின் வாக்கையே திருவாக்காக எடுத்துக் கொண்ட சீடன், அதனையே பின்பற்ற ஆரம்பித்தான். மண்புழுவிலிருந்து மனிதன் வரை அனைத்தையும் நாராயணனாகவே பார்க்க ஆரம்பித்தான். ஒரு முறை புதிய ஊர் ஒன்றுக்குச் சென்று கொண்டிருந்தான் அந்தச் சீடன். திடீரென மக்கள் அங்கும் இங்கும் சிதறி ஓட ஆரம்பித்தனர். சீடனையும் ஓடி ஒளிந்து கொள்ள சொல்லினர். சீடன் என்ன காரணம் என்று கேட்டான். அதற்கு மக்கள், “யானைக்கு மதம் பிடித்து விட்டது. அது ஆவேசமாக வந்து கொண்டிருக்கிறது. ஓடிப்போய் உடனே உன் உயிரைக் காப்பாற்றிக் கொள்” என்று கூறினர்.

மூன்று மாமனிதர்களின் பெற்றோர்கள்!

 *முதல் மாமனிதர் :* 150 ஆண்டுகளுக்கு முன்பு குதிரை வண்டி தான் போக்குவரத்துக்கு பயன்பட்டது. அப்படியொரு குதிரை வண்டியில் ஒரு சிறுவன் பள்ளிக்கு செல்வது வழக்கம். *ஒரு முறை வகுப்பில் ஆசிரியர் மாணவர்களிடம் நீங்கள் பெரியவனானதும் என்னவாக ஆசைப்படுகிறீர்கள் என்று கேட்டார்.* அதற்கு ஒவ்வொரு மாணவரும் வக்கீல், ஆசிரியர், மருத்துவர் என சொல்லி கொண்டே வந்தனர், அப்போது *ஒரு மாணவன் கூறினான் “நான் குதிரை வண்டிக்காரனாவேன் ”.* சுற்றியிருந்த மாணவர்கள் எல்லாம் சிரித்தனர், ஆசிரியரும் அவனை கேலி செய்து உட்கார சொன்னார். அந்த சிறுவன் வீட்டிற்கு சோகமாக வந்ததை பார்த்து தாய் என்னவென்று கேட்க, நடந்ததை கூறினான் அந்த சிறுவன். அதை கேட்ட அந்த தாய் மகன் மீது கோபம் கொள்ள வில்லை, அந்த தாய் கேட்டார் *“ நீ ஏன் குதிரை வண்டிக்காரனாக ஆசைப்படுகிறாய், அதற்கு என்ன காரணம்”.* அந்த சிறுவன் கூறினான் “தினமும் பள்ளிக்கு செல்லும் போது குதிரை வண்டிக்காரன் குதிரை ஓட்டுவதை பார்ப்பேன், அவர் குதிரை ஓட்டுவது அழகாக இருக்கும். *எனக்கும் அதுபோல் குதிரை வண்டி ஓட்ட வேண்டும் என்று ஆசை, அதனால் தான் அப்படி கூறினேன்”.* இதை கேட்ட தாய் வீட்டினுள் சென்று ஒரு

Healthy list

 ஆரோக்கியதிற்கான வழிகள்  1 நீண்ட நேரம் தூங்குங்கள் 2 உடற்பயிற்சி செய்யுங்கள் 3 அதிக தண்ணீர் குடிக்கவும் 4 சர்க்கரை குறைவாக சாப்பிடுங்கள் 5 எதிர்மறைக்கு பதிலளிக்க வேண்டாம் 6 அதிகமாக எழுதுங்கள்  7 ஒழுங்கீனத்தை அகற்றவும் 8 பொறுமையாக இருங்கள் 9 அதிகமாக கேளுங்கள் 10 சத்தமாக சிரிக்கவும் 11 ஆழமாக சுவாசிக்கவும் 12 அமைதியாக இருங்கள் 13 நேர்மையாக இருங்கள்

முண்டு மிளகாய்... ராமநாதபுரத்தின் தனித்துவ அடையாளம்! புவிசார் குறியீடு வழங்கப்படுமா?

Image
  தமிழ்நாட்டில் விளையக்கூடிய மஞ்சள், மலைப்பூண்டு உள்ளிட்ட விளைபொருள்களுக்கு ஏற்கெனவே புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் ராமநாதபுரம் மாவட்டத்தின் தனித்துவ அடையாளமாகத் திகழும் முண்டு மிளகாய்க்கும் புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என இம்மாவட்ட விவசாயிகள் கோரிக்கை எழுப்புகிறார்கள். தங்கள் மாவட்டத்தில் மட்டுமே நீண்டகாலமாக அதிகளவில் விளைவிக்கப்படும் முண்டு மிளகாய்க்குப் புவிசார் குறியீடு கிடைத்தால், உலக அளவில் இதற்குப் பெரும் வரவேற்பு கிடைக்கும் என்கிறார்கள் இப்பகுதி விவசாயிகள். காரம், சுவை, மணம் அதிகம் ராமநாதபுரம் முண்டு மிளகாயின் சிறப்புகள் மற்றும் இதற்கான புவிசார் குறியீடு பெறுவதற்கான அவசியம் குறித்து அறிந்து கொள்ள, இம்மாவட்டத்தில் இயங்கி வரும் வேளாண் அறிவியல் நிலையத்தின் தோட்டக்கலை உதவிப் பேராசிரியர் பாலசுப்பிரமணியனை சந்தித்துப் பேசினோம். ‘‘முண்டு மிளகாயில் காரத்தன்மை, சுவை, மணம் அதிகமாக இருக்கும். இது வறட்சி தாங்கி வளரக்கூடிய பயிராகும். இம்மாவட்டத்தில் உள்ள கடலாடி, முதுகுளத்தூர், பரமக்குடி ஆகிய வட்டங்களில் பல்லாயிரம் ஹெக்டேர் பரப்பளவில் மானாவாரி பயிராக முண்டு மிளகாய் பய

ஒரு ஏக்கர்... ரூ.1,35,000... அசத்தல் வருமானம் தரும் 'அழகிவிளை' நாட்டு ரக முருங்கை!

Image
  தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி பாலகிருஷ்ணன் ஒரு ஏக்கரில் ‘அழகிவிளை’ என்ற நாட்டு ரக முருங்கையை இயற்கை முறையில் சாகுபடி செய்து நிறைவான வருமானம் பார்த்து வருகிறார். 25.02.2016 தேதியிட்ட இதழில், “15 சென்ட்... 150 நாள்... 70 ஆயிரம் லாபம்” என்ற தலைப்பில் இவரைப் பற்றி ஏற்கெனவே கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. வெள்ளைப் பாகல் சாகுபடி குறித்த தன் அனுபவத்தை அதில் பதிவு செய்திருந்தார். தற்போது இவர் சாகுபடி செய்துள்ள அழகிவிளை நாட்டு ரக முருங்கை அனுபவம் குறித்து அறிந்துகொள்ள மீண்டும் இவரைச் சந்திக்கச் சென்றோம். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் இருந்து 9 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது நடுவக்குறிச்சி கிராமம். இங்குதான் பாலகிருஷ்ணனின் முருங்கை தோட்டம் உள்ளது. நாம் சென்றபோது சுறுசுறுப்பாகக் காய்களைப் பறித்துக்கொண்டிருந்த பாலகிருஷ்ணன் மிகுந்த மகிழ்ச்சியோடு நம்மை வரவேற்றார். முருங்கைக்காய் விற்பனைக்கு அனுப்புதல் ‘‘சாத்தான்குளம் சுத்து வட்டாரப் பகுதிகள்ல நல்ல வளமான செம்மண் நிலம் அதிகம். இங்கவுள்ள விவசாயிங்கள்ல பெரும்பாலானவங்க, நீண்ட காலமா முருங்கை சாகுபடி செஞ்சிக்கிட்டு வர்றாங்க. இந்த மண் வாகு

மிளகு, காபி, வாழை, கிராம்பு, காய்கறிகள்... சிங்கப்பூர் to கொல்லிமலை

Image
 நாமக்கல் மாவட்டத்தில் அமைந்திருக்கும் கொல்லிமலை தமிழகத்தின் புகழ்பெற்ற மலை வாசஸ்தலம். மலை அடிவாரமான காரவள்ளி யில் இருந்து மேல் நோக்கி 70 கொண்டை ஊசி வளைவுகளைக் கடந்து சென்றால், கொல்லி மலையை அடையலாம். இங்குள்ள சோளக்காடு பேருந்து நிலையத்திலிருந்து, படகு இல்லம் வழியே 3 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள வாசலூர் பட்டி கிராமத்தில் அமைந்திருக்கிறது இந்தத் தம்பதியின் தோட்டம். விவசாயத்தில் எவ்வித முன் அனுபவமும் இல்லாத இவர்கள், அதுவும் மலைப்பிரதேசத்தில் தங்களுடைய கடும் உழைப் பாலும், தன்னம்பிக்கை யாலும் இங்கு வெற்றிகர மாக விவசாயம் செய்து வருகிறார்கள். இவர் களுடைய தோட்டத்தில் மிளகு, காபி, வாழை, கிராம்பு, பழ மரங்கள், காய்கறிகள் எனப் பலவித மான பயிர்கள் செழிப்பாக விளைந்துகொண்டிருக்கின்றன. ஒரு பகல்பொழுதில் இத்தோட்டத்துக்குச் சென்றோம். இவர்களுடைய வீடும் இங்கு தான் அமைந்துள்ளது. விளைபொருள்களைப் பேக்கிங் செய்து வெளியூர்களுக்கு அனுப்பும் பணியில் மும்மூரமாக ஈடுபட்டிருந்த இவர்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு நம்மை வரவேற்றனர். தங்களுடைய வாழ்க்கை பயணம் குறித்து முன்னுரை கொடுத்தார் புனிதா, “என்னோட ஊர் கோயம்புத்தூர். இவர் சேல

ஒரு ஏக்கர்... ரூ.2.45 லட்சம்... செழிப்பான வருமானம் தரும் செம்பருத்தி!

Image
  விருதுநகரைச் சேர்ந்த வனவியல் பட்டதாரியான சாந்தி சுப்புலெட்சுமி இயற்கை முறையில் செம்பருத்தி சாகுபடி செய்து வருகிறார். இதில் கிடைக்கும் பூக்களை, உலர் பூக்களாக மதிப்புக்கூட்டி விற்பனை செய்வதன் மூலம் நிறைவான லாபம் பார்த்து வருகிறார். விருதுநகர் மாவட்டம் சாத்தூரிலிருந்து 15 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது நள்ளி என்ற கிராமம். இக்கிராமத்தின் தொடக்கத்திலேயே செழிப்பாகக் காட்சி அளித்துக்கொண்டிருக்கிறது, சாந்தி சுப்புலெட்சுமியின் செம்பருத்தித் தோட்டம். எங்க குடும்பத்துக்கு நாலு ஏக்கர் நிலம் இருக்கு. ஒரு ஏக்கர் பரப்புல செம்பருத்தி பயிர் பண்ணினேன். கடந்த 6 மாசமா, தொடர்ச்சியா வருமானம் கிடைச்சுக்கிட்டு இருக்கு. மீதி மூணு ஏக்கர்ல மருதாணி, துளசி, ஆடாதொடை சாகுபடி செய்ய நிலத்தைத் தயார் படுத்திக்கிட்டு இருக்கேன்” என்று சொன்ன சாந்தி சுப்புலெட்சுமி, செம்பருத்தி சாகுபடி மூலம் கிடைக்கும் வருமானம் குறித்து விவரித்தார். “ஒரு ஏக்கர் பரப்புல மொத்தம் 1,800 செம்பருத்தி செடிகள் இருக்கு. கடந்த 6 மாசமா பூ பறிச்சுகிட்டு இருக்கேன். இதுவரைக்கும் 1,700 கிலோ பூ கிடைச்சிருக்கு. அதை நிழல்ல உலர வச்சி பதப்படுத்தியது மூலமா, 340 க

"ஹராம்......!

 "ஹராம்......! பதினோறாம் நூற்றாண்டுலே ஒரு புகழ்பெற்ற இறை நேசச் செல்வர் வாழ்ந்து வந்தார். அவர் பேரு அப்துல்லா ஹிஸ் ஸவ்மயி. (ரஹ்) இப்போது சோவியத் ரஷ்யாவுலே உள்ள 'ஜீலான்'ங்கற நகரத்தோட புறநகர்ப் பகுதியிலே 'நீப்'புன்னு ஒரு ஊர். அங்கேதான் அவர் இருந்தார். அவருக்கு ஒரு ஆப்பிள் தோட்டம் இருந்துது. தஜ்லா நதி ஓரத்துலே! அந்தத் தோட்டத்துலே அவரு ஒருநாள் உலாவிக்கிட்டிருந்தார். அந்த சமயத்துலே இருபது வயசுள்ள அழகான இளைஞர் ஒருத்தர் அவரு முன்னாடி வந்து நின்னார். "என்னை நீங்க மன்னிக்கணும்"ன்னார். இவருக்கு ஒண்ணும் புரியலே! "யாரப்பா நீ? "நீ என்ன கெடுதல் பண்ணினே? நான் எதுக்காக உன்னை மன்னிக்கணும்?" -ன்னு கேட்டார். "ஐயா! என் பேரு அபுசாலிக் மூசா! இங்கேயிருந்து நாலு கல் தொலைவுலே இதே "தஜ்லா" நதி ஓரத்துலே தான் நான் இருக்கேன். நேத்து மத்தியானம் எனக்கு நல்ல பசி... அந்த நேரம் ஒரு ஆப்பிள் பழம் நதியிலே மிதந்து வந்துது... அவசரத்துலே அதை எடுத்து சாப்பிட்டுட்டேன். சாப்பிட்டதுக்கு அப்புறம்தான் அப்படி செஞ்சது பெரிய தவறுங்கறதை உணர்ந்தேன். ஒரு பொருளுக்கு உரியவர்கள் யா

நம்மால் விதியை மாற்றமுடியும் என்று...

 ஒர் பிச்சைக்காரன் தினமும் ஒரு ஆலயத்தின் வாசலில் பிச்சை எடுத்து உணவு அருந்திவந்தான். அப்போது அந்த ஆலயத்தில் ஒரு மகான் வந்தார். அவரை பார்த்த பிச்சைக்காரன் சாமி என் வாழ்க்கை கடைசிவரை இப்படிதான் இருக்குமா என்று கேட்டான். அதற்கு சாமியார் அது உன் தலையில் எழுதிய விதி. உன் கடைசி வாழ்நாள் வரை இப்படிதான் இருக்கும் என்றார். பிச்சைக்காரன், சாமி என் தலைவிதி மாறாதா, மாற நான் என்ன செய்யவேண்டும் என்றான். அதற்கு சாமியார் நீ புத்தர் பெருமானை பார்த்தால் உன் தலை எழுத்து மாற வாய்ப்பு உள்ளது. அவரை போய் பார் என்றார். பிச்சைக்காரன் புத்தரை பார்க்க புறப்பட்டான். வெகுநேரம் ஆகியதால் இரவு ஒய்வு எடுக்க ஒர் செல்வந்தர் வீட்டின் கதவை தட்டி, ஐயா இன்று இரவு இங்கே தங்கி ஒய்வு எடுக்க அனுமதிக்குமாறு கேட்க, செல்வந்தர் நீ எங்கு செல்கிறாய். என்று கேட்க. அதற்கு பிச்சைக்காரன் நடந்ததை சொல்ல. செல்வந்தரும் அவர் மனைவியும் எங்களுக்கு ஒர் உதவி செய்யவேண்டும் என்று கேட்க. பிச்சைக்காரன் என்ன உதவி வேண்டும் என்று கேட்க. அதற்கு செல்வந்தரும் அவர் மனைவியும் எங்களுக்கு ஒர் பெண் உள்ளது. அவள் பிறவிஊமை அவள் எப்போது பேசுவாள் என்று புத்தரிடம் கே

APJ Abdul Kalam: வாழ்க்கையில் வெற்றி பெற அப்துல் கலாம் கூறிய நான்கு விதிகள் என்ன தெரியுமா? (4 rule for success by missile-man of india)

 4 rule for success by missile-man of india 1. உங்களுக்கு ஒரு பெரிய கனவு இருப்பதை நீங்கள் அடிக்கடி நினைவூட்டுங்கள். I will Have Great Aim 2. எப்போதும் கற்றலை நிறுத்தக்கூடாது என்பதை எப்போதும் நினைவூட்டுங்கள் (நீங்கள் தொடர்ந்து அறிவைப் பெற வேண்டும்). I will continuously acquire knowledge 3. கடினமாக உழையுங்கள், உங்கள் உழைப்பில் ஒரு சிறு கல்லை கூட விட்டுவிடாதீர்கள். I will do Hard work 4. தோல்வியை கண்டு பயக்காமல் உங்கள் முயற்சியை தொடர்ந்து செய்து கொண்டே இருங்கள். I will persevere and succeed

பலன் நோக்காத பக்தி

 பஞ்சபாண்டவர்கள் ஐந்து பேர். தருமன், பீமன் அர்ஜுனன் நகுலன் சகாதேவன் என்று அவர்களுக்குப் பெயர்.இவர்களுள் அர்ஜுனன் கண்ணனிடம் மிகவும் அன்பும் பக்தியும் கொண்டவன். தினமும் ஒரு வண்டி அளவு பூக்களைப் பறித்து வந்து கிருஷ்ணனைப் பூசிப்பான். அதனால் தானே மிகவும் பக்திமான் என்ற கர்வம் அவனிடம் குடி கொண்டது. தன்னை விட கண்ணனை நேசிப்பவர் இவ்வுலகில் யாருமில்லை என்று இருமாந்திருந்தான். உறவு முறையில் கண்ணன் அர்ஜுனனுக்கு மைத்துனன். கண்ணனின் சகோதரி சுபத்திரையை அர்ஜுனன் மணந்திருந்தான். பாரதப் போர் முடிந்து தருமன் பட்டமேற்று பல ஆண்டுகள் ஆட்சி செய்தான். காலம் ஓடியது. பாண்டவரின் காலம் முடிந்தது. அனைவரும் ஸ்வர்க்கம் செல்ல விண் வழியே பயணப்பட்டனர். தருமன் முன்னே செல்ல அவனைத் தொடர்ந்து கண்ணன் செல்ல அவனருகே பீமன் சென்றான். அவன் பின்னே அர்ஜுனன் சென்றான். அர்ஜுனன் எவ்வளவு முயற்சித்தும் பீமனைத் தாண்டி கண்ணனின் அருகே செல்ல இயலவில்லை. அப்போது அர்ஜுனன் கண்ணனிடம் கேட்டான். " கண்ணா! ஏன் உன்னிடம் என்னால் நெருங்க முடியவில்லை? என் பக்தியில் ஏதேனும் குறை உண்டா? பீமனால் மட்டும் உன்னருகே நெருங்க முடிகிறதே? கண்ணன் புன்னகைத்தான

Putting a bar of soap under your sheets before bedtime? This is why you should try it

 A good night’s sleep doesn’t come naturally for everyone. There are countless people who have a hard time falling asleep at night for various reasons. Some are worried, others cannot find a good position or have restless legs syndrome. Whatever the reason, not being able to fall asleep is very irritating and can have a major effect on your daily life. At times, we are all prone to feeling restless. When it is chronic, it can be a symptom of restless legs syndrome (RLS). Restless legs syndrome Restless legs syndrome or RLS, is a sleep disorder characterized by an uncontrollable urge to move the lower legs. It is usually worse in the evening and at night, and complaints mainly occur when a person wants to rest. The complaints are reduced while moving, but as soon as the movement stops the symptoms appear. This makes it almost impossible to fall asleep. Symptoms The symptoms of restless legs syndrome are jitters in the legs, an irresistible urge to move them, and complaints about not bei

பணக்காரர் ஆக வேண்டுமென்றால் நான் செய்யக் கூடாதது என்ன?

 இன்றைய காலக்கட்டத்தில் கோடிகள் எல்லாம் ரஜினி ஸ்டைலில் சொல்ல வேண்டும் என்றால் ஜுஜுபி மேட்டர். 30 அல்லது 32 வயதுக்குள் ஒருவர் கோடீஸ்வரராக முடியுமா? என் அனுபவத்தில் முடியும் என்பதே பதில். இந்த உலகில் பணத்துக்கு மட்டும் எப்போதுமே பற்றாக்குறை வருவதில்லை. பணத்தைப் பற்றிய நம் எண்ணங்களுக்குத்தான் பற்றாக்குறை. சரி கோடீஸ்வரராக என்ன செய்யவேண்டும் என்பதுக்கு பதில் என்ன செயக்கூடாது என்பதை இங்கே பார்ப்போம். சோம்பேறியாக இருக்கக்கூடாது: பணக்காரர் ஆவதற்கு , கடும்உழைப்பு அவசியம் உங்கள் தொழிலில் மிகவும் விருப்பத்துடன் கடின உழைப்பை செலுத்துவேண்டும். அதிர்ஷ்டத்தினால் பணக்காரர் ஆவது முடியாது என்பதை அறிந்திருக்கவேண்டும். நினைவில் கொள்ளுங்கள் நாளை என்றுமே வருவதில்லை. கடனுக்கு ‘நோ’: உங்கள் வளர்ச்சியில் 'கடன்' என்ற வார்த்தையே இருக்கக் கூடாது. அது உங்களுக்கு மேலும் சம்பாத்தியத்தைப் பெற்றுத் தராது; வட்டித் தொகையை அதிகரித்து உங்களின் சேமிப்பையும் வளர்ச்சியையும் பதம் பார்த்து விடும். உங்கள் லட்சியத்தை அடைந்த பிறகு, கடன் வாங்கி அதை சுழற்சி செய்வது வேறு விஷயம். கடனுக்கு "நோ" என்றால் கடன் கொடுப்பதைய

பணம் இருக்கிறது என காட்டிக்கொள்ள சிலர் செய்யும் வேடிக்கையான விஷயம் என்ன?

தங்க சங்கிலியை வெளியே தெரியும்படி இரண்டு மூன்று பட்டன்களை அவுத்துவிடுவது.. ஒரே விரலில் 2 அல்லது 3 மோதிரம் மாட்டிக்கொள்ளுவது,, ( அதில் ஒன்று பாம்பு வடிவில் ). வெள்ளை கதர் சட்டையில் 2000, 500 ரூபாய் தெரியும்படி வைப்பது.. குடும்பத்தோடு வெளியே செல்லும் போது காலையில் பெரிய ஹோட்டல்களில் சாப்பிடுவது அதை அக்கம் பக்கத்தினரிடம் பந்தாவா சொல்லி கொள்ளுவது.. எதாவுது வெளியூர் சென்றால் அங்கு உள்ள ஹோட்டலில் வைக்கப்படும் சோப்பு, ஷாம்பு, லாண்டரி பாக், சீப்பு இவையெல்லாம் ஆட்டைய போட்டு கொண்டு வந்து மற்றவர்களிடம் பெருமையா இந்த ஹோட்டலில் தங்கினோம் என்று இவர்களே வழிய வந்து கூறுவது. தினமும் கறி சோறு இல்லாமல் சாப்பாடு இறங்ககாததை போல காட்டி கொள்ளுவது. தமது சக்திகும் மீறி நம்ம சொந்தக்காரங்க வாய் அடைத்து போகும்படி அடுத்த வீட்டை பார்த்து பெரிய பள்ளிக்கூடத்தில் குழந்தைகளை சேர்ப்பது. ( பிறகு வருத்தபடுவது ). வாங்கும் சம்பளதை விட வெட்டி பந்தா காட்டுவதற்கு கிரெடிட் கார்டு, ஹோம் loan, பர்சனல் லோன் இப்படி எல்லா லோன்யும் வாங்கிட்டு வெளியேயும் சொல்ல முடியாமல் மாட்டி கொண்டு அவஸ்தை படுவது. எனக்கு அவனை தெரியும் இவனை தெரியும் எ

பணம்தான் எல்லாமா? - மெக்ஸிகன் மீனவன் கதை

 நீங்கள் மெக்ஸிகன் மீனவன் கதையை அறிந்துள்ளீரா? ஒரு அமெரிக்க முதலீட்டு வங்கி அதிகாரி மெக்ஸிகோவில் உள்ள சிறிய கடற்கரை கிராமத்திற்கு சென்றார். அப்போது ஒரு மீனவர் சிறிய படகு முழுக்க சூரை (Tuna fish ) மீன்களுடன் கடலில் இருந்து திரும்புவதை பார்த்தார். அந்த மீன்களின் தரத்தை கண்டு வியந்த அந்த அமெரிக்கர், இதை பிடிக்க எவ்வளவு நேரம் ஆனது என கேட்டார். அதற்கு அந்த மீனவர், “சிறிது நேரம் தான் ஆனது" என கூறினார். நீங்கள் ஏன் கடலில் அதிக நேரம் செலவிட்டு அதிக மீன்களை பிடிக்கலாமே? என வினவினார். அதற்கு அந்த மீனவன், அவன் குடும்பத்தை காப்பாற்ற இதுவே போதுமானது என்றான். “ அப்படியானால் மற்ற நேரம் என்ன செய்கிறீர்கள்” என அமெரிக்கர் கேட்டார். மீனவனோ “நான் காலை தாமதமாக எழுவேன். சிறிது நேரம் மீன் பிடிப்பேன், குழந்தைகளுடன் விளையாடுவேன், மதியத்தில் மனைவியுடன் குட்டி தூக்கம், பிறகு மாலை கிராமத்தில் சற்று மது அருந்துவேன். சில நேரங்களில் நண்பர்களுடன் guitar வாசிப்பேன். எனது நாள் முழுக்க மும்முரமாக இருக்கும்” அமெரிக்கர் ஒரு ஆலோசானை கூறினார் “ நான் ஹார்வர்ட் இல் MBA கற்றேன். உனக்கு நான் உதவ நினைக்கிறன். நீங்கள் செய்ய

செக்கு மாடு போல - சிறந்த கதை

 பல சமயங்களில் நாம் நமது சக்தியை உணராமல் ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு பழக்கப்பட்ட வேலைகளை மட்டுமே அது தான் நம்மால் முடியும் என்று கருதி செய்து வருகிறோம். நாம் சாதிக்கக் கூடியவை எண்ணற்றவை. முடிவற்றவை. ஆனால் நம்மில் பலருக்கு அது கண்டுபிடிக்கப்படாமலே போய் விடுகிறது. வாழ்க்கையில் எப்போதுமே திருப்புமுனைகள் அவசியம். அவை இல்லாவிட்டால் சுவாரஸ்யம் இல்லாமல் போய் விடும். தடைகள் வர வேண்டும். அவற்றை மீறி கடந்து செல்ல வேண்டும். வெல்ல வேண்டும். இல்லாவிட்டால் செக்குமாடு போல ஒரே இடத்தில் உழன்றுக் கொண்டிருப்போம். மாற்றுவழி –வேறு மார்க்கம் பற்றிச் சிந்திக்கத் தோன்றாது. ஒரே இடத்தில், மிகச் சுலபமான, ஒரே வேலையை செய்வதிலே தான் நாம் ஆர்வம் செலுத்துகிறோம். ஆகையால் தான் பலருக்கு வாழ்க்கை ஒரு உற்சாகமான, மன நிறைவான ஒன்றாக இல்லாமல் மிகச் சாதாரணமாகக் கழிந்து விடுகிறது. மிகப் பெரிய சக்கரவர்த்தி அவன். அவனுக்குக் கீழ் பல சிற்றரசுகள் உள்ளன. ஒரு முறை இந்த அரசனின் அவைக்கு வருகை தந்த சீன தேசத்து அறிஞர் ஒருவர் தாயை இழந்த இரண்டு பஞ்சவர்ணகிளிக் குஞ்சுகளைப் பரிசளித்து விட்டுச் சென்றார். பஞ்சவர்ணக் கிளியை அதிர்ஷ்டத்தின் சின்னம