Posts

Showing posts from 2023

ரசவாதி - The Alchemist (Tamil) : பாலோ கொயலோ

Image
  8.5 கோடிப் பிரதிகள் விற்றுச்சாதனை படைத்துள்ள நூல் ஆன்மாவிற்குப் பரவசமூட்டுகின்ற ஞானத்தை உள்ளடக்கிய எளிய, சக்திவாய்ந்த இப்புத்தகம், ஆன்டலூசியா பகுதியைச் சேர்ந்த, சான்டியாகோ என்ற செம்மறியாட்டு இடையன் ஒருவனைப் பற்றியது. அவன் ஸ்பெயினில் உள்ள தன்னுடைய சொந்த கிராமத்திலிருந்து புறப்பட்டு, பிரமிடுகளில் புதைத்து வைக்கப்பட்டுள்ள ஒரு பொக்கிஷத்தைத் தேடி எகிப்தியப் பாலைவனத்திற்குச் செல்லுகிறான். வழியில் அவன் ஒரு குறவர்குலப் பெண்ணையும், தன்னை br>ஓர் அரசர் என்று கூறிக் கொள்ளுகின்ற br>ஓர் ஆணையும், ஒரு ரசவாதியையும் சந்திக்கிறான். அவர்கள் அனைவரும், அவன் தேடிக் கொண்டிருக்கின்றன பொக்கிஷத்திற்கு இட்டுச் செல்லக்கூடிய பாதையை அவனுக்குக் காட்டுகின்றனர். அது என்ன பொக்கிஷம் என்பதோ, வழியில் எதிர்ப்படும் முட்டுக்கட்டைகளை சான்டியாகோவால் சமாளிக்க முடியுமா என்பதோ அவர்கள் யாருக்கும் தெரியாது. ஆனால், லௌகிகப் பொருட்களைத் தேடுவதில் தொடங்குகின்ற ஒரு br>பயணம், தனக்குள் இருக்கும் பொக்கிஷத்தைக் கண்டறிகின்ற ஒன்றாக மாறுகிறது. வசீகரமான, உணர்வுகளைத் தட்டியெழுப்புகின்ற, மனிதாபிமானத்தைப் போற்றுகின்ற இக்கதை, நம்முடைய கனவ

கல்வியை சமூக அடிப்படையாக செயல்படுத்துவது முட்டாள்தனம்

Image
 இன்றய  உலகில்  ஒவ்வொருவரின்  வெற்றி, அந்தஸ்துக்கு  கல்வியே அளவுகோலாகும். கடந்த 50+ ஆண்டுகளாக இந்தியாவில் அல்லது உலகம் முழுவதும் பிரிட்டிஷ் காலனித்துவ காலத்திற்குப் பின் - கல்வி சமூகத்தில் ஒரு முக்கிய இடத்தை பிடித்துள்ளது  கல்வி அல்லது கல்வியறிவு இல்லாமல், இந்த சமூகத்தில் வாழ்வது மற்றும் பொருளாதார ரீதியாக கண்ணியமான வாழ்க்கையை நடத்துவது மிகவும் கடினம். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை, கல்வியறிவு இல்லாத மக்கள், சம்பாதித்து, திருமணம் செய்து, குழந்தைகளை வளர்த்து, தங்கள் வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்தனர். படிக்காத மனிதன் பழைய நாட்களில் வாழ நிறைய வாய்ப்புகள் இருந்தன. இப்போதெல்லாம் கல்வி இல்லாமல் வாழ முடியாது. நாம் கல்வியால் கட்டுப்படுத்தப்பட்ட ஒரு மோசமான சமூக காலகட்டத்தில் வாழ்கிறோம், மேலும் ஒவ்வொருவரும் கல்வி கற்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். வேட்டைக்காரர்கள் அங்கீகரிக்கப்பட்ட காலங்கள் இருந்தன, பின்னர் விவசாயிகள் அங்கீகரிக்கப்பட்டனர், பின்னர் வீரர்கள் அங்கீகரிக்கப்பட்டனர், பின்னர் கவிஞர்கள், ஓவியர்கள், சிற்பங்கள் அங்கீகரிக்கப்பட்டனர். சுதந்திரப் போராட்ட வீரர்கள் அங்கீகரிக்கப்பட்டனர், இன்று சு