Posts

Showing posts from April, 2022

Writer s balabharathi

Image
 

சரணாகதி அடைந்த சிட்டுக்குருவி!

 சரணாகதி ...இறைவா.....நீயே..... கதி! பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும், நிகழப் போகும் போருக்கான ஆயத்தங்களை செய்து கொண்டிருந்தனர். குருஷேத்திரத்தில், யானைகளைக் கொண்டு, பெரும் மரங்களை, வேரோடு பிடுங்கி அகற்றி, நிலத்தை சீர் படுத்திக்  கொண்டிருந்தனர்.   ஒரு மரத்தில் தாய் சிட்டுக்குருவி ஒன்று தன் நான்கு குஞ்சுகளுடன்  வசித்து வந்தது. அந்த மரம் அகற்றப் படும்போது, பறக்க அறியாத தன் குஞ்சுகளுடன் தாய்க்குருவியும் தரையில் கூட்டோடு விழுந்து விட்டது. தாய் சிட்டுக்குருவி, சுற்றுமுற்றும் பார்த்தபோது, அதன் பார்வையில் ஸ்ரீகிருஷ்ணரும், அர்ஜுனனும் பட்டனர். சிட்டுக்குருவி, பறந்து போய், ஸ்ரீ கிருஷ்ணரது ரதத்தின் மீது அமர்ந்தது. “ கிருஷ்ணா! நாளை போர் ஆரம்பித்தால், என் குஞ்சுகள் அழிந்து விடும்! நீ தான் காப்பாற்ற வேண்டும்” என்று கெஞ்சிக் கேட்டது. “ நீ சொல்லுவது எனக்குக் கேட்கிறது! ஆனால் இயற்கை விதிகளை எதிர்த்து என்னால் ஒன்றும் செய்ய முடியாது” என்று பதில் சொன்னார் ஸ்ரீ கிருஷ்ணர். “ எனக்குத் தெரிந்ததெல்லாம், நீ தான் எங்களைக் காப்பவர்! எங்களைக் காப்பதையும், அழிப்பதையும் உன் கையில் விட்டு விடுகிறேன்” என்றது குருவி!

நாம் எப்படியிருக்க வேண்டும்?

 நீதிக் கதை: ஒரு முறை மகாகவி காளிதாசர் வயல்வெளியே வெயிலில் நடந்து சென்ற போது தாகம் எடுத்தது! சற்று தூரத்தில் ஒரு கிராமப்பெண் கிணற்றில் தண்ணீர் சேந்தி குடத்தில் எடுத்து வந்துக்கொண்டிருந்தாள்! காளிதாசர் அவரைப் பார்த்து அம்மா தாகமாகஇருக்கு கொஞ்சம் தண்ணீர் தருவீர்களா? என்று கேட்டார்!   அந்த கிராமத்துப்பெண்ணும், தருகிறேன் உ௩்களை அறிமுகப்படுத்தி க்கொள்ளு௩்கள் என்றாள்! உடனே காளிதாசருக்கு ஒரு உயர்வு மனப்பான்மை ஏற்பட்டு, இந்த பெண்ணிடம் நாம் யார் என்று சொல்ல வேண்டுமா என நினைத்து நான் ஒரு பயணி அம்மா என்றார்! உடன் அந்த பெண், உலகில் இரண்டு பயணிகள் தான்! ஒருவர் சந்திரன்! ஒருவர் சூரியன்! இவர்கள் தான் இரவு பகலென பயணிப்பவர்கள் என்றாள்!   சரி என்னை விருந்தினர் என்று வைத்துக் கொள் என்றார் காளிதாசர்! உடனே அந்த பெண், உலகில் இரண்டு விருந்தினர் தான்! ஒன்று செல்வம், இரண்டு இளமை! இவை இரண்டும் தான் விருந்தினராக வந்து உடனே போய் விடும் என்றாள்!   சற்று எரிச்சலான காளிதாசர் தான் ஒரு பொறுமைசாலி என்றார்! உடனே அந்த பெண் அதுவும் இரண்டு பேர்தான்! ஒன்று பூமி! எவ்வளவு மிதித்தாலும், எவர் மிதித்தாலும் தா௩்கும்! மற்றொன்று மர

கிருஷ்ணரின் அருள் வார்த்தைகள்

  காரணம்   சொல்லாதே   பக்தி   செய்  ;  பக்தி   செய்யாமலிருக்க   காரணம்   சொல்லாதே  ! உலகில்   காரணம்   சொன்னவர்கள்   ஜெயித்ததில்லை  !!! நீ   சொல்கின்ற   காரணங்களில்   பல   பக்தர்கள்   வாழ்விலும்   இருந்தது  ! அவர்கள்   அதையும்   தாண்டித்தான்   பக்தி   செய்தார்கள் !  நீயும் அவர்களைப்   போல்   முயற்சித்துப்   பார்  ! 1.  தகப்பன்   கொடுமைக்காரனா  ?  ப்ரஹ்லாதனைப்   போல்   பக்தி   செய்  ! 2.  தாயால்   கெட்ட   பெயரா  ?  பரதனைப்   போல்   பக்தி   செய்  ! 3.  அண்ணனே   உன்னை   அவமதிக்கிறானா  ?  தியாகராஜரைப்   போல்   பக்தி   செய்  ! 4.  குடும்பத்தில்   தரித்ரம்   தலைவிரித்தாடுகிறதா ?  குசேலரைப்   போல்பக்தி   செய்  ! 5.  மனைவி   அடங்காப்   பிடாரியா  ?  சந்த்   துகாராமைப்   போல்   பக்தி   செய்  ! 6.  கணவன்   கொலைகாரப்   பாவியா  ?  மீராவைப்   போல்   பக்தி   செய்  ! 7.  புகுந்த   வீட்டில்   கொடுமையா  ?  சக்குபாயைப்   போல்   பக்தி   செய்  ! 8.  பெற்ற   பிள்ளையை   இழந்துவிட்டாயா  ?  பூந்தானத்தைப்   போல்   பக்தி   செய்  ! 9.  பெற்ற   தாயை   சிறுவயதில்   இழந்துவிட்டாயா ?  நாரதரைப்   போல்   பக்தி   செய்