Posts

Showing posts from March, 2022

அனிமேஷன் திரைப்படங்கள் நமக்குக் கற்றுக் கொடுத்த வாழ்க்கைப் பாடங்கள்

Image
  வாழ்க்கையில் நாம் எந்த வயதினராக இருந்தாலும், அனிமேஷன் திரைப்படத்தைப் பார்க்கும் ஆர்வம் குறையாது. அனிமேஷன் நம்மை மற்ற படங்களில் அழைக்க முடியாத உலகத்திற்கு அழைத்து செல்லும். அந்த படங்களின் மூலம் நாம்  என்ன  பாடம் கற்றுக்கொண்டோம்  என்பதை எப்போதும் தெரிந்து கொள்வது நல்லது இந்தத் திரைப்படங்கள் நம்மை ஒரு பயணத்திற்கு அழைத்துச் சென்று, அவற்றின் கதைக்களம் மூலமாகவோ அல்லது வேறுவிதமாகவோ வாழ்க்கைப் பாடங்களை நமக்கு முன்வைக்கின்றன. அனிமேஷன் படங்கள் பெரும்பாலும் குழந்தைகளுடன் தொடர்புடையவை என்றாலும், அவர்களின் கதைகள் மற்றும் கதாபாத்திரங்களின் மூலம் ஆழமான நுண்ணறிவு நமக்குள் கடத்தப்படுகிறது  Snow White and the Seven Dwarfs' (1937) தீய சூனியக்காரி ஸ்னோ ஒயிட்டைக் கொல்லுமாறு மரக்காவலரிடம் கட்டளையிட்டபோது, ​​அவர் அந்த கட்டளையை  செயல்படுத்த  புறப்படுகிறார். அவளைக் கண்டுபிடித்த பின் , அவன் அவளுடைய நல்ல பக்கத்தை தெரிந்துகொள்கிறான் , அவன் அதைச் செய்யவில்லை, அவன் திறமை இல்லாததால் அல்ல, ஆனால் தீமையை நல்லது வென்றதால். இந்த விஷயத்தில், பாடம் என்னவென்றால், நன்மை மற்றும் தீய சக்திகள் எப்போதும் உள்ளன, ஆனால் நமக்க

உங்களுக்கு திறமை இல்லையென எண்ணம் வருகின்றதா? இதோ உங்களுக்கான தேடல்! (Talent vs Skill)

Image
  இவ்விதம் எண்ணங்களை கொண்டிருப்பவர்கள் ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள், இவ்வுலகில் பிறக்கும் பொழுது எவருக்கும் தனிப்பட்ட திறமை என்பது கிடையாது. சிலருக்கு வாழ்வில் சிறப்பான திறமை இல்லை எனும் எண்ணமும், தனக்கான திறமையை கண்டறிய முடியாமலும் சிக்கி தவிப்பர். தனக்கென எவ்வித நோக்கமும் இல்லாமல் இருப்பது போல் எண்ணம் தோன்றும். இவ்விதம் எண்ணங்களை கொண்டிருப்பவர்கள் ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள். இவ்வுலகில் பிறகும் பொழுது எவருக்கும் தனிப்பட்ட திறமை என்பது கிடையாது. இந்த மனிதர்கள் மிகவும் திறமை மிக்கவர். நான் திறமை அற்றவர் எனும் எண்ணத்தை முதலில் உங்கள் மனதில் இருந்து எடுத்து விடுங்கள். உங்கள் திறமையை மற்றவர் பாராட்டுவர் என எண்ணிக்கொண்டு இல்லாமல், உங்களை நீங்களே பாராட்ட பழகி கொள்ளுங்கள் யாரையும் உங்களுடன் ஒப்பிடாதீர்கள். உங்களுக்கு பிடித்தமான விஷயங்களை நீங்கள் செய்யுங்கள். மற்றவர்களை பாதிக்காத எந்த விஷயமானாலும் அதனை நீங்கள் தைரியமா செய்யலாம் உங்களுக்கு பிடித்தமான விஷயங்கள், புத்தகம் படிப்பது, பிறருடன் பேசுதல், இசையை ரசிப்பது, இயற்கையை ரசிப்பது என உங்களுக்கு பிடித்தமான விஷயங்களில் உங்கள் கவனத்தை செலுத்துங்கள்.

வாழ்க்கையைப் பற்றி சிந்திக்க வைத்த ஆழமாக வரிகள்!!!

 1.      நமது வாழ்க்கை முறையும் உணவு பழக்கமும் நம்மை "Live long Die Short" என்ற நிலையிலிருந்து "Live Short Die Long" என்ற நிலைக்கு கொண்டு சென்றுவிட்டது. 2.       "என் ஆசைகளை பூர்த்திசெய்ய முயற்சிப்பதை விட, அவற்றைக் கட்டுப்படுத்துவதன் மூலம் என் மகிழ்ச்சியைத் தேட கற்றுக்கொண்டேன்" I have learned to seek my happiness by limiting my desires, rather than attempting to satisfy them.

வாழ்க்கையில் துரோகங்களை எப்படி கடந்து செல்வது?

 ஒரு விவசாயி இரண்டு மாடுகளை வளர்த்தார். இரண்டு மாடுகளும்.. வயலில் உழுகவும் வேண்டும். சந்தைக்கு போக வண்டியையும் இழுக்க வேண்டும். சிலநேரம் எண்ணெய்செக்கிழும் சுற்ற வேண்டும். காய்ந்த வைக்கோலையும், வரப்பு ஓரத்தில் வளரும் புற்க்களையும் மட்டும் தான் உண்ண வேண்டும்.??? வேறு வழி..? இல்லவே இல்லை? சொறணை இல்லாமல், பொறுமையோடு இருந்துதான் ஆக வேண்டும்!! இப்படி ஒரு நல்ல ஜீவனுக்கு மனிதன் இட்ட பெயர்_மாடு!! வாழ்க்கையில் கூட சில நேரம் சில மனிதர்களால்.. மனிதனுக்கு கூட இந்த நிலை வருவது உண்டு. அந்த மனிதனுக்கு உலகம் இட்ட பெயர்_முட்டாள்! பிழைக்கத் தெரியாதவன்! பாமரன்!லூசு!! என்பதாகும். அன்றாடம் ஒவ்வொரு நிகழ்வுகளையும், அனுபவங்களையும், துரோகங்களையும், ஒவ்வொரு விதமாக ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அதாவது.. சில நேரம் சிரித்துக் கொண்டே, சில நேரம் அழுது கொண்டே, சில நேரம் தத்துவங்கள் பேசிக்கொண்டே, கடந்துதான் ஆகவேண்டும். வேறு வழி…?? இல்லவே இல்லை!!(இருக்கிறது)! வேறு வழி என்று ஏதாவது இருப்பதாக உங்களுக்குத் தோன்றுகிறதா?? அப்படி என்றால் நீங்கள் ஜெயித்து விட்டீர்கள். துரோகங்களை கடந்து செல்வது மட்டும் அல்ல-முறியடிக்கவும் உங்களா

மாணவன் என்பவன் எப்படி இருக்க வேண்டும்?

 சாக்ரடீஸிடம் ஒரு மாணவன் வந்தான். ''ஐயா, மாணவன் என்பவன் எப்படி இருக்க வேண்டும்?'' என்று கேட்டான். அதற்கு சாக்ரடீஸ், ''மாணவன் என்பவன், கொக்கைப்போல இருக்க வேண்டும். கோழியைப் போல இருக்க வேண்டும். உப்பைப் போல இருக்க வேண்டும். உன்னைப்போல இருக்க வேண்டும்'' என்றார். மாணவனுக்கு ஒன்றும் புரியவில்லை. ''கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள்'' என்றான். ''கொக்கு, ஒற்றைக் காலில் நீண்டநேரம் பொறுமையாக நிற்கும். மீன்கள் வந்தவுடன் விரைந்து செயல்பட்டுப் பிடித்துவிடும். அதுபோல, ஒரு மாணவன் சரியான வாய்ப்புக் கிடைக்கும்போது அதைப் பயன்படுத்தி, அரிய செயல்களைச் செய்ய வேண்டும்'' என்றார். ''கோழியைப்போல இருக்க வேண்டும் என்றீர்களே அதற்கு என்ன அர்த்தம்?'' என்று கேட்டான் மாணவன். ''கோழி என்ன செய்யும்? குப்பையைக் கிளறும். ஆனால், அந்தக் குப்பைகளை விட்டுவிட்டு தனக்குத் தேவையான உணவை மட்டும் எடுத்துக்கொள்ளும். அதுபோல, மாணவர்கள் தாம் சந்திக்கும் தீமைகளைத் தூரம் தள்ளி, நன்மைகளை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும்'' என்றார் சாக்ரடீஸ். '&

நம்புங்கள்_நல்லதே_நடக்கும்

 இரு மகள்களுக்கும், திருமணம் செய்வித்து, கடமையெல்லாம் முடிந்தது என கணவருடன், அமைதியான வாழ்வை ஒட்டிக்கொண்டிருந்தார் சாரதா. திடீரென ஒருநாள் கைகள் செயலிழந்தன. கணவரோ வயதானவர்.தனக்கான வேலைகளுக்கு கூட அடுத்தவரை எதிர்பார்க்க வேண்டிய நிலை. வேலைக்கு ஒரு பெண்ணை வீட்டோடு வைத்துக்கொண்டாள். இத்தனை நாள் கடமை தவறாது வாழ்ந்த எனக்கு இறைவன் இப்படி ஒன்றை செய்திருக்க கூடாதென நேரம் கிடைக்கும்போதெல்லாம் இறைவனை திட்டி தீர்த்தாள் . வேலைக்கு வந்த பெண் பொறுமையிழந்து பேசத்தொடங்கினாள். " இந்த நிலை ஒரு 10 வருடங்களுக்கு முன் ஏற்பட்டிருந்தால் எத்தனை வேலைகள் தடைப்பட்டிருக்கும்? எல்லாம் சரியாகவே நடக்கிறது. பிசியோதெரபி செய்து வருகிறீர்கள் சீக்கிரம் குணமடைய போகிறீர்கள். நான் இல்லமால் முன்பு செய்தது போல் வேலை செய்யத்தான் போகிறீர்கள். இந்த ஒரு வருடம் நீங்கள் மாதா மாதம் கொடுத்த 10 000/- என் திருமண செலவுக்கு மிகவும் பயனாயிருக்கும்.நான் ஒவ்வொரு நாளும் உங்களுக்கு நன்றி சொல்லிக்கொண்டே இங்கு வேலை செய்யும்போது, நீங்களும் இறைவனுக்கு நன்றி சொல்லிக்கொண்டே இருங்கள். விரைவில் குணமடைவீர்கள் என்றாள் . வயதில் சிறியவள் ஆனாலும், அவளி

சேரும் இடமறிந்து சேர்!!

Image
  *மனைவியின் முன் 10 நிமிடம் உட்காருங்கள் - வாழ்க்கை மிகவும் கடினமாக இருப்பதாக உணருவீர்கள்.* *குடிகாரனுக்கு முன் 10 நிமிடம் உட்காருங்கள் - வாழ்க்கை மிகவும் எளிதானது என்பதை உணர்வீர்கள்.* *சாதுக்கள் மற்றும் சன்யாசிகளுக்கு முன் 10 நிமிடம் உட்காருங்கள் - அனைத்தையும் தானமாக கொடுக்கவேண்டும் என்று உணர்வீர்கள்.* *அரசியல்வாதி முன் 10 நிமிடம் உட்காருங்கள் - நீங்கள் படித்தவை அனைத்தும் பயனற்றவை என்று உணர்வீர்கள்.* *ஆயுள் காப்பீட்டு முகவர் முன் 10 நிமிடம் உட்காருங்கள் - இறப்பது நல்லது என உணர்வீர்கள்.* *வணிகர்களுக்கு முன் 10 நிமிடங்கள் உட்காருங்கள் - உங்கள் வருமானம் மிகவும் குறைவாக இருப்பதை நீங்கள் நிச்சயம் உணர்வீர்கள்.* *விஞ்ஞானிகளுக்கு முன்பாக 10 நிமிடம் உட்காருங்கள் - உங்கள் சொந்த அறியாமையின் மகத்துவத்தை நீங்கள் உணர்வீர்கள்.* *நல்ல ஆசிரியர்களுக்கு முன் 10 நிமிடம் உட்காருங்கள் - மீண்டும் ஒரு மாணவனாக மாற வேண்டும் என்று நினைப்பீர்கள்.* *ஒரு விவசாயி அல்லது தொழிலாளியின் முன் 10 நிமிடம் உட்காருங்கள் - நீங்கள் போதுமான அளவு உழைக்கவில்லை என்பதை உணர்வீர்கள்.* *ஒரு சிப்பாயின் முன் 10 நிமிடங்கள் உட்காருங

உன்னை உயர்த்தும் 7 அதிசயம் ..!

  உன்னை உயர்த்தும் 7 அதிசயம் ..! 1) ஏழ்மையிலும் நேர்மை 2) கோபத்திலும் பொறுமை 3) தோல்வியிலும் விடாமுயற்சி 4) வறுமையிலும் உதவிசெய்யும் மனம் 5) துன்பத்திலும் துணிவு 6) செலவத்திலும் எளிமை 7) பதவியிலும் பணிவு வழிகாட்டும் ஏழு விஷயங்கள் 1) சிந்தித்து பேசவேண்டும் 2) உண்மையே பேசவேண்டும் 3) அன்பாக பேசவேண்டும். 4) மெதுவாக பேசவேண்டும் 5) சமயம் அறிந்து பேசவேண்டும் 6) இனிமையாக பேசவேண்டும் 7) பேசாதிருக்க பழக வேண்டும் நல்வாழ்வுக்கான ஏழு விஷயங்கள் 1) மகிழ்ச்சியாக இருக்க பழகுங்கள் 2) பரிசுத்தமாக சிரிக்ககற்று கொள்ளுங்கள் 3) பிறருக்கு உதவுங்கள் 4) யாரையும் வெறுக்காதீர்கள் 5) சுறுசுறுப்பாக இருங்கள் 6) தினமும் உற்சாகமாக வரவேற்கத்தயாராகுங்கள் 7) மகிழ்ச்சியாக இருக்க முயற்ச்சி மேற்கொள்ளுங்கள் கவனிக்க ஏழு விஷயங்கள் 1) கவனி உன் வார்த்தைகளை 2) கவனி உன் செயல்களை 3) கவனி உன் எண்ணங்களை 4) கவனி உன் நடத்தையை 5) கவனி உன் இதயத்தை 6) கவனி உன் முதுகை 7) கவனி உன் வாழ்க்கையை

உலகமே ஒரு தரவுச் சுரங்கம்!

 தரவுத் தொழில்நுட்பத் துறை என்பது கடந்த பத்தாண்டுகளில் மிகப் பெரிய வளர்ச்சியை அடைந்திருக்கும் துறையாகும்.  Data analyst (தரவு ஆய்வாளர்),  Data analysis (தரவு ஆய்வு),  Data analytics (தரவுப் பகுப்பாய்வு),  Big Data analytics (பெருந்தரவுப் பகுப்பாய்வு),  Data mining (தரவு அகழ்வு)  போன்ற சொற்களெல்லாம் சமீப காலத்தில் நாம் அதிகமாகக் கேள்விப்படுபவையாகும். இளைய தலைமுறையினர் இதைப் பற்றி அறிந்துகொள்ளவும் இது தொடர்பான துறையில் பணியாற்றவும் விரும்புகின்றனர். தரவு (Data) என்பதற்குத் தகவல்களைச் சேகரிப்பது, தகவல்களைப் பகிர்ந்துகொள்வது என்பது பொருள். அதாவது, ‘என் பெயர் குமரன், என் ஊர் சென்னை, நான் பட்டிமன்றத்தில் பேசிவருகிறேன்’ என்று ஒருவர் உங்களிடம் கூறினால், நீங்கள் உடனடியாக இந்தத் தகவலை உங்கள் மூளையில் சேமித்து வைத்துக்கொள்வீர்கள் அல்லது அவரைப் பற்றிய இந்தத் தகவல்களைப் பிறருடன் பகிர்ந்துகொள்வீர்கள். இதைத்தான் நமது தொழில்நுட்பம், சாதனங்கள், இயந்திரங்கள் செய்கின்றன. தரவுகளைச் சேமித்து வைப்பதைத் தவிர, அந்தத் தரவுகளைச் சில செயல்கள் மூலமாக முறைப்படுத்தும்போது (உதாரணமாக பகுப்பாய்வு செய்தல், இடப்பெயர்வு

ஒருவர் வாழ்வில் முன்னேற்றம் அடைவது எதைப் பொருத்தது.?"

 ஞானி ஒருவரிடம் ஒருவர் கேட்டார். "ஒருவர் வாழ்வில் முன்னேற்றம் அடைவது எதைப் பொருத்தது.?" ஞானி சொன்னார். "அது நீங்கள் கழுதையா? எருமையா? குதிரையா? என்பதைப் பொருத்தது. எப்படி என்றால், ஒரு தட்டு தட்டினால், கழுதை பின்னால் எட்டி உதைக்க்கும். எருமை அப்படியே நிற்கும். குதிரை பாய்ந்து ஓடும். அதுபோல யாராவது ஒருவர் ஒரு திட்டினால், சிலர் மீண்டும் திட்டுவார்கள். சிலர் கண்டுகொள்ளாமல் இருந்துவிடுவார்கள். ஆனால் ஒரு சிலர் மட்டுமே வாங்கிய திட்டுக்கும் அவமானத்திற்கும் நேர் எதிராய் செயல்படுவார்கள். குதிரையைப் போல பாய்ந்து ஓடுவார்கள். பின்னால் எட்டி உதைப்பதும், சரிக்கு சரியாய் சண்டைக்கு நிற்பதும் ஒன்றே. சக்தி முன்னோக்கி பாயாததால் இவர்களிடம் முன்னேற்றம் இருக்காது. கண்டுகொள்ளாமல் இருப்பதும் வாயை மூடிக் கொண்டிருப்பதும் ஒன்றே. இவர்கள் வாழ்வு வெறுமையாகத்தான் இருக்கும். முன்னோக்கி ஓடுவதும், திட்டியவரின் மீது வஞ்சம் கொள்ளாமல், அதையும் தன்னை திருத்திக்கொள்ளும் வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்வதும் ஒன்றே.. போற்றுவார் போற்றட்டும்.... தூற்றுவார் தூற்றட்டும்.... நம் கடமையை தொடர்ந்து செய்வோம் நம் வளர்ச்சியை ய

அஜினோமோட்டோவை தவிர்ப்போம்...

 அஜினோமோட்டோ எப்படி ஒரு உணவின் சுவையை கூட்டுகிறது.? அது உடலுக்கு தீங்கு விளைவிப்பதாக ஏன் கூறப்படுகிறது? அஜினோமோட்டோ என்னும் ஒரு சுவை கூட்டும் உப்பு... அதை சர்க்கரை என்றும் சொல்லலாம்...! பொதுவாக எல்லா சீன வகை உணவுகளில், சுவை கூட்ட சேர்க்கப்படும் இந்த அஜினோமோட்டோ பற்றி, நாம் என்ன அறிந்து வைத்திருக்கிறோம் என்றால்... அது லைட்டா தூவி விட்டால், டேஸ்ட் இல்லாத உணவு கூட ருசிக்கும். ஆனால் அதிகமாக யூஸ் பண்ணினால் முடி கொட்டும் அவ்வளவு தான் என்று... ஆனால் உண்மையில் இதன் வரலாற்றை அறிந்தால்? அஜினமோட்டோ என்பது நாம் நினைப்பது போல, அது ஒரு கடல் உப்பின் பெயரல்ல... அது ஒரு கம்பெனியின் பெயர் , ஜப்பானில் 1917 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தின் பெயரே அதன் பொருளுக்கும் ஒட்டிக்கொண்டது.. உண்மையில் இந்த உப்பின் பெயர் #MonosodiumGlutamate ( #MSG ) என்பதாகும், இதனை மருத்துவ உலகில் #SlowKiller என்கிறார்கள்.. ஜப்பான் தலைநகர் டோக்கியோ, சிவோவை தலைமையிடமாக கொண்டு, கிகுனே இகெடா என்பவரால், 1917ல் இந்த அஜினோமோட்டோ தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டது, அப்போது கடல் படுகைகளில் வளரும் ஒரு பூஞ்சை மற்றும் பாசி செடி ( Seaweed ) வ

Pizza

Image
  இந்தியாவைச் சேர்ந்த ஒரு ஐடி பையன் அமெரிக்காவுக்குச் சென்றான்,  அவனுடைய பெரும்பாலான நண்பர்களைப் போலவே, அவனும் ஒரு நல்ல உணவகத்தில் பீட்சாவை அனுபவிக்க விரும்பினான். . .  அவர் * 9 இன்ச் பீட்சா * ஆர்டர் செய்தார். சிறிது நேரம் கழித்து, பணியாள் * இரண்டு 5-இன்ச் பீட்சாக்களை * கொண்டுவந்து, 9-இன்ச் பீட்சா * _இல்லை_ * இல்லை, அதற்கு பதிலாக * இரண்டு 5-இன்ச் பீட்சாக்களை * அவருக்குக் கொடுப்பதாகவும், மேலும் நீங்கள் 1 இன்ச் பீட்சா அதிகமாகப் பெறுவதாகவும் கூறினார். பணியாளரிடம்  உணவக உரிமையாளரை அனுப்புமாறு ஐடி பையன் பணிவுடன் கேட்டுக் கொண்டான்.  ஒரு வட்டத்தின் பரப்பளவைக் கணக்கிடுவதற்கான கணித சூத்திரத்தை இந்தியர் அவருக்கு வழங்கினார்.  வட்டப் பகுதி = * π r² *  இங்கு * π = 3.1415926 *, * r * என்பது வட்டத்தின் * ஆரம் * ஆகும்.  எனவே, * 9-அங்குல வட்டப் பகுதி * = * 63.62 சதுரடி .*  * 5-அங்குல வட்டப் பகுதி * * 19.63 சதுரடி. *  * இரண்டு 5-அங்குல வட்டப் பகுதிகள் * * 39.26 சதுர. .in *.  நம்ம ஆளு சொன்னான், மூணு பீஸ்ஸா கொடுத்தாலும் நஷ்டம் தான்.  "எனக்கு கூடுதல் இன்ச் இலவசம் என்று எப்படிச் சொல்ல முடியும்?" உ

நல்லதை மட்டுமே விதைப்போம்!!

  ஒரு   கிராமத்தில்   ராமசாமி   என்பவர்   வாழ்ந்து   வந்தார் .. அவர்   வீட்டுத்   தோட்டத்தில்   சில   முருங்கை   மரங்கள்   இருந்தது . வாரம்   ஒரு   முறை   முருங்கை   காய்களை   பறித்து ,  பையில்   நிரப்பி   தோளில்   வைத்துக்கொண்டு  .... ஒன்பது   கிலோமீட்டருக்கு   அப்பால்   இருக்கும்   டவுன்   வரை   நடந்து   சென்றே ... ரெகுலராக   ஒரு   மளிகை   கடையில்   விற்றுவிட்டு   வருவது   வழக்கம் முருங்கை   காயை   கொடுத்துவிட்டு   அதற்கு   பதிலாக   அரிசி   பருப்பு   சர்க்கரை   போன்ற   வீட்டுக்கு   தேவையான   பொருட்களை   வாங்கி   வருவார் ! ராமசாமி   கொண்டுவரும்   முருங்கைக்காயின்   சுவை   அந்த   பகுதி   மக்களிடையே   மிகவும்   பிரபலம் ! இதை   பயன்படுத்தி   மற்ற   முருங்கைக்காயோடு   கலந்து   மளிகை   கடைக்காரரும்   நல்ல   லாபம் சம்பாதித்து   விடுவார் ! பல   வருடமாக   ராமசாமி   முருங்கைக்காய்   கொண்டுவருவதால்   மளிகை   கடைக்காரர்   அதை   எடை   போட்டு   பார்த்ததில்லை ; ராமசாமி   சொல்கின்ற   எடையை   அப்படியே   நம்பி   அதற்கு   ஈடான   மளிகை   பொருட்களை   கொடுத்து   அனுப்புவார் ! காரணம்   ராமசாமியின்   நேர்மை