Posts

Showing posts from June, 2022

பணக்காரர் ஆக வேண்டுமென்றால் நான் செய்யக் கூடாதது என்ன?

 இன்றைய காலக்கட்டத்தில் கோடிகள் எல்லாம் ரஜினி ஸ்டைலில் சொல்ல வேண்டும் என்றால் ஜுஜுபி மேட்டர். 30 அல்லது 32 வயதுக்குள் ஒருவர் கோடீஸ்வரராக முடியுமா? என் அனுபவத்தில் முடியும் என்பதே பதில். இந்த உலகில் பணத்துக்கு மட்டும் எப்போதுமே பற்றாக்குறை வருவதில்லை. பணத்தைப் பற்றிய நம் எண்ணங்களுக்குத்தான் பற்றாக்குறை. சரி கோடீஸ்வரராக என்ன செய்யவேண்டும் என்பதுக்கு பதில் என்ன செயக்கூடாது என்பதை இங்கே பார்ப்போம். சோம்பேறியாக இருக்கக்கூடாது: பணக்காரர் ஆவதற்கு , கடும்உழைப்பு அவசியம் உங்கள் தொழிலில் மிகவும் விருப்பத்துடன் கடின உழைப்பை செலுத்துவேண்டும். அதிர்ஷ்டத்தினால் பணக்காரர் ஆவது முடியாது என்பதை அறிந்திருக்கவேண்டும். நினைவில் கொள்ளுங்கள் நாளை என்றுமே வருவதில்லை. கடனுக்கு ‘நோ’: உங்கள் வளர்ச்சியில் 'கடன்' என்ற வார்த்தையே இருக்கக் கூடாது. அது உங்களுக்கு மேலும் சம்பாத்தியத்தைப் பெற்றுத் தராது; வட்டித் தொகையை அதிகரித்து உங்களின் சேமிப்பையும் வளர்ச்சியையும் பதம் பார்த்து விடும். உங்கள் லட்சியத்தை அடைந்த பிறகு, கடன் வாங்கி அதை சுழற்சி செய்வது வேறு விஷயம். கடனுக்கு "நோ" என்றால் கடன் கொடுப்பதைய

பணம் இருக்கிறது என காட்டிக்கொள்ள சிலர் செய்யும் வேடிக்கையான விஷயம் என்ன?

தங்க சங்கிலியை வெளியே தெரியும்படி இரண்டு மூன்று பட்டன்களை அவுத்துவிடுவது.. ஒரே விரலில் 2 அல்லது 3 மோதிரம் மாட்டிக்கொள்ளுவது,, ( அதில் ஒன்று பாம்பு வடிவில் ). வெள்ளை கதர் சட்டையில் 2000, 500 ரூபாய் தெரியும்படி வைப்பது.. குடும்பத்தோடு வெளியே செல்லும் போது காலையில் பெரிய ஹோட்டல்களில் சாப்பிடுவது அதை அக்கம் பக்கத்தினரிடம் பந்தாவா சொல்லி கொள்ளுவது.. எதாவுது வெளியூர் சென்றால் அங்கு உள்ள ஹோட்டலில் வைக்கப்படும் சோப்பு, ஷாம்பு, லாண்டரி பாக், சீப்பு இவையெல்லாம் ஆட்டைய போட்டு கொண்டு வந்து மற்றவர்களிடம் பெருமையா இந்த ஹோட்டலில் தங்கினோம் என்று இவர்களே வழிய வந்து கூறுவது. தினமும் கறி சோறு இல்லாமல் சாப்பாடு இறங்ககாததை போல காட்டி கொள்ளுவது. தமது சக்திகும் மீறி நம்ம சொந்தக்காரங்க வாய் அடைத்து போகும்படி அடுத்த வீட்டை பார்த்து பெரிய பள்ளிக்கூடத்தில் குழந்தைகளை சேர்ப்பது. ( பிறகு வருத்தபடுவது ). வாங்கும் சம்பளதை விட வெட்டி பந்தா காட்டுவதற்கு கிரெடிட் கார்டு, ஹோம் loan, பர்சனல் லோன் இப்படி எல்லா லோன்யும் வாங்கிட்டு வெளியேயும் சொல்ல முடியாமல் மாட்டி கொண்டு அவஸ்தை படுவது. எனக்கு அவனை தெரியும் இவனை தெரியும் எ

பணம்தான் எல்லாமா? - மெக்ஸிகன் மீனவன் கதை

 நீங்கள் மெக்ஸிகன் மீனவன் கதையை அறிந்துள்ளீரா? ஒரு அமெரிக்க முதலீட்டு வங்கி அதிகாரி மெக்ஸிகோவில் உள்ள சிறிய கடற்கரை கிராமத்திற்கு சென்றார். அப்போது ஒரு மீனவர் சிறிய படகு முழுக்க சூரை (Tuna fish ) மீன்களுடன் கடலில் இருந்து திரும்புவதை பார்த்தார். அந்த மீன்களின் தரத்தை கண்டு வியந்த அந்த அமெரிக்கர், இதை பிடிக்க எவ்வளவு நேரம் ஆனது என கேட்டார். அதற்கு அந்த மீனவர், “சிறிது நேரம் தான் ஆனது" என கூறினார். நீங்கள் ஏன் கடலில் அதிக நேரம் செலவிட்டு அதிக மீன்களை பிடிக்கலாமே? என வினவினார். அதற்கு அந்த மீனவன், அவன் குடும்பத்தை காப்பாற்ற இதுவே போதுமானது என்றான். “ அப்படியானால் மற்ற நேரம் என்ன செய்கிறீர்கள்” என அமெரிக்கர் கேட்டார். மீனவனோ “நான் காலை தாமதமாக எழுவேன். சிறிது நேரம் மீன் பிடிப்பேன், குழந்தைகளுடன் விளையாடுவேன், மதியத்தில் மனைவியுடன் குட்டி தூக்கம், பிறகு மாலை கிராமத்தில் சற்று மது அருந்துவேன். சில நேரங்களில் நண்பர்களுடன் guitar வாசிப்பேன். எனது நாள் முழுக்க மும்முரமாக இருக்கும்” அமெரிக்கர் ஒரு ஆலோசானை கூறினார் “ நான் ஹார்வர்ட் இல் MBA கற்றேன். உனக்கு நான் உதவ நினைக்கிறன். நீங்கள் செய்ய

செக்கு மாடு போல - சிறந்த கதை

 பல சமயங்களில் நாம் நமது சக்தியை உணராமல் ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு பழக்கப்பட்ட வேலைகளை மட்டுமே அது தான் நம்மால் முடியும் என்று கருதி செய்து வருகிறோம். நாம் சாதிக்கக் கூடியவை எண்ணற்றவை. முடிவற்றவை. ஆனால் நம்மில் பலருக்கு அது கண்டுபிடிக்கப்படாமலே போய் விடுகிறது. வாழ்க்கையில் எப்போதுமே திருப்புமுனைகள் அவசியம். அவை இல்லாவிட்டால் சுவாரஸ்யம் இல்லாமல் போய் விடும். தடைகள் வர வேண்டும். அவற்றை மீறி கடந்து செல்ல வேண்டும். வெல்ல வேண்டும். இல்லாவிட்டால் செக்குமாடு போல ஒரே இடத்தில் உழன்றுக் கொண்டிருப்போம். மாற்றுவழி –வேறு மார்க்கம் பற்றிச் சிந்திக்கத் தோன்றாது. ஒரே இடத்தில், மிகச் சுலபமான, ஒரே வேலையை செய்வதிலே தான் நாம் ஆர்வம் செலுத்துகிறோம். ஆகையால் தான் பலருக்கு வாழ்க்கை ஒரு உற்சாகமான, மன நிறைவான ஒன்றாக இல்லாமல் மிகச் சாதாரணமாகக் கழிந்து விடுகிறது. மிகப் பெரிய சக்கரவர்த்தி அவன். அவனுக்குக் கீழ் பல சிற்றரசுகள் உள்ளன. ஒரு முறை இந்த அரசனின் அவைக்கு வருகை தந்த சீன தேசத்து அறிஞர் ஒருவர் தாயை இழந்த இரண்டு பஞ்சவர்ணகிளிக் குஞ்சுகளைப் பரிசளித்து விட்டுச் சென்றார். பஞ்சவர்ணக் கிளியை அதிர்ஷ்டத்தின் சின்னம

5 ஏக்கர்... ஆண்டுக்கு ரூ.12,50,000 அருமையான லாபம் கொடுக்கும் அடர்நடவு கொய்யா!

Image
  வெளிநாட்டு வேலை... லட்சங்களில் வருமானம்... ஆனால், அவை அனைத்தையும் உதறிவிட்டு பலரும் இயற்கை விவசாயம் பக்கம் திரும்பி வருகின்றனர். அந்த வரிசையில், சுந்தர்ராஜ - சாந்தி தம்பதியர் தாங்கள் பார்த்துக்கொண்டிருந்த ஐ.டி வேலையை உதறிவிட்டு, தற்போது முழு நேரமாக இயற்கை விவசாயத்தில் இறங்கி அசத்தி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியைத் அடுத்துள்ள, ரெகுநாதபுரத்திலிருந்து 5 கி.மீ தொலைவில் இருக்கிறது காடம்பட்டி. அங்குதான் இருக்கிறது இவர்களுடைய கொய்யாத் தோட்டம். 5 ஏக்கரில் கொய்யா நடவு செய்து அதில் நல்ல வருமானம் ஈட்டிக்கொண்டிருக்கின்றனர். ஒரு காலை வேளையில், கொய்யா அறுவடையில் தீவிரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்த சாந்தியைச் சந்தித்தோம். “நான் பொறந்து வளர்ந்தது எல்லாம் சேலம். ‘இன்ஜினீயரிங்’ முடிச்சிட்டு ‘எம்.பி.ஏ’ பண்ணுனேன். அதற்கப்புறம் ஒரு ‘சாஃப்ட்வேர் கம்பெனி’யில வேலைக்குப் போயிட்டேன். இடையில, திருமணம் ஆச்சு. கணவருக்கும் நான் வேலை செய்ற ‘ஐ.டி’ துறையிலதான் வேலை. சில வருஷங்கள்ல ரெண்டு பேரும் தனியாக ‘சாஃப்ட்வேர் கம்பெனி’ ஆரம்பிச்சு நடத்துனோம். கிட்டத்தட்ட 30 வருஷம் ரெண்டு பேரும் ‘ஐ.டி பீல்டு’ல இருந்து

பிடிவாதம் சிறந்த கதை

 பிடிவாதம் கொண்ட சிறுமி       ஒரு ஊரில் கீதா என்ற ஒரு சிறுமி இருந்தாள். அவள் நன்றாகப் படிப்பாள், அவளிடம் கொடுக்கும் வேலையை சரியாக செய்து முடிக்கும் திறமைசாலியானவள், பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரிடமும் அன்பாகவும், பணிவாகவும் நடந்து கொள்வாள்.     ஆனால் கீதாவின் பிடிவாத குணம் மட்டும் யாருக்கும் பிடிக்கவில்லை. கீதா அவள் அம்மா, அப்பாவிடம் எது கேட்டாலும் உடனே வாங்கி தந்துவிட வேண்டும். இல்லாவிட்டால் வீட்டையே போர்க்களம் போல ஆக்கிவிடுவாள்.        அடுத்த நாள் கீதாவின் பிறந்தநாள். ரொம்ப நாட்களாகக் கேட்டுக்கொண்டிருந்த விலை உயர்ந்த கைக்கடிகாரத்தை அன்றே வாங்கித் தரச்சொல்லி அடம்பிடித்தாள்.         கீதாவின் பெற்றோர் தங்கள் சூழ்நிலையைக் கூறி, அடுத்த மாதம் வாங்கித் தருகிறேன் என்றனர். அதெல்லாம் முடியாது நான் பள்ளிக்கூடத்திற்கு சென்று வீட்டிற்கு வரும்போது நான் கேட்ட கைகடிகாரம் வேண்டும். இல்லாவிட்டால் நடப்பதே வேறு என்று சொல்லிவிட்டுச் சென்றாள்.     கீதாவின் பெற்றோர் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தனர். பள்ளி முடிந்ததும் கீதா வீட்டிற்கு வந்து கொண்டிருந்தாள். அப்போது திடீரென்று மழை பெய்யத் தொடங்க

உன் பலம் என்ன? சிறுகதை

 நீதிக்கதை     ஓர் ஆலமரத்தில் குயில் ஒன்று வசித்துவந்தது. ஒருநாள், இரண்டு வழிப்போக்கர்கள் அந்த மரத்தடியில் இளைப்பாறியபோது, குயிலைப் பார்த்தார்கள்.        தன் முட்டையைக்கூட அடைகாத்துக் குஞ்சுப் பொரிக்காமல், காகத்தின் கூட்டில் இடும் சோம்பேறி’’ , என்றார்கள்.       அதைக் கேட்ட குயில், ‘நான் சோம்பேறி பறவைதானா?’ என்று வருத்தப்பட்டது. மற்ற பறவைகளைப் பற்றி மனிதர்கள் கருத்தைத் தெரிந்துகொள்ள விரும்பியது.      அந்த மரத்தில் வந்துமர்ந்து ஆலம்பழத்தைக் கொறித்த கிளி, “தத்தை மொழி பேசும் கிள்ளை என என்னைப் புகழ்வார்கள்” என்றது.      கோயில் மண்டபத்தில் வசித்து புறா, “கொஞ்சும் புறா, சமாதானத் தூதுவன் எனப் பெருமையாப் பேசுவாங்க” என்றது.       குயில் அடுத்ததாக மொட்டைப் பாறை மீது நின்றிருந்த மயிலிடம் சென்றது. “நான் தோகை விரித்தாடினால் காணக் கண்கோடி வேண்டும்னு பாராட்டுவாங்க!” என்றது.      அடுத்ததாகச் சிட்டுக்குருவி, “என்னைப் பார்த்துத்தான் சுறுசுறுப்பைக் கத்துக்கணும்னு மனுஷங்க பேசிப்பாங்க!” என்றது.        இப்படிக் குயில் சந்தித்த பறவைகள் அனைத்தும் தங்களைப் பற்றி மனிதர்கள் உயர்வாகப் பேசுவதாகத் தெரிவித்தன.