Posts

Showing posts from July, 2017

ஐ.டி துறையில் கிராமத்துப் பெண்கள்... - வெற்றிவாசல் திறக்க வழிகள்!

Image
உன்னால் முடியும்! ஆர். ஜெயலெட்சுமி கி ராமத்துப் பெண்களுக்குக் கல்வி தரும் முன்னேற்றம்... கண்ணுக்கும் கருத்துக்கும் பேரழகு! குறிப்பாக, ஐ.டி துறைப் பணிகளில் சேரும் சிறுநகரங்கள் மற்றும் கிராமப்புறத்தைச் சேர்ந்த பெண்கள், குறுகிய காலத்திலேயே கைநிறைய சம்பளத்துடன் ஊருக்குள் தங்கள் குடும்பங்களை உயர்த்திக்காட்டும் காட்சிகள் இப்போது காணக்கிடைக்கின்றன. ஆனாலும், மெட்ரோபாலிட்டன் நகரத்து ஹைடெக் அலுவல் சூழல், இந்தப் பெண்களுக்குத் தரும் தயக்கங்களும் தடைகளும் பிரச்னைகளும் நிறைய.    கலாசார அதிர்ச்சி, ஆடை மற்றும் ஆங்கில அறிவு விஷயத்தில் கொள்ளும் தாழ்வுமனப்பான்மை, சக ஊழியர்களுடன் இயல்பாகப் பழகுவதில் உள்ள இடைவெளி... ஐ.டி பணியில் இருக்கும் கிராமத்துப் பெண்களின் பிரதானப் பிரச்னைகள் இவை. இந்தப் பிரச்னைகளைக் களையும் வழி சொல்கிறார்கள், அனுபவசாலிகளும் துறைசார்ந்த நிபுணர்களும். ``திறமையை நிரூபிச்சுட்டா அங்கீகாரம் நிச்சயம்!’’     ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த முத்துராஜி, ``இதுவரை பிரபலமான மூன்று ஐ.டி நிறுவனங்கள்ல வேலைபார்த்திருக்கேன். இப்போது குழந்தைக்காகக் கொஞ்சம் பிரேக் எடுத்திருக்கேன்.