Posts

Showing posts from September, 2021

எந்த திறன்களை வளர்த்துக் கொண்டால் இரண்டாவது வருமானம் பார்க்க முடியும்?

கடும் உழைப்பு, நேர மேலாண்மை என்று பொதுவான ஒரு பதிலை கொடுத்து ஜல்லி அடிக்க விரும்பவில்லை. எனக்கு எப்பொழுதும் Measurable Results என்பதில் தான் நம்பிக்கை உண்டு. உங்கள் இளம் பிராயத்தில் விளையாட்டாய் கற்றுக் கொண்ட சில விஷயங்கள் உங்களுக்கு இரண்டாவது வருமானத்துக்கு பிள்ளையார் சுழி போடலாம். ஆனால் அந்த திறமையை நீங்கள் அறிந்து கொள்வது மிக முக்கியம். அப்பொழுது தான் "நாங்க இருக்கோம், நம்பி வாங்க!" என்று மற்றவரையும் நீங்கள் நம்ப வைக்க முடியும். சரி வாங்க, பதிலுக்கு போவோம். 1.ஸ்பானிஷ், ஜெர்மன், ஜப்பானிய மொழி என்று ஏதாவது ஒன்று சான்றிதழ் பெற்றிருந்தால், மாலை நேரத்தில் மொழி ஆசிரியராகி விடலாம். ஸ்கைப்பிலேயே பாடம் எடுத்து டாலரில் சார்ஜ் செய்யலாம். எனக்கு தெரிந்த ஒருவர் ஜெர்மன் மொழி பெயர்ப்பாளராக முழு நேர பணியே செய்தார். 2. நீங்கள் சிலம்பம், களரி என்று தெரிந்து வைத்திருந்தால், நான்கு நண்பர்களுடன் ஒரு சிறிய பயிற்சி நிறுவனத்தை தொடங்கி விடலாம். அமெரிக்க நேரத்துக்கு நீங்கள் சிலம்ப ஆசானாக மாறி, நிஜமாகவே கம்பு சுத்தலாம். வரும்படியும் வரும். மாதம் 50 டாலர் - 50 மாணவர்கள். இந்திய மதிப்பில் கணக்கிட்டு க

அன்று இன்று

* அன்று * ஒரு அறை உள்ள வீட்டில் ஐந்து பத்து பேர் ஒன்றாக வாழ்ந்தோம் * இன்று * ஐந்து பத்து அறை உள்ள வீட்டில் ஒருவர் இருவர் மட்டும் வாழ்கிறோம் * அன்று * ஆயிரம் பேருக்கு உதவி செய்தவன் யாரிடமும் விளம்பரம் இல்லாமல் வாழ்ந்தார் * இன்று * ஒரு நபருக்கு உதவி செய்தவனை ஆயிரம் பேர் தெரிந்து கொள்கிறார்கள் * அன்று * வயறு நிரப்புவதற்காக பல கிலோமீட்டர் தூரம் நடந்து வேலைக்கு சென்றோம் * இன்று * வயறு குறைப்பதற்காக பல கிலோ மீட்டர் தூரம் நடைப்பயிற்சி செய்கிறோம் * அன்று * வாழ்வதற்காக சாப்பிட்டோம் * இன்று * சாப்பிடுவதற்காக வாழ்கிறோம் * அன்று * வீட்டிற்குள் உணவருந்திவிட்டு கழிவறையை வெளியே பயன்படுத்தினோம் * இன்று * வெளியே உணவருந்திவிட்டு கழிவறையை வீட்டுக்குள் பயன்படுத்துகிறோம் * அன்று * மானம் காப்பதற்காக உடை அணிந்தோம் * இன்று * மானத்தை வெளியுலகத்திற்கு காட்டுவதற்காக உடை அணிகிறோம் * அன்று * கிழிந்த ஆடைகளை தைத்து பயன்படுத்தினோம் * இன்று * தைத்த ஆடைகளை கிழித்து பயன்படுத்துகிறோம் * அன்று * இருப்பதை வைத்து பண்டிகை காலத்தை கொண்டாடினோம் * இன்று* பண்டிகைக்கு ஏற்றது போல் கொண்டாடுகிறோம் * அன்று * ஆசிரியரிடமிருந்து உதை வாங

தொழில் முனைவோர் (Entrepreneur), தொழில் அதிபர் (Business man) வேறுபாடு என்ன?

Image
தொழில்முனைவோர் மற்றும் தொழிலதிபர், பெரும்பாலும் இவை இரண்டுமே கிட்டதட்ட ஒன்றுதான், இருப்பினும் சில எளிய வேறுபாடுகள் உள்ளன: இந்த எளிய வேறுபாடுகளை ஒரு எளிய எடுத்துக்காட்டுடன் விளக்குகிறேன். மேலே குறிப்பிட்ட படத்தில் உள்ளது போல்   ஒரு வணிகர் அதாவது தொழிலதிபர்   அவரின் என்னங்கள் எப்போதும் பணப்புழக்கம், இலாபம் இவைகளை சுற்றியே கவனம் இருக்கும். இவர்கள் பாரம்பரிய வியாபாரம் அல்லது தொழில் செய்பவர்கள். இங்கே ரிஸ்க் குறைவு. உதாரணம்: திருபாய்/முகேஷ் அம்பானி, அல்லது டாடா, பிர்லா போன்றோர்கள். ஒரு தொழில்முனைவோராக இருக்கும்போது:   ஆக்கபூர்வமான சந்தைப்படுத்தல், புதிய யோசனைகள், ஒரு குழுவை உருவாக்குதல், மக்களுடன் இணைத்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்துவது முக்கியம். இவர்கள் பாரம்பரிய வியாபாரம் முறையில் இருந்து வேறுப்பட்டு தனக்கென ஒரு தனித்துவமையுடன் அதே நேரம் மக்களின் தேவை புரிந்து செயல் படுபவர்கள். இதில் ரிஸ்க் அதிகம். மேலே படத்தில் குறிப்பிட்டது போல், கொய்யா பழத்தை கொள்முதல் செய்து, அதில் உப்பு, மிளகாய் சேர்த்து விற்பவர். இங்கே மக்கள் இடத்தில் அவர் கொடுக்கும் உப்பு மிளகாய் கலந்த கொய்யாப்பழம் பிடித்து விட்டால

கேட்டது ஒன்று,! கிடைத்தது ஒன்று!!

ஆண்டவனிடம் வலிமை கேட்டேன்!கஷ்டங்களைக் கொடுத்தார்!! எதிர்கொண்டேன், வலிமை பெற்றேன். அறிவு கேட்டேன்! பிரச்சினைகளைக் கொடுத்தார்!! சமாளித்தேன் அறிவு பெற்றேன். தைரியம் கேட்டேன் ! ஆபத்துக்களைக் கொடுத்தார் !! சந்தித்து மீண்டேன்,தைரியம் பெற்றேன். அன்பு கேட்டேன் ! வம்பர்களைக் கொடுத்தார் அனுசரித்து சென்று வம்பர்களின் அன்பையும் பெற்றேன். வளமான வாழ்வு கேட்டேன்! சிந்திக்கும் மூளையைக் கொடுத்தார்.வளமான வாழ்வு கிடைத்தது. கேட்டது ஒன்று,! கிடைத்தது ஒன்று!! கிடைத்ததை வைத்து கேட்டதைப் பெற்றேன். வாழ்க🙌 வளமுடன் * அன்பே🔥சிவம் *

What is Maturity of Mind ?

 #மன முதிர்ச்சி என்றால் என்ன?* What is Maturity of Mind ? * 1. மற்றவர்களை திருத்துவதை விட்டு விட்டு நம்மை திருத்திக்கொள்வது. 1. Correcting ourselves without trying to correct others. 2. அனைவரையும் அப்படியே (குறைகளுடன்)     ஏற்றுக் கொள்வது. 2. Accepting others with their short comings. 3. மற்றவர்களின் கருத்துக்களை அவர்கள் கோணத்திலிருந்து புரிந்துகொள்ளுதல். 3. Understanding the opinions of others from their perspectives. 4. எதை விட வேண்டுமோ அதை விட பழகி கொள்தல். 4. Learning to leave what are to be avoided. 5. மற்றவர்களிடமிருந்து எதிர்பார்ப்பதை விடுதல். 5. Leaving the expectations from others. 6. செய்வதை மன அமைதியுடன் செய்வது. 6. Doing whatever we do with peace of mind. 7. நம் புத்திசாலித்தனத்தை மற்றவர்களிடமநிரூபிப்பதை விடுவது. 7. Avoiding to prove our intelligence on others. 8. நம் செயல்களை மற்றவர் ஏற்க வேண்டும் என்ற நிலையை விடுதல். 8. Avoiding the status that others should accept our actions. 9. மற்றவர்களுடன் நம்மை ஒப்பிடுவதை விடுதல். 9. Avoiding the comparisons of ourselves with others

செய்யும்_தொழிலே_சிறந்தது!!!

பரந்தாமன் கல் உடைப்பவன். கல் உடைப்பதைவிட நல்ல வேலை கிடைக்கக் கடவுளை வேண்டினான். ஒரு நாள் அவன் முன்னால் கடவுள் தோன்றி 'உனக்கு என்ன வேண்டும்' என்றார்'. 'சூரியன் உலகம் முழுக்கத் தெரியும், நானும் அவ்வாறு தெரிய ஆசைப்படுகிறேன் எனவே 'சூரியனாக வேண்டும் ' என்றான். கடவுள் சம்மதம் தெரிவிப்பதற்குள் சூரியனை மேகம் மறைத்தது.  உடனே 'மேகம்'ஆக வேண்டும்' என்றான். மேகத்தை மழை மேகங்கள் மறைக்க, தான் 'மழை மேகமாக' ஆக வேண்டும் என்றான். மேகம் மழையாகப் பெய்தபின் 'மழையாக' வேண்டும் என்றான். மழைநீர் நதியாக ஓடியதைப் பார்த்து 'நதியாக மாறவேண்டும்' என்று ஆசைப்பட்டான். ஓடி வந்த நதியை ஒரு பெரிய பாறாங்கல் தடுத்ததைப் பார்த்து 'கல்லாக வேண்டும்'என்றான். உடனே கடவுள் அந்தக் கல்லையே உடைக்கும் நீ சிறந்தவன் தானே..என்றார், சற்று சிந்தித்த பரந்தாமன் ஆமாம்..ஆமாம்..என்றான். #சிரித்த_கடவுள் 'இருக்கும் இடமே சொர்க்கம்' 'இருக்கும் நிலையே நல்ல நிலை' 'செய்யும் தொழிலே சிறந்த தொழில்' என்பதை அனைவரும்  உணர்ந்து கொள்ள வேண்டும் என்றார்.

புண்ணியம் என்பது என்ன?

*நம்மிடம் உள்ளதை நம்மால்முடிந்ததை செய்வது.* மற்றவர்கள் நல்லாயிருக்க வேண்டும் என்ற எண்ணம் படைத்தவன் மட்டுமே புண்ணியத்தைச் செய்ய வேண்டும் என்று நினைப்பான். அப்படிப்பட்ட நல்ல மனம் ஒன்றே போதும் புண்ணியம் செய்வதற்கு. ஆம். புண்ணியம் செய்ய மனம் வேண்டுமே தவிர பணம் தேவையில்லை. உங்கள் மனம் நல்லதையே நினைக்கட்டும் அதுவும் மற்றவர்களுக்காக இருக்கட்டும். *இது தான் புண்ணியம்.* மற்றவர்களின் துக்கங்களை உங்களது என்று எண்ணி வருந்துங்கள். உங்களுக்கு கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை மற்றவர்களுக்காகவாது கிடைக்கட்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள். அனைத்து உயிர்களுக்கும் உங்களுக்கும் தொடர்பு உண்டு என்று எண்ணிக் கொள்ளுங்கள். உங்களால் அனைவருக்கும் அன்பான ஆதரவான எண்ணங்களை அளிக்க முடியும் என்று எண்ணுங்கள். உங்கள் எண்ணங்கள் அனைத்தையும் நிறைவேற்றும் என்று நம்புங்கள். இறைவனை துணைக்கு அழையுங்கள். மற்றவர்களுக்காக உதவ இறைவனிடம் வேண்டுங்கள். தன்னல மற்ற எண்ணத்தை இவ்வுலகில் பரவ விடுங்கள். அனைவரும் உங்களுக்கு அன்பானவர்களாக மாறிவிடுவார்கள். உங்கள் உள்ளம் மகிழ்ச்சியாகி விடும். அனைவரும் நம்மதியாக வாழ்வார்கள் அந்த மகா புண்ணியம் உங்க