Posts

Showing posts from January, 2022

பலவீனத்துக்கு ஓர் உதை!

Image
  பள்ளி விளையாட்டு போட்டிக்காக பெயர் கொடுக்குமாறு ஏழாம் வகுப்பிற்கு சுற்றறிக்கை வந்தது. மாணவர்கள் தங்களுக்குப் பிடித்த விளையாட்டுகளுக்கு விருப்பம் தெரிவித்துக் கொண்டிருந்தார்கள். ஆசிரியர் மாணவர்களின் பெயர்களை எழுதிக் கொண்டிருந்தார். கால்பந்து அணிக்கு மதன், சந்துரு, சந்தோஷ் என சிலர் பெயர் கொடுத்தார்கள். “கால்பந்து விளையாட்டுக்கு என் பெயரை எழுதிக்கோங்க சார்” என்று குரல் கொடுத்தான் கார்த்தி. எல்லோரும் சிரித்தார்கள். அந்த வகுப்பிலேயே கார்த்திக்கு ஒல்லியான தேகம். உடல் பலமும் குறைவு. விளையாட்டில் அவனும் பெரிய ஈடுபாடு காண்பித்ததில்லை. ஆசிரியருக்கே ஆச்சரியம்தான். “நீ வேணும்னா செஸ் போட்டில கலந்துக்க கார்த்தி. கால்பந்து கஷ்டம். அடிபடும்” என்று தயங்கினார் ஆசிரியர். “கத்துட்டாவது விளையாடுவேன் சார்” என்றான் பிடிவாதமாக. ஆசிரியர் கார்த்தியின் பெயரை எழுதிக்கொண்டார். சக மாணவர்கள் நகைப்புடன் பார்த்தார்கள். அந்தப் பள்ளியில் ஆண்டுதோறும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள்தான் கால்பந்து சாம்பியன். தங்கவேல் அந்த வகுப்பில் படித்ததுதான் அதற்கு காரணம். தங்கவேல் படிப்பில் சுமார் என்றாலும், விளையாட்டில் முதலிடம் வந்துவிட

நூறு ஒட்டகங்கள்..!!

  பிரச்சனைகளே இருக்கக் கூடாது என மனிதனாய்ப் பிறந்த யாரும்… ஏன்? உயிர்கள் ஏதும் நினைத்து விட முடியாது… உயிர்களாகப் பிறந்த அனைத்து ஜீவராசிகளுக்கும் ஏதேதோ வழிகளில் பிரச்சனைகள் இருக்கத் தான் செய்யும்.. அதை யாரும் இல்லாமல் செய்ய இயலாது.ஆனால், மனிதனாய்ப் பிறந்த நாம் அதை எப்படி கையாள்கிறோம் என்பதைப் பொறுத்தே அதன் தீவிரம் அமைகிறது.. வாழ்வில் பிரச்சனைகள் என்பது நூறு ஒட்டகங்கள் போன்றது... அனைத்தும் ஒரே நேரத்தில் படுப்பதற்கான வாய்ப்பு குறைவே.. ஒவ்வொன்றும் படுப்பதற்கான காலம் உள்ளது...சில பிரச்சனைகள் தானாக முடிந்து விடும். சிலவற்றை நாம் மெனக்கெட்டு முடித்து விடலாம்.. ஆனால் சில பிரச்சனைகள் முடிந்தால் வேறு சில பிரச்சனைகள் புதிதாக எழலாம்... அனைத்துப் பிரச்சனையும் முடிந்தால் தான் நிம்மதியாக தூங்குவேன் என்றால் இந்த உலகத்தில் யாராலும் தூங்க முடியாது.. பிரச்சனைகள் அனைத்தும் எப்போது முடியும் என கவலைப்பட்டுக் கொண்டே இருக்காதீர்கள்.... எனக்கு ஒரு தீர்வு சொல்லுங்கள்" என்றவாறே ஒரு அறிஞர் முன்பாக நின்றிருந்தான் அவன்.அப்போது  மாலை நேரம்.. அய்யா."நான் ஓடிக் கொண்டே இருக்கிறேன்..பல பிரச்சனைகள். வீட்டில்,

அபிமன்யு

  சிறுவன் ஒருவன் சாதனைகளைச் செய்ய முடியுமா? நிச்சயமாய் முடியும். அபிமன்யுவின் வரலாறை படிக்கும் குழந்தைகள் பெரும் சாதனையாளர்களாக மாறுவார்கள். அர்ஜூனனின் மனைவி சுபத்ரா. துவாரகை மன்னன் பலராமன், கண்ணன் ஆகியோரின் தங்கை. அவளுக்கு ஆனைப்பட்டணம் என்ற ஊரை சீதனமாக அளித்தார் பலராமன்.  சுபத்ரா கர்ப்பமாக இருந்த நேரத்தில் அண்ணன் கண்ணனிடம் போர் முறைகளைப் பற்றி கேட்டாள். கண்ணன் சொல்ல ஆரம்பித்தார். எப்படியெல்லாம் போரில் யூகங்கள் வகுக்கப்படும், அதிலிருந்து எப்படியெல்லாம் வீரர்கள் தப்புவார்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தார்.  அவரது விளக்கம் சுபத்ராவுக்கு போரடித்து விட்டது போலும். உம் கொட்டிக் கொண்டே கேட்டுக் கொண்டிருந்தவள் அப்படியே தூங்கி விட்டாள். ஆனால் உம் சத்தம் மட்டும் வந்து கொண்டே இருந்தது. சுபத்ராவின் வயிற்றில் இருந்த குழந்தை தான் அது.போர் முறைகளைப் பற்றிக் கவனமாகக் கேட்டுக் கொண்டே உம் கொட்டியது. கண்ணன் அப்போது சக்ர வியூகம் பற்றி சொல்லிக் கொண்டிருந்தார். அதை அமைக்கும் விதத்தைச் சொல்லி முடித்த அவர், தங்கையைக் கவனித்தார். தங்கை அயர்ந்து உறங்கி விட்டதைப் பார்த்து எழுந்து விட்டார். சக்ரவியூகத்தில் இருந்த

வாழ்ந்தாலும் பேசும் தாழ்ந்தாலும் பேசும்...

  1.        எதுவும்   நிரந்தரமில்லை . 2.        சில   பிரச்சினைகளை   எதிர்கொள்ளாமல்   பின்வாங்குவதாலே   அமைதியா   இருப்பதாலோ   பிரச்சினை   முடிவுக்கு   வராது . 3.        வெறும்   திறமை   மட்டும்   வெற்றிக்கு   உதவாது .  விடாமுயற்சியும்   தேவை . 4.        நாம்   யாருடன்   பயணிக்கிறமோ   அதை   பொருத்து   தான்   நம்   நிம்மதி   ஒரு   அங்கம்   இருக்கிறது . 5.        தவறிபோனதையோ ,  இழந்ததையோ   நினைத்து   வருந்துவதால்   மாற்றம்   பிறக்காது . 6.        என்ன   தான்   பெண்   உரிமை , பெண்ணியம்   பற்றி   பேசினாலும்   பெண்ணாக   இருந்து   சந்திக்கும்   சில   சங்கடங்களை   மனசு   விட்டு   வெளியே   சொல்ல   முடியாது . சொன்னாலும்   விமர்சனம்   பெண்ணுக்கு   மட்டுமே . 7.        வெற்றிக்கு   பின்   விடாமுயற்சி   மட்டும்   இல்லை   சில   அவமானங்களும்   நிச்சயம்   உண்டு . 8.        அளவுக்கு   மீறிய   இரக்க   உணர்வு   நம்மை   பார்த்து   இரக்கம்   கொள்ளும்   நிலைக்கு   தள்ளிவிடும் . 9.        நேர்மை ,  உண்மை   தரும்   துணிவு   வேறு   எதிலும்   இல்லை . 10.     வாழ்ந்தாலும்   பேசும்   தாழ்ந்தாலும்   பேசும் .  விமர

நெல்லையில் பெங்களூரு தொழிலதிபர் காரில் ரூ.1 கோடி சிக்கியது: போலீசார் விசாரணை

  நெல்லையில் வாகன சோதனையில் பெங்களூரு தொழிலதிபர் காரில்  ரூ.1 கோடி சிக்கியது. இது தொடர்பாக 2பேரிடம்  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  பாளையங்கோட்டை கேடிசி நகர் நான்கு வழிச்சாலையிலுள்ள போலீஸ் சோதனை சாவடியில் நேற்று  போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நெல்லை டவுனில் இருந்து வந்த கார் ஒன்றில் சோதனை நடத்திய போது அதிலிருந்து ஒரு லெதர் பேக்கில் ₹1 கோடி பணம் கட்டுக் கட்டாக இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார், காரில் வந்தவர்களிடம் பணம் குறித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர்.  இதனால் தனிப்படையினர் அவர்களை நெல்லை மாநகர ஆயுதப்படைக்கு கொண்டு சென்று விசாரணை நடத்திய போது, நெல்லை டவுனைச் சேர்ந்த முகம்மது அசாருதீன் (36) மற்றும் பாளை. பெருமாள்புரம் திருமால்நகரைச் சேர்ந்த நில புரோக்கரான முத்துபாண்டி (44) என தெரிய வந்தது. மேலும் நெல்லை டவுனில் முகம்மது அசாருதீன் நடத்தி வந்த நகைக்கடையில் தொழில் முடக்கம் ஏற்பட்டதால்,  இவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரில் குடும்பத்தினருடன்  குடியேறினார். அங்கு சூப்பர் மார்க்கெட் நடத்தி வந்தார். மேலும்  பழை

தர்மத்தில் பெரிய தர்மம்....

 எளிமை.   தர்மத்தில் பெரிய தர்மம் சிக்கனமே அது செல்வம் சேர்க்கும். தவறுகளில் பெரிய தவறு தலைகனமே அது அழிவைத் தரும்.   குப்பையிலே கிடந்தால் வைரமாக இருந்தாலும் நம்ப மாட்டார். எளிமையாக இருப்பவர் திறமையாக இருந்தாலும் ஏற்க மாட்டார்.   வாய்த் துணிவு எல்லாம் வீரமுல்ல, வணங்கிப் பணிபவர் எல்லாம் கோழையுமல்ல.   எளிய வாழ்வு எல்லாம் ஏழ்மையுமல்ல, பகட்டில் வாழ்வது எல்லாம் பண்புமல்ல‌.   உபயோகமான பொருள்களை சேமிப்பவர் அழகாக வாழ்வார். இனிமையான நினைவுகளை சேகரிப்பவர் அமைதியாக வாழ்வார்.   எளிமையாக வாழ்பவரை யார் கண்ணுக்கும் தெரிவதில்லை. எளிமையாக வாழாதவர்க்கு யாரையும் கண்ணுக்கு தெரிவதில்லை.   குறைவான வார்த்தைகளே நிறைவான வழிபாடு. எளிமையான ஆடைகளே நிறைவான அலங்காரம்.   கடனுக்கு காரணம் குறைந்த வருமானமல்ல நிறைந்த செல்வமே. நோய்க்கு காரணம் குறைந்த உணவல்ல குறைந்த ஒழுக்கமே.   எடை குறைவான பொறுள்களே இலகுவாக மிதக்கின்றன‌. ஆசை குறைவான மனங்களே எளிமையாக வாழ்கின்றன‌.   வளமையாய் காட்சி தருபவர்கள் எல்லாம் செல்வருமல்ல‌. எளிமையாய் காட்சி தருபவர்கள் எல்லாம் வறியவருமல்ல‌.

சிக்கல் இல்லாமல் சொந்த வீடு வாங்க இந்த 8 விஷயங்கள் கட்டாயம்..!

  பெரும்பாலானவர்களின் வாழ்நாள் கனவாகச் சொந்த வீடு இருக்கிறது. ஒரு சட்டை வாங்குகிறோம்; செல்போன் வாங்குகிறோம்; சரியில்லை எனில், தூரப் போட்டுவிட்டு, வேறு வாங்கிக்கொள்ளலாம். ஆனால், வீட்டைப் பொறுத்தவரை, நாம் அப்படி நினைக்க முடியாது. அது வாழ் நாள் முடிவாக இருக்கிறது. இன்றைய நிலையில், பெரும்பாலான மக்களால் ஒரு வீடுதான் வாங்க முடியும். அவர்கள் வாங்கும் அந்த வீடு சரியாக அமையவில்லை எனில், அதன் பாதிப்பு வாழ்க்கை முழுக்கத் தொடர்ந்துகொண்டிருக்கும். ஆர்.குமார் நிறுவனர், https://navins.in/ ரியல் எஸ்டேட் துறையைப் பாதுகாக்க இன்றைக்கு ‘ரெரா’ என்கிற மிகப்பெரிய அமைப்பு வந்திருக்கிறது. ஆனால், எத்தனை சட்டங்கள் வந்தாலும் வீடு, சொத்து வாங்குபவர்கள், ‘நான் வாங்குகிற மனைக்கு, வீட்டுக்கு நாம்தான் பொறுப்பு’ என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். ‘நான் யாரிடம் வேண்டு மானாலும் ஏமாறுவேன். அரசாங்கம் என்னைக் காப்பாற்ற வேண்டும். சி.எம்.டி.ஏ காப்பாற்ற வேண்டும்’ எனக் கோரிக்கை வைப்பதில் நியாயமில்லை. வீடு விஷயத்தில் சரியாக முடிவெடுக்காமல் அல்லது உணர்ச்சிவசப்பட்டு தவறான வீட்டை வாங்கினால், அது வாழ்க்கையின் வெற்றியைப் பாதிக்கும். ஒர

குறைவான தேவை; நிறைவான வாழ்வு... அவசியம் பின்பற்ற வேண்டிய மினிமலிசம்!

  மினிமலிசம் மினிமலிசம் - இன்றைக்குப் பலரும் இந்த வாழ்க்கை முறை பற்றிப் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். மினிமலிசம் என்பது முதலில் ஒரு கலைக்கோட்பாடாகத்தான் தொடங்கியது. 1960-களில் அமெரிக்காவில், வெறும் கோடு, சதுரம், வட்டம் போன்ற வடிவங்களையும், கறுப்பு, வெள்ளை போன்ற அடிப்படை நிறங்களையும் மட்டுமே உபயோகித்து படைக்கப்படும் கலைப் படைப்புகளில் தொடங்கியது மினிமலிசம் (Minimalism). இன்று மனித வாழ்வின் ஒவ்வொரு அங்கத்திலும் இதன் உபயோகம் கொண்டாடப்படுகிறது. பொருளாதாரத்தைப் பொறுத்தவரை, “நாளை பணத்துக்கு என்ன செய்யப்போகிறோம்?” என்ற கவலையின்றி வாழ்வதே உண்மையான மகிழ்ச்சி அல்லவா? அதை அடையும் வழியாகக் ‘குறைவான தேவை; நிறைவான வாழ்வு’ என்ற மினிமலிசக் கோட்பாடு முன்வைக்கப்படுகிறது. மினிமலிசம் என்பது தேவையான பொருளைக்கூட வாங்க மறுக்கும் கஞ்சத்தனமல்ல; குறைந்த விலைப் பொருள்களையே வாங்கும் சிக்கனமும் அல்ல; “இது என் வாழ்வுக்குத் தேவைதானா” என்று தீர்க்கமாக யோசித்து, கண்டிப்பாகத் தேவை என்னும் பொருள்களை மட்டும் வாங்கும் பழக்கம். இன்று நம்மைச் சுற்றி நாம் காண்பதென்ன? ஒரு சிறிய விசேஷத்துக்கும், கொண்டாட்டத்துக்கும் சக்திக்கு ம

24 வயதில் ரூ.12 கோடி டேர்ன்ஓவர்... இ-காமர்ஸில் கலக்கும் குமரி ஷாப்பி..!

Image
  ஆன்லைன் பிசினஸ் வெறும் 24 வயதில் ‘அட’ என்று சொல்ல வைக்கிறார் கன்னியாகுமரி மாவட்டம் மாங்கன்று விளையைச் சேர்ந்த தீபின். இவருடைய குமரி ஷாப்பி, இப்போது கன்னியா குமரியைத் தாண்டி, தமிழகம் முழுக்க பிரபல மாகி வருகிறது. கருங்கல் பகுதியில் இருக்கும் குமரி ஷாப்பி அலுவலகத்தில் தீபினைச் சந்தித்துப் பேசினோம். “எனக்கு பெரிய ஃபேமிலி பேக்கிரவுண்ட் கிடையாது. என் அப்பாவுக்கு விவசாயக் கூலி வேலை; அம்மாவுக்கு ரேஷன் கடையில வேலை. நான் ஆரம்பத்தில டம்மியா ஒரு இ-கார்மஸ் வெப்சைட் கிரியேட் பண்ணு வோம்னு நினைச்சு, ‘கே.டி மார்ட்’-ன்னு ஒரு வெப்சைட்டை கிரியேட் பண்ணினேன். அதுக்குப் பிறகு 2019 பிப்ரவரி 14-ம் தேதி ‘குமரி ஷாப்பி’ங்கிற பெயர்ல ஒரு இணையதளத்தை தொடங்கினேன். முதல்ல எட்டு மாசத்துக்கு நான் தனி ஆளாத்தான் அதை நடத்தினேன். நான் பகல்ல டெலிவரிபாயா வேலை பார்ப்பேன். ராத்திரி வெப்சைட்ல டிசைன் பண்ணுவேன். மளிகைச் சாமான்கள் சொந்தமா வாங்கிட்டு வந்து, ஸ்டாக் வச்சு ஆன்லைன்ல விக்கத் தொடங்கினேன். அதுல ஒண்ணுரெண்டு கல்யாண ஆர்டர் கிடைச்சது. ஆனா, அவங்க சமயத்துக்குப் பணம் தராததுனால எனக்கு 1.08 லட்சம் கடன் ஆயிடுச்சு. என் வீட்லயும் எதி

உங்கள் உயர்வைத் தடுக்கும் 10 காரணங்கள்!

  செல்ஃப் டெவலப்மென்ட் புக்ஸ் ஒரு புத்தகக் கடையில் சென்று, ‘‘சுய முன்னேற்றம் தொடர்பான புத்தகங்கள் எங்கே இருக்கிறது’’ என்று கேட்டேன். ‘‘அதை நான் சொன்னால் நீங்கள் தேடும் விஷயத்துக்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும்’’ என்று சொன்னார் அந்தக் கடையில் பணிபுரியும் உதவியாளர். இந்த சுவாரஸ்யமான சம்பவத்தைச் சொன்னபடி ஆரம்பிக்கிறது `நாம் ஏன் மாறுகிறோம்?’ (மற்றும் நாம் மாறாதிருப்பதற்கான 10 காரணங்கள்) என்னும் இந்தப் புத்தகம். புத்தகத்தின் பெயர்: How We Change (and 10 Reasons Why We Don’t) ஆசிரியர்: Dr Ross Ellenhorn பதிப்பாளர்: Piatku வெறும் திட்டம் போதாது... நீங்கள் தற்போது இருக்கும் நிலையில் இருந்து மாற வேண்டும் என்று மிகவும் விரும்புவீர்கள். அந்த மாற்றம் எந்த அளவுக்கு உங்களுக்கு உதவியாக இருக்கும் என்பதும் உங்களுக்கு நன்றாகவே தெரியும். இதற்காக நீங்கள் திட்டங்கள் பலவும் தீட்டுவீர்கள். இந்தத் தடவை நாம் எப்படியும் அந்த மாற்றத்தைக் கொண்டுவந்துவிட வேண்டும் என்று வைராக்கியத்துடன் செயல்படுவீர்கள். ஆனால், ஒரு சில நாள் கழித்துப் பார்த்தால், மீண்டும் பழையபடியான வாழ்க்கையை வாழத் தொடங்கியிருப்பீர்கள். அதாவது, எந்த

நெருங்கும் மார்ச் 31... சரியான நேரம்... சரியான பிளான்... வரியைச் சேமிக்கும் வழிகள்!

  நடப்பு 2021-22 நிதி ஆண்டுக்கு வருமான வரியை மிச்சப்படுத்த ஒருவர் திட்டமிடுகிறார் எனில், அவர் வருகிற மார்ச் 31-ம் தேதிக்குள் முதலீடு செய்தாக வேண்டும். வரிச் சேமிப்புக்கான முதலீடு என்கிறபோது நம் அனைவருக்கும் முதலில் ஞாபகத்துக்கு வருவது 80சி பிரிவுதான். நாம் செய்யும் பல்வேறு முதலீடுகளுக்கு இந்தப் பிரிவின்கீழ் வரிச் சலுகை கிடைக்கும். இந்த முதலீடுகளில் யாருக்கு எது ஏற்றது, எந்த முதலீடு லாபகரமாக இருக்கும் எனப் பார்ப்போம். என்.விஜயகுமார் நிதி ஆலோசகர்,  https://www.vbuildwealth.com/ எண்டோவ்மென்ட் ஆயுள் காப்பீட்டு பாலிசிக்கான பிரீமியம் தொகை... வருமான வரியைச் சேமிக்க பெரும்பாலான வர்கள் பயன்படுத்துவது ஆயுள் காப்பீட்டு பாலிசிக்குக் கட்டும் பிரீமியமாக இருக்கிறது. எந்த வகையிலும் ஆயுள் காப்பீடு இல்லாதவர் கள் எண்டோவ்மென்ட் ஆயுள் காப்பீட்டு பாலிசி எடுத்து பிரீமியம் கட்டுவதில் தவறில்லை. ஆனால், ஆயுள் காப்பீடு வேறு, முதலீடு வேறு என்கிற வித்தியாசம் தெரியாதவர் கள் இந்த ஆயுள் காப்பீட்டு பாலிசிகளுக்கு அதுவும் குறிப்பாக, எண்டோவ்மென்ட், மணிபேக் போன்ற பணப்பலன் தரும் பாலிசிகளை எடுத்து, பிரீமியம் கட்டி வருகிறார்க