குளிர் கால நோயின் பிடியிலிருந்து தப்பிக்க வைக்கும் இந்த மூலிகைகளை ரெடியா வச்சிக்கோங்க

 குளிர்காலம் ஆரம்பித்து விட்டாலே கூடவே சேர்ந்து நோய்களின் வரவும் அதிகமாகி விடும். காய்ச்சல், இருமல் மற்றும் ப்ளூ போன்ற ஏராளமான நோய்கள் உங்களுக்கு உண்டாக வாய்ப்புள்ளது. குளிர்காலத்தில் நம்மளைச் சுற்றி ஏராளமான வைரஸ்களும் மற்றும் பாக்டீரியாக்களும் வலம் வருகிறது. காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் தொற்று நோய்களின் தாக்கம் அதிகமாக இருக்கும்.

​பருவகாலத் தொற்று

பருவகாலத் தொற்று நோய்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டிய நேரம் இது. இப்படிப்பட்ட தொற்று நோய்களை தடுக்க இயற்கையாகவே சில மூலிகை பொருட்கள் நமக்கு உதவுகிறது. இந்த மூலிகை பொருட்களில் உள்ள மருத்துவ குணங்கள் காய்ச்சல், இருமல் மற்றும் சளி போன்ற தொல்களை போக்க உதவுகிறது. ஆன்டி வைரல், ஆன்டி பாக்டீரியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இதில் காணப்படுகிறது. அந்த வகையில் குளிர்கால நோய்களில் இருந்து தப்பிக்க உதவும் ஒரு சில மூலிகைகளை நாம் அறிவோம்.

​குளிர்காலத்தில் உதவும் மூலிகை பொருட்கள்

அதிமதுரம் :அதிமதுரம் குளிர்காலத்தில் ஏற்படும் தொண்டை புண் பிரச்சினைகளை போக்க உதவுகிறது. பியர்-ரிவ்யூவ் ஜர்னலில் வெளியிடப்பட்ட 2015 ஆய்வின்படி, அதிமதுரத்தில் இரண்டு வகையான இராசயனங்கள் காணப்படுகிறது. இந்த சேர்மங்கள் நம் உடலில் வைரஸ் பரவுவதை தடுக்கும் ஆற்றல் கொண்டிருப்பது தெரிகிறது.

 கறிவேப்பிலை:

நம் வீட்டில் சமைக்கப்படும் பெரும்பாலான உணவுகளில் நாம் கறிவேப்பிலை பயன்படுத்துவோம். கறிவேப்பிலை போட்டு தாளிக்கும் வரை ஒரு உணவு முழுமை அடைவது இல்லை. இது ஒருவரின் மூலிகைத் தோட்டத்தில் இருக்க வேண்டிய மிக முக்கியமான மரக் கன்றுகளில் ஒன்றாக அமைகிறது.

 

துளசி:

துளசியால் எந்த வகையான ஜலதோஷம் இருந்தாலும், அதனை சரி செய்ய முடியும். ஜலதோஷத்திற்கு ஒவ்வொரு வீட்டிலும் பயன்படுத்தப்படும் மூலிகை இது மற்றும் தேன் அதற்கு அதிகம் பயன்படுத்தப்படும் வீட்டு வைத்தியம் ஆகும். அதன் குளிர் நிவாரண பண்புகளைத் தவிர, இது பல்வேறு உணவு வகைகளிலும் பயன்படுத்தப்படலாம்.

ரோஸ்மேரி:

இந்தியாவில் கொசுக்களுக்கு பஞ்சமே இருக்காது. கொசுவினால் ஏற்படும் பல நோய்கள் உள்ளன. இந்தப் பிரச்சனைக்கு நீங்கள் இயற்கையான தீர்வுக்காகக் காத்திருந்தால், ரோஸ்மேரி சிறப்பாகச் செயல்படும். இனியும் நீங்கள் காத்திருக்க வேண்டியதில்லை. இது ஒரு அற்புதமான கொசு விரட்டி. இது கொசுக்கள், அந்துப்பூச்சிகள் மற்றும் கேரட் ஈக்களை விரட்டும் மருத்துவ மற்றும் நறுமணமுள்ள தாவரமாகும். அவை சூடான மற்றும் வறண்ட வெப்பநிலையில் சிறப்பாக செயல்படுகின்றன மற்றும் கொள்கலன்களில் எளிதாக வளர்க்கப்படுகின்றன.

வெந்தயம்:

பொதுவாக இந்தியில் மேத்தி என்றும் தமிழில் வெந்தயம் என்றும் அழைக்கப்படுகிறது. இது பல்வேறு வட இந்திய மற்றும் தென்னிந்திய உணவுகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இது இந்தியாவில் பல்வேறு சுவையான உணவுகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இது நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவும், கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தவும், ஆன்டாசிட் ஆகவும் செயல்படுவதோடு, முடி உதிர்வதைத் தடுக்கவும் பயன்படுகிறது.

 எலுமிச்சை தைலம்:

கைக்குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்படும் பெருங்குடல் மற்றும் வயிற்றுக் கோளாறுகளை போக்க மற்றொரு வீட்டு வைத்தியம் பயன்படுத்தப்படுகிறது. எலுமிச்சை தைலம் என்பது ஒரு மூலிகை ஆகும். இதன் இலைகளை சுவாசத்தை புத்துணர்ச்சியடையச் செய்யலாம் அல்லது நசுக்கி, அரிப்புகளைப் போக்க பூச்சி கடித்த இடத்தில் தடவலாம்.

​இலந்தப்பழம் :


இந்த பழத்தை காய வைத்து ஆயுர்வேதத்தில் பயன்படுத்துகின்றனர். இதை இந்திய ஜூஜூப் பழம் என்று குறிப்பிடுவது உண்டு. இது இருமலுக்கு பயன்படுகிறது. இது சுவாச பாதையை சுத்தம் செய்ய உதவுகிறது. இந்த பழத்தில் நிறைய விட்டமின் சி இருப்பதால் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. சர்வதேச இதழின் 2017 ஆய்வில், இந்த பழத்தைக் கொண்டு உடலில் உள்ள நோயெதிர்ப்பு உயிரணுக்களின் உற்பத்தியை ஊக்கப்படுத்த முடியும் என்று கூறுகிறது.


​கொன்றை பூ :

கொன்றை மரங்கள் சாலையோரங்களில் காணப்படும் மரமாகும். இந்த மரத்தின் பூக்கள் மற்றும் விதைகள் ஏராளமான நன்மைகளை அளிக்கிறது. இதைக் கொண்டு குளிர்காலத்தில் ஏற்படும் தொற்று நோய்களை விரட்ட முடியும். இந்திய தேசிய சுகாதார மையம் இது குறித்து என்ன கூறுகிறது என்றால் இந்த கொன்றை சாறு காய்ச்சலை குறைக்க உதவுகிறது. அழற்சி, நெஞ்சு சளி, தொண்டை பிரச்சினைகளை போக்க உதவுகிறது.

தைராய்டு உள்ளவர்களுக்கான பழ டயட்... இதன்மூலம் எப்படி தைராய்டு ஹார்மோன் சுரப்பை முறைப்படுத்தலாம்...

​நறுவல்லி மரம் :

இந்த மூலிகையை யாரும் அறிந்திருக்க மாட்டீர்கள். ஆனால் யுனானி மருத்துவத்தில் இது ஒரு முக்கியமான மூலிகை ஆகும். இது தொற்றுநோய்களில் இருந்து உங்களை பாதுகாக்க உதவி செய்யும். இது சளி, இருமல், சுவாசக் கோளாறுகளுக்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது. ஐஓஎஸ்ஆர் ஜர்னல் ஆஃப் பார்மசியின் ஜூன் 2016 பாதிப்பிலிருந்து வெளியிடப்பட்ட அறிக்கையின் படி இதில் ஆன்டி மைக்ரோபியல், அழற்சி எதிர்ப்பு மற்றும் வலி நிவாரணி பண்புகள் காணப்படுகிறது. இது குளிர்காலத்திற்கு ஏற்ற மூலிகை ஆகும். இந்த மூலிகைகளை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் :இந்த மூலிகைகளைக் கொண்டு தேநீர் போன்றவற்றை தயாரித்து குடிக்கலாம். மருத்துவரின் பரிந்துரை பேரில் எடுத்துக் கொள்வது நல்லது.

Comments

Popular posts from this blog

ரசவாதி - The Alchemist (Tamil) : பாலோ கொயலோ

Nothing can compete with The knowledge gained from poor, confidence

EFFECTS OF NEGATIVE THOUGHTS ON YOUR MIND & BODY