என்னுடையது,உன்னுடையது

 ஒரு கிழவி கொடும் பாவங்களையே செய்து கொண்டிருந்தாள். அக்கிழவி இறந்தபின், எம தூதர்கள் எரியும் நரகக் குழியில் இட்டார்கள். பெரும்துன்பங்களை அனுபவித்த அந்தக் கிழவி ‘ஓ’ என்று அலறி அழுதாள்.

அப்போது கருணை நிறைந்த கந்தர்வன் ஒருவன் வான் வழியாகச் சென்றான். அவன் காதில் அந்தக் கிழவியின் குரல் கேட்டது. இரக்கத்தோடு கீழிறங்கி வந்து விசாரித்தான்.
கந்தர்வன், “பாட்டி! உன்னை நாம் தூக்கிக் கரை சேர்க்கிறேன். ஆனால் அதற்கு நீ ஏதாவது சிறு புண்ணியமாவது செய்திருக்க வேண்டும்” என்றான்.
உடனே கிழவி, “ஐயா, நான் ஒருமுறை வாழைப்பழங்களை உண்டு கொண்டிருந்தபோது பசியோடு வந்த சிவயோகி ஒருவருக்கு என்னிடமிருந்த பழங்களில் அழுகிய பழம் ஒன்றைக் கொடுத்தேன். அந்த மகான், அதில் அழுகாத பாதி வாழைப்பழத்தை ‘#சிவார்ப்பணம்’ என்று கூறி உண்டு விட்டுச் சென்றார். இதுதான் நான் என் வாழ்நாளில் செய்த ஒரே #தர்மம்” என்றாள்.
கந்தர்வன் சிரித்தான். அப்போது அந்த அடியார்க்குத் தந்த பாதி வாழைப்பழம் அங்கே வந்தது.
உடனே, “பாட்டி, இந்தப் பழத்தின் ஒரு பாதியை நான் பற்றிக் கொள்வேன். மறுபாதியை நீ பற்றிக்கொள். இதனைக் கொண்டு உன்னை நரகத்திலிருந்து மீட்டுச் சொர்க்கத்திற்குக் கொண்டு போய்ச் சேர்க்கிறேன்” என்றான்.
அப்படியே கிழவி பாதி வாழைப்பழத்தின் அடிப்பகுதியைப் பற்றிக் கொண்டாள். மற்ற பாதியை தேவதூதன் பற்றிக் கிழவியைத் தூக்கினான். நரகக் குழியில் கிடந்த சில பாவ ஆத்மாக்கள் கிழவியின் காலைப் பற்றிக் கொண்டார்கள். மெல்ல மெல்ல தேவதூதன் கிழவியை தூக்கிக்கொண்டு போனான்.
நரகம் கடந்து சொர்க்கம் பக்கம் நெருங்கியது. இப்போது கிழவி நிம்மதி பெருமூச்சு விட்டாள். அப்போது தன் காலை நான்கு ஐந்து பேர் பற்றிக்கொண்டிருப்பதை நீக்கினார். அவளுக்கு வந்ததே கோபம்! ‘அடேய்! என் வாழைப்பழத்தைப் பற்றிக்கொண்டு நான் சொர்க்கம் வந்து கொண்டிருக்கிறேன். நீங்கள் யார் என் காலைப் பிடித்துக் கொண்டு சொர்க்கம் வர..? என்று கூறிச் சீறினாள்.
கந்தர்வன் கிழவியின் கொடுங்குரலைக் கேட்டான். “ஏய் கிழவியே, மகானுக்கு தானம் அளித்த பழம் உன் வாழைப்பழமா? அப்படியென்றால் உன் வாழைப்பழத்தை நீயே பிடித்துக் கொள்” என்று கூறி பழத்தை விட்டுவிட்டான்.
கிழவி பழையபடி நரகக் குழியில் போய் வீழ்ந்தாள்.
“என்னுடையது,உன்னுடையது” என்று எண்ணுபவர்களுக்கு சொர்க்கத்தில் எந்த இடமும் கிடையாது

Comments

Popular posts from this blog

ரசவாதி - The Alchemist (Tamil) : பாலோ கொயலோ

உயர்வு

சூழ்நிலை