அடுத்தவரின் மனதில் இடம் பிடிக்க.

 *உங்களுக்கு ஒரு வினாடி வினா...*

*கீழே இருக்கின்ற கேள்விகளுக்கு பதிலை எழுதுங்கள், அதிக நேரம் எடுத்துகொள்ளக் கூடாது. மிகவும் மூளையைக் கசக்கி மனதை குழப்பிக் கொள்ளவும் கூடாது...*

*உங்களால முடியவில்லை எனில் அடுத்த கேள்விக்கு கடந்துவிடுங்கள். அதுவும் முடியவில்லையா...!*

*படித்தவாறே கடந்து விடுங்கள், சரியா...!*

*உலகிலேயே மிகப்பெரிய செல்வந்தர்கள் ஐந்து நபர்களைக் கூறுங்கள் பார்க்கலாம்...*

*2004 மற்றும் 2009 பாராளுமன்றத் தேர்தலில் முக்கிய தலைவர்களை தோற்கடித்தவர்களில் நான்கு நபர்களைக் கூறுங்கள் பார்க்கலாம்...*

*உலகளவில் நடக்கும் அழகிப் போட்டிகளில் வெற்றி பெற்ற இந்தியப் பெண்கள் (மிஸ் யுனிவர்ஸ், மிஸ் வேர்ல்ட் இப்படி) ஒரு நான்கு நபர்களை கூறுங்கள் பார்க்கலாம்...*

*நோபல் பரிசு வாங்கிய உங்களுக்குத் தெரிந்த பத்து நபர்களைக் கூறுங்கள் பார்க்கலாம்...*

*கடைசியா ஆஸ்கார் அவார்ட் வாங்கிய ஐந்து நடிகர்கள் மற்றும் நடிகைகளின் பெயர்களைக் கூறுங்கள் பார்க்கலாம்...*

*பதில் வந்ததா...? உங்கள் பதில் உங்களுக்கே மனநிறைவாக இருந்ததா...? இல்லை தானே...!?*

*ஆக!, பொதுவாக யாருக்குமே கடந்த காலத்தின் தலைப்புச் செய்திகளோ அல்லது தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்தவர்களோ நினைவில் நிற்பதில்லை...*

*இத்தனைக்கும் இவர்களெல்லாம் சாதாரண சாதனையாளர்கள் அல்ல. அந்தந்தத் துறையில் உச்சத்தைத் தொட்டவர்கள். மிகப்பெரிய சாதனையாளர்கள்...*

*ஆனால்...!? நாளாக நாளாக கைதட்டல்கள் காணாமல் போய்விடுகின்றன. சாதனைகள் மறக்கப்பட்டுவிட்டன. விருதுகளும் பாராட்டுக்களும் அவர்களுடனேயே புதைந்து போய்விடுகின்றன...*

*சரி., இதோ மற்றொரு விநாடி வினா...!*

*உங்கள் பள்ளிக் காலத்தில் மிகச் சிறப்பாக பாடம் நடத்திய மூன்று ஆசிரியர்களைக் கூறுங்கள்...*

*உங்களுக்கு ஆபத்தான நேரத்தில் உதவிய மூன்று நண்பர்களைக் கூறுங்கள்...*

*உங்களுக்கு வாழ்க்கையில் பயனுள்ளதை கற்றுக்கொடுத்த சிலரது பெயர்களைக் கூறுங்கள்...*

*உங்கள் வாழ்க்கையை பொருளுள்ளதாகவும் ஈர்ப்புடையதாகவும் மாற்றிய சிலரை பட்டியலிடுங்கள்...*

*நீங்கள் யாருடன் அதிக நேரத்தை செலவழிக்க விரும்புகிறீர்களோ அவர்கள் பெயர்களை கூறுங்கள்...*

*விடைகளை இப்போது உடனே எழுதிக் குவித்து இருப்பீர்களே...! இதிலிருந்து என்ன தெரிகிறது...?*

*உங்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்துபவர்கள் பணக்காரர்களோ, உலகப் புகழ் பெற்றவர்களோ அல்லது பாராட்டுக்களை குவித்தவர்களோ அல்ல...*

*உங்கள் மீது அக்கறை செலுத்துபவர்களே. மற்றவர்களை மறக்கும் நீங்கள் இவர்களை மறப்பதில்லை...!*

*பணம், பட்டம், பதவி இவற்றின் மூலம் பெறுகின்ற புகழோ, வெற்றியோ நிலையானதல்ல...*

*பிறருக்கு உதவி செய்து, பிறர் மீது அக்கறை கொண்டு ஒருவர் பெறும் புகழும், வெற்றியுமே நிலையானது...*

*உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சிலரிடம், இப்படி கேள்விகள் கேட்டு, அவர்கள் ஒருவராவது விடையில் உங்கள் பெயரையும் கூறுவார்கள் என்றால், நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்று விட்டீர்கள் என்று பொருள்... கேட்டுத்தான் பாருங்களேன்...!*

*சந்திர மண்டலத்தில் இடம் பிடிப்பது மட்டும் அறிவல்ல, மற்றவர்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும்...!*

*மற்றவர்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டுமானால், மனிதநேயத்தோடு எப்போதும் ஏழ்மையில் வாடுபவர்களுக்கு உதவி செய்யுங்கள், உங்களை வெறுப்பவர்களுக்கும் நல்லது செய்ய நினையுங்கள்...!!*

*கோவிலுக்குச் சென்று விழுந்து கும்பிட்டு, கடவுள் மனதில் இடம் பிடிப்பது இருக்கட்டும். முதலில் நம்மைச் சுற்றி இருப்பவர்களின் மனதில் நமக்கு இடம் இருக்கிறதா...? என்று பாருங்கள்...!!!*

*பொறுமையைவிட மேலான தவமுமில்லை.திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை…!*

*தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்…!*

*முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!*

வாழ்க🙌வளமுடன்

*அன்பே🔥சிவம்*

Comments

Popular posts from this blog

ரசவாதி - The Alchemist (Tamil) : பாலோ கொயலோ

உயர்வு

சூழ்நிலை