மொபைல்போனில் மூழ்கிக் கிடக்கிறீர்களா? இதை செய்யுங்க, போதும்!

 

  • உங்கள் குழந்தைகளோ, அல்லது நீங்களோ, மொபைல்போன் வாயிலாக சமூக வலைதளங்களில் உலவுதல், அல்லது கேம்ஸ் விளையாடுவதை குறைக்க, இதோ எளிய டிப்ஸ். இவற்றை பின்பற்றுங்கள், நிச்சயம் மாற்றம் வரும்.
  • உங்களது மொபைல் போனில், உங்களது பொன்னான நேரத்தை கபளீகரம் செய்யும் தேவையற்ற செயலிகளை நீக்கிவிடுங்கள். அவசியமானதை மட்டுமே வைத்திருங்கள்.
  • நாம், மொபைல்போனை மறக்க நினைத்தாலும், "நோட்டிபிகேஷன்" ஒலி எழுப்பி, நம்மை சீண்டிப் பார்க்கும் எனவே, அந்த பட்டனை அணைத்து வைப்பது சிறந்தது.
  • நீங்கள் செயலிகளை பயன்படுத்தும் போது, அதற்கு அலாரம் செட் செய்து கொள்ளலாம். 10 நிமிடம் தான் உபயோகிக்க வேண்டுமென்று அலாரம் செட் செய்தால், ஒலி எழுப்பியதும் செயலியில் இருந்து வெளியேறிவிடுங்கள்.
  • முக்கியமான குறுஞ்செய்தி அல்லது அழைப்பு வந்தால் மட்டுமே போனை எடுங்கள். டேட்டாவை எப்போதும் ஆன் செய்து வைத்திருக்காதீர்கள்.
  • சாப்பிடும்போதோ, படிக்கும் போதோ அல்லது உறங்கும் போது கூட, உங்கள் அருகில் போனை வைத்துக் கொள்ளாதீர்கள். இது உடல் நலத்துக்கும் கேடு; கைக்கு எட்டும் தூரத்தில் இருந்தால், போனை எடுத்து பார்த்து கொண்டிருக்க தோன்றும்.
  • பொழுதுபோக்க வேறு வழி இல்லையே; அதனால் தான் மொபைல் போன் எடுக்கிறேன் என்று சாக்குபோக்கு சொல்லாதீர்கள். பொழுதை போக்க, புத்தகம் வாசிப்பு, தோட்டம் வளர்ப்பு போன்ற பிற அம்சங்களில் கவனம் செலுத்துங்கள்

Comments

Popular posts from this blog

ரசவாதி - The Alchemist (Tamil) : பாலோ கொயலோ

உயர்வு

சூழ்நிலை