நம் சமூகம் கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ளும் விஷயங்கள் என்ன?

 1| கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் சென்று சம்பாதித்தால் தான் குடும்ப பொருளாதாரம் உயரும்.

  • அடிக்கடி ஹோட்டல்/ரெடி மிக்ஸ் உணவு, வார இறுதி ஊர் சுற்றல்- இவற்றால் ஆடம்பர செலவு கூட அத்தியாவசியமாகி போவதால் சில குடும்பங்களில் கடனும் உயரும்.

2| முயற்சியும், பயிற்சியும் இருந்தால் எந்தத் துறையிலும் வெற்றி பெறலாம்.

  • "உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது". தனக்கு எது வருமோ, அதிலேயே பயிற்சி செய்ய வேண்டும்.

3| துணி வாங்கி தையற்காரரிடம் அளவு கொடுத்து தைப்பதை விட, ரெடிமேட் தான் சீப் அண்ட் பெஸ்ட், ஃபேஷன் & டிரெண்ட்.

  • மூன்றாவது முறை துவைத்து இஸ்த்திரி செய்து அணியும் போதே, வாங்கிய கலர் இதுதானா? - சந்தேகம் வந்துவிடும்.
  • ஒரே ஏரியாவில் 20 நபராவது அதே டிஸைனில் அணிந்து இருப்பார்கள். ஆடையின் தனித்தன்மை மிஸ்ஸிங்:((

4| கல்வியறிவும், பொருளாதாரமும் பெண்ணடிமைத்தனத்தை ஒழிக்கும்.

  • முன்னிரண்டும் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மூன்றாவதாக ஆளுமைத் தன்மையே அடிமைத்தனத்தை அடித்து விரட்டும்.

5| பிடித்த துறையை தேர்வு செய்தால் தான் சலிப்பில்லாமல் தொடர்ந்து பணி செய்ய முடியும்.

  • எந்த துறையாயினும் 'தாக்கு பிடிக்கும்' திறமை வேண்டும். "காய்த்த மரம் கல்லடிபடும்."


Comments

Popular posts from this blog

சூழ்நிலை

கோபம் அனைத்தையும் இழந்து விடும்... குருவின் பாடம் ...!!!!!

Nothing can compete with The knowledge gained from poor, confidence