நல்லவற்றை நமக்குள் நிரப்பி வைப்போம்

 (அர்த்தமுள்ள வாழ்க்கையை அழகாகச் சொல்கிறது இந்தச் சிறிய கட்டுரை)

*நீங்கள் ஒரு கப் காபியைக் கையில் வைத்திருக்கிறீர்கள்.*

அந்த நேரத்தில் அங்கு வரும் ஒருவர் உங்கள் மீது மோதிஉங்கள் கைகளைத் தட்டி விடுகிறார்காபி வெளியே சிதறிவிடுகிறது.

நீங்கள் ஏன் காபியைச் சிந்தினீர்கள்?

ஒருவர் தட்டிவிட்டதால் காபி சிந்திவிட்டது” என்பது உங்கள் பதிலாக இருக்கலாம்.

ஆனால் அந்தப் பதில் ஒருவகையில் தவறானதுஅப்படியென்றால் என்ன காரணம்?

உங்கள் கப்பில் காபி இருந்ததுஅதனால் காபி சிதறிவிட்டதுஒருவேளை அந்தக் கப்பில் தேநீர் இருந்திருக்குமானால் தேநீர்தான் சிதறியிருக்கும்.

கப்பின் உள்ளே என்ன இருக்கிறதோ அதுதானே சிதறும்.

இதை வாழ்க்கையில் பொருத்திப் பார்ப்போம்.

வெளியிலிருந்து ஏதேனும் நம்மை அசைத்துப் பார்க்கும்போதுநம் உள்ளே என்ன இருக்கிறதோ அதுவே வெளியே சிந்திச் சிதறும்.

இதைச் சொல்வது எளிதுகடைப்பிடிப்பது கடினம்தான்.

ஆனாலும் நம்மால் முடிந்தவரை முயற்சித்துப் பார்க்கலாம்.

வாழ்க்கையின் கடின நிகழ்வுகள் நம்மை அசைத்துப் பார்க்கும்போதுநம்மிடமிருந்து வெளியே சிந்திச் சிதறவேண்டியது என்னென்ன?

 

கோபம்மோசமான வார்த்தைகள்கசப்புணர்ச்சிபயம் இவைகளாநிச்சயம் இல்லை.

வாழ்க்கை நமக்கான கோப்பையை நம்மிடம் தந்திருக்கிறதுஅதில் நன்றிமன்னிப்புமகிழ்ச்சிகருணைஅன்புஇங்கிதமான வார்த்தைகள்

இவற்றை நிரப்பி வைத்திருந்தால்எந்த கடின சூழல் நம்மை அசைத்துப் பார்க்கும்போதும் நம்மிடமிருந்து வெளியே சிந்திச் சிதறுவது எல்லாம் நல்லவையாகத்தானே இருக்கும்!

நல்லவற்றை நமக்குள் நிரப்பி வைப்போம்!*

Comments

Popular posts from this blog

ரசவாதி - The Alchemist (Tamil) : பாலோ கொயலோ

உயர்வு

சூழ்நிலை