இரத்த அழுத்தம் உள்ளவர்கள் எந்த மாதிரியான உணவு பொருட்களை தவிர்க்கவேண்டும்…?

 உயர் இரத்த அழுத்தம் உள்ளவார்களுக்கு ஹார்மோன்

அளவு மாறுதல், சிறுநீரகக் பாதிப்புகள், சிறுநீரகத்துக்குக்

குறைவான இரத்தம் செல்லுதல், இதய தமணி சுருங்குதல்

போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது.


மனகவலை, பதற்றம், பயம், படபடப்பு, மன இறுக்கம்

போன்றவைகளால் இரத்த அழுத்தம் கூடலாம். உணவில்

அதிகமாக உப்பு சேர்த்து கொள்வதால் அதிகமான

அதிகபடியான உப்பு இரத்தத்தில் கலக்கிறது. இதனால்

இரத்தம் அதன் அடர்த்தி நிலையைக் குறைக்க உடலில்

உள்ள நீரை அதிகமாக எடுத்துக்கொண்டு சிறுநீரகம்

மூலமாக அதை வெளியே தள்ள முயல்கிறது.


இதனால் இரத்த அழுத்தம் கூடுகிறது. இரத்த அழுத்தம்

கூடினால் அது தேவையில்லாத பிரச்சனைகளுக்கு

வழிவகுக்கிறது.


வயிறு நிறைய உண்பதைத் தவிர்த்து எளிதில் ஜீரணமாகக்

கூடிய உணவை சாப்பிட வேண்டும். முதலில் சாப்பிட்ட

உணவு செரிமானம் அடைந்த பிறகு அடுத்தவேளை உணவு

அருந்துவது நல்லது.


எண்ணெயில் பொரித்த உணவுகளை அதிகம் உண்பதைத்

தவிர்க்க வேண்டும். மாமிச வகைகளை அறவே நீக்க

வேண்டும். புளிப்புப் பண்டங்கள், மசாலாப் பொருட்கள்,

காபி, டீ, அதிக உப்பு நிறைந்த உணவுகள், அசைவ உணவுகள்,

பருப்பு வகைகள், வாயுவைப் பெருக்கும் உணவுப்

பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.


மன அழுத்தத்தை உண்டாக்கும் கோபம், சதா சிந்தனை

போன்றவற்றை தவிர்க்க வேண்டும். புகை பிடிப்பது, மது

அருந்துவது போன்றவற்றை அறவே தவிர்க்க வேண்டும்.

Comments

Popular posts from this blog

ரசவாதி - The Alchemist (Tamil) : பாலோ கொயலோ

உயர்வு

சூழ்நிலை