வாழ்வைக் கொல்லும் விஷம்...!

  

(பெண்களுக்கு சமர்ப்பணம்)


அந்த ஊரின் அழகிய இளம்பெண் அவர்அவர் மணமுடித்த அவரின் கணவர் மேல் கடுமையான எரிச்சலும் கோபமும்ஒரு கட்டத்தில் அவனோடு வாழ முடியாது என்ற முடிவுக்கு வருகிறார்அவனைக் கொன்று விடவேண்டும் என்ற அளவுக்கு அவளிடத்தில் ஆவேசம்அந்தளவுக்கு கணவனின் கொடுமைகள்.

இதைப்பற்றி ஆலோசனை செய்ய தன் தாயிடம் வருகிறாள்.

தாயேஅவன் செய்யும் துன்புறுத்தல்களை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லைநாட்டின் சட்ட நடைமுறைகளைப் பற்றி நான் கவலைப் படுகிறேன்இல்லாவிட்டால் அவனை கொன்று விடுவேன்எனக்கு உதவிசெய்என்று தாயிடம் கூறினாள்.

நீ சொல்வதும் சரிதான்உனக்கு நான் உதவி செய்கிறேன்ஆனால் அதற்கு முன்னால் சில ஆலோசனைகள் தருகிறேன்அவற்றை நீ செயல்படுத்தினால் உன் மீது எந்த சந்தேகமும் ஏற்படாமல் உன் கணவனை கொன்று விடலாம் என்றாள் தாய்;

என்ன ஆலோசனைஎன்று மகள் கேட்டாள்எதுவாக இருந்தாலும் நான் தயாராக இருக்கிறேன் என்றும் கூறினாள்.

தாய் நிதானமாக சொல்ல ஆரம்பித்தாள்:

1- அவரை சாகடிப்பதற்கு முன் அவருடன் சமரசம் செய்து கொள்ள வேண்டும்ஏனென்றால் அவர் இறந்து விட்ட பிறகு உன்னை யாரும் சந்தேகப்பட முடியாத அளவிற்கு உன்னுடைய சமரசம் இருக்கவேண்டும்.

 

2- நீ அவருடன் இணக்கமாக இருக்கிறாய் என்பதை காட்டுவதற்காக உன்னை நீ அழகு படுத்திக் கொள்ள வேண்டும்இளமையாகவும் கவர்ச்சியாகவும் தெரிய வேண்டும்உன்னை பற்றி எந்த சந்தேகமும் அவருக்கு வரக்கூடாது.

3- அவர் எதையும் உணராதபடி நீ அவருக்கும்அவரது குடும்பத்தினருக்கும் மிகவும் அன்பாகவும்நன்றியுணர்வுடனும் இருந்துஅவரை நன்கு கவனித்துக் கொள்ள வேண்டும்.

4- நீ பொறுமையாகவும்கோபம் குறைவானவளாகவும் இருக்க வேண்டும்மேலும் அவர் உன் பேச்சுக்கு அதிகம் மதிப்பளிக்க வேண்டும்மேலும் என் மனைவி சரியானவர் என்றும்எல்லோரும் உன்னைப்  பாராட்டுகிறார்கள் என்று சொல்லுமளவுக்கு அதிக மரியாதையுடன் நடக்க வேண்டும்.

5- எனது மனைவி பேராசை பிடித்தவள் இல்லை என்றும்பணத்தை நேசிப்பவர் அல்ல என்றும்அவர் கூறும் வரை அவரது செலவினங்களில் குறுக்கிடாமலும்உன்னுடைய செலவுகளை வீணாக்காமலும் கட்டுப்பாடுடன் நடந்து கொள்ள வேண்டும்.

6- அவரிடம் உனது குரலை உயர்த்தாதேஆனால் அவரிடம் நிம்மதியையும்அன்பையும் ஊக்குவிக்கும் விதமாக நடந்து கொள்அவரது நினைவுகள் எப்போதும் உன்னை சுற்றி வரும் விதமாக அவரை உபசரி,

இவற்றை நீ எவ்வளவு விரைவாக கடைபிடிக்கிறாயோ அந்தளவுக்கு அவரை நீ கொல்லும் பொழுது உன் மீது எந்த சந்தேகமும் ஏற்படாதுஎன்று கூறிய தாய் உன்னால் இவற்றையெல்லாம் செய்ய முடியுமாஎன்று கேட்டார்;

மிகவும் உற்சாகமாக "நிச்சயமாக என்னால் முடியும்என்று மகள் சொன்னதும்தாய் சிறிது பொடிகள் நிரப்பிய ஒரு குப்பியை கையில் கொடுத்துஇது மெல்லக் கொல்லும் விஷம்தினசரி உன் கணவரின் உணவில் இதை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வாஎன்று சொல்லிஅனுப்பி வைத்தார்;

 

ஏறத்தாழ ஒரு மாதம் கடந்ததுமகள் தன் தாயிடம் திரும்பி வந்தாள்சொன்னாள்:

அம்மாஎன் கணவரைக் கொல்லவோ அல்லது அவரை விட்டும் விலகவோ எனக்கு விருப்பமில்லைநான் அவரை மிகவும் நேசிக்கிறேன்ஏனென்றால் அவர் முற்றிலும் மாறிவிட்டார்அவர் இப்போது நான் நினைத்ததை விட மிகவும் நல்ல கணவராக செயல்படுகிறார்என்று மகிழ்ச்சியுடன் சொன்னவர்,

தாயேஅவருக்கு நான் விஷம் கொடுத்து வந்தேனேஅதன் பாதிப்பு ஏற்படாமல் நிறுத்துவதற்குவிஷத்தை முறிப்பதற்கு வழி இருக்கிறதாஎன்று கவலையோடு கேட்டாள்;

தாய் பதிலளித்தார்:

கவலைப்படாதே மகளே!  நான் முதலில் உனக்குக் கொடுத்தது வெறும் பொடி மட்டுமே.  அது அவரை ஒருபோதும் கொல்லாது.

உண்மையில்உன் கணவருக்கு நீ ஏற்படுத்திய பதற்றம்கருத்து வேறுபாடு மற்றும் நீ உண்டாக்கிய சிக்கல்களால் மெதுவாகக் கொல்லும் விஷம் நீ தான்.

நீ அவரை நேசிக்கவும்அவரை மதிக்கவும்அவரை கவனித்துக் கொள்ளவும் தொடங்கியபோது, ​​அவர் மிகவும் கனிவானமென்மையான கணவனாக மாறி இருப்பதை நீ  கண்டாய்;

ஆண்கள் உண்மையில் மோசமானவர்கள் அல்லஆனால் நாம் அவர்களுடன் தொடர்பு கொள்ளும் விதமும்,  அவர்கள் மீதான நமது பரிவுமே அவர்களுடைய உணர்வுகளையும் அணுகுமுறைகளையும் தீர்மானிக்கிறது.

பெண்கள் தங்கள் கணவருக்கு செலுத்தும் மரியாதைஅன்புகவனிப்பு மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றை முழுமையாகக் காட்ட முடிந்தால் அவர்கள் உங்களுக்காக 100% மாறிவிடுவார்கள்.

 

இன்றைய திருமண வாழ்க்கை பிரச்சினைகளில் கணவன்-மனைவிக்கிடையே அவர்களின் பெற்றோர்களின் பங்கு தான் பிரிவினைக்கு மிக முக்கிய காரணமாக இருக்கிறது என்பதை நாம் அறிகிறோம்.

Comments

Popular posts from this blog

ரசவாதி - The Alchemist (Tamil) : பாலோ கொயலோ

உயர்வு

சூழ்நிலை