கண்ணன் ஏன் காப்பாற்றவில்லை?

உத்தவர் கீதை


 

கண்ணன் ஏன் காப்பாற்றவில்லை?

அர்ஜுனனுக்காகத் தேரைச் செலுத்தி வழிநடத்தினானே தவிரஅர்ஜுனன் இடத்தில் தானே நின்று அவனுக்காகப் போராடவில்லை!

 

பகவான் கிருஷ்ணனின் குழந்தைப் பருவம் முதலேஅவருக்குப் பணிவிடைகள் செய்துதேரோட்டிபல்வேறு சேவைகள் புரிந்தவர் உத்தவர்இவர் தனது வாழ்நாளில்தனக்கென நன்மைகளோ வரங்களோ கண்ணனிடம் கேட்டதில்லை.

 

துவாபரயுகத்தில்தமது அவதாரப் பணி முடித்து விட்ட நிலையில்உத்தவரிடம் ஸ்ரீகிருஷ்ணர், "உத்தவரேஇந்த அவதாரத்தில் பலர் என்னிடம் பல வரங்களும்நன்மைகளும் பெற்றிருக்கின்றனர்.ஆனால்நீங்கள் எதுவுமே கேட்டதில்லைஏதாவது கேளுங்கள்தருகிறேன்உங்களுக்கும் ஏதாவது நன்மைகள் செய்துவிட்டேஎனது அவதாரப் பணியை முடிக்க நினைக்கிறேன்என்றார்.

 

தனக்கென எதையும் கேட்காவிட்டாலும்சிறு வயது முதலே கண்ணனின் செயல்களைக் கவனித்து வந்த உத்தவருக்குசொல் ஒன்றும்செயல் ஒன்றுமாக இருந்த கண்ணனின் லீலைகள்புரியாத புதிராக இருந்தனஅவற்றுக்கான காரணகாரியங்களைத் தெரிந்து கொள்ள விரும்பினார்.

 

"பெருமானேநீ வாழச் சொன்ன வழி வேறுநீ வாழ்ந்து காட்டிய வழி வேறுநீ நடத்திய மகாபாரத நாடகத்தில்நீ ஏற்ற பாத்திரத்தில்நீ புரிந்த செயல்களில்எனக்குப் புரியாத விஷயங்கள் பல உண்டுஅவற்றுக்கெல்லாம் காரணங்களை அறிய ஆவலாக இருக்கிறேன்நிறைவேற்றுவாயா?" என்றார் உத்தவர்.

 

"உத்தவரேஅன்று குருக்ஷேத்திரப் போரில் அர்ஜுனனுக்காக நான் சொன்னது, 'பகவத் கீதை’. இன்று உங்களுக்குத் தரும் பதில்கள், 'உத்தவ கீதை’. அதற்காகவே உங்களுக்கு இந்தச் சந்தர்ப்பத்தைத் தந்தேன்தயங்காமல் கேளுங்கள்என்றான் பரந்தாமன்.

 

உத்தவர் கேட்க ஆரம்பித்தார்: "கண்ணாமுதலில் எனக்கு ஒரு விளக்கம் வேண்டும்.கிருஷ்ணாநீ பாண்டவர்களின் உற்ற நண்பன்உன்னை அவர்கள் ஆபத்பாந்தவனாகபரிபூரணமாக நம்பினார்கள்நடப்பதை மட்டுமல்லநடக்கப் போவதையும் நன்கறிந்த ஞானியான நீ, 'உற்ற நண்பன் யார்’ என்பதற்கு நீ அளித்த விளக்கத்தின்படமுன்னதாகவே சென்று, 'தருமாவேண்டாம் இந்தச் சூதாட்டம்’ என்று தடுத்திருக்கலாம் அல்லவாஏன் அப்படிச் செய்யவில்லை?போகட்டும்விளையாட ஆரம்பித்ததும்தருமன் பக்கம் அதிர்ஷ்டம் இருக்கும்படி செய்துவஞ்சகர்களுக்கு நீதி புகட்டியிருக்கலாம்அதையும் நீ செய்யவில்லைதருமன் செல்வத்தை இழந்தான்நாட்டை இழந்தான்தன்னையும் இழந்தான்சூதாடியதற்குத் தண்டனையாகஅதோடு அவனை விட்டிருக்கலாம்.

 

தம்பிகளை அவன் பணயம் வைத்த போதாவதுநீ சபைக்குள் நுழைந்து தடுத்திருக்கலாம்அதையும் நீ செய்யவில்லை. 'திரௌபதி அதிர்ஷ்டம் மிக்கவள்அவளைப் பணயம் வைத்து ஆடுஇழந்தது அனைத்தையும் திருப்பித் தருகிறேன்’ என்று சவால் விட்டான் துரியோதனன்.

 

அப்போதாவதுஉனது தெய்வீக சக்தியால்அந்த பொய்யான பகடைக் காய்கள் தருமனுக்குச் சாதகமாக விழும்படி செய்திருக்கலாம்அதையும் செய்யவில்லைமாறாகதிரௌபதியின் துகிலை உரித்துஅவளின் மானம் பறிபோகும் நிலை ஏற்பட்ட போதுதான் சென்று, ';துகில் தந்தேன்திரௌபதி மானம் காத்தேன்’ என்று மார்தட்டிக் கொண்டாய்.

 

மாற்றான் ஒருவன்குலமகள் சிகையைப் பிடித்து இழுத்து வந்துசூதர் சபையில் பலர் முன்னிலையில்அவள் ஆடையில் கை வைத்த பிறகுஎஞ்சிய மானம் என்ன இருக்கிறதுஎதனைக் காத்ததாக நீ பெருமைப்படுகிறாய்ஆபத்தில் உதவுபவன்தானே ஆபத் பாந்தவன்இந்த நிலையில் உதவாத நீயா ஆபத்பாந்தவன்நீ செய்தது தருமமா?';'; என்று கண்ணீர் மல்கக் கேட்டார் உத்தவர்.

 

இது உத்தவரின் உள்ளக் குமுறல் மட்டுமன்றுமகாபாரதம் படித்துவிட்டு நாம் அனைவருமே கேட்கும் கேள்விகளே இவைநமக்காக இவற்றை அன்றே கண்ணனிடம் கேட்டிருக்கிறார் உத்தவர்.

 

பகவான் சிரித்தார். "உத்தவரேவிவேகம் உள்ளவனே ஜெயிக்க வேண்டும் என்பது உலக தர்ம நியதிதுரியோதனனுக்கு இருந்த விவேகம் தருமனுக்கு இல்லைஅதனால்தான் தருமன் தோற்றான்என்றான் கண்ணன்.

 

உத்தவர் ஏதும் புரியாது திகைத்து நிற்ககண்ணன் தொடர்ந்தான்.

"துரியோதனனுக்கு சூதாடத் தெரியாதுஆனால்பணயம் வைக்க அவனிடம் பணமும்ஏராளமான ஆஸ்தியும் இருந்தது. 'பணயம் நான் வைக்கிறேன்என் மாமா சகுனிபகடையை உருட்டிச் சூதாடுவார்’ என்றான் துரியோதனன்அது விவேகம்.தருமனும் அதுபோலவே விவேகத்துடன் செயல்பட்டு, 'நானும் பணயம் வைக்கிறேன்ஆனால்என் சார்பாக என் மைத்துனன் ஸ்ரீகிருஷ்ணன் பகடைக்காயை உருட்டுவான்என்று சொல்லியிருக்கலாமே?

 

சகுனியும் நானும் சூதாடியிருந்தால்யார் ஜெயித்திருப்பார்கள்நான் கேட்கும் எண்ணிக்கைகளைச் சகுனியால் பகடைக் காய்களில் போடத்தான் முடியுமாஅல்லதுஅவன் கேட்கும் எண்ணிக்கைளை என்னால்தான் போட முடியாதாபோகட்டும்.

 

தருமன் என்னை ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ள மறந்துவிட்டான் என்பதையாவது மன்னித்து விடலாம்ஆனால்அவன் விவேகமில்லாமல் மற்றொரு மாபெரும் தவறையும் செய்தான். 'ஐயோவிதிவசத்தால் சூதாட ஒப்புக்கொண்டேனேஆனால்இந்த விஷயம் ஸ்ரீகிருஷ்ணனுக்கு மட்டும் தெரியவே கூடாதுகடவுளேஅவன் மட்டும் சூதாட்ட மண்டபத்துக்கு வராமல் இருக்க வேண்டும்’ என்றுவேண்டிக் கொண்டான்என்னை மண்டபத்துக்குள் வர முடியாதவாறுஅவனே கட்டிப் போட்டுவிட்டான்நான் அங்கு வரக் கூடாதென என்னிடமே வேண்டிக்கொண்டான்.யாராவது தனது பிரார்த்தனையால் என்னைக் கூப்பிட மாட்டார்களா என்று மண்டபத்துக்கு வெளியில் காத்துக்கொண்டு நின்றேன்.

 

பீமனையும்அர்ஜுனனையும்நகுலசகாதேவர்களையும் வைத்து இழந்தபோதுஅவர்களும் துரியோதனனைத் திட்டிக் கொண்டும்தங்கள் கதியை எண்ணி நொந்து கொண்டும் இருந்தார்களே தவிரஎன்னைக் கூப்பிட மறந்துவிட்டார்களே!

 

அண்ணன் ஆணையை நிறைவேற்ற துச்சாதனன் சென்றுதிரௌபதியின் சிகையைப் பிடித்தபோதுஅவளாவது என்னைக் கூப்பிட்டாளாஇல்லைஅவளும் தனது பலத்தையே நம்பிசபையில் வந்துவாதங்கள்செய்து கொண்டிருந்தாளே ஒழியஎன்னைக் கூப்பிடவில்லை!

 

நல்லவேளை.. துச்சாதனன் துகிலுரித்த போதும் தனது பலத்தால் போராடாமல், 'ஹரி... ஹரி... அபயம் கிருஷ்ணாஅபயம்’ எனக் குரல் கொடுத்தாள் பாஞ்சாலி.

 

அவளுடைய மானத்தைக் காப்பாற்ற அப்போதுதான் எனக்கு சந்தர்ப்பம் கிடைத்ததுஅழைத்ததும் சென்றேன்.

 

அவள் மானத்தைக் காக்க வழி செய்தேன்இந்தச் சம்பவத்தில் என் மீது என்ன தவறு?" என்று பதிலளித்தான் கண்ணன்.

 

"அருமையான விளக்கம் கண்ணாஅசந்துவிட்டேன்ஆனால்ஏமாறவில்லைஉன்னை இன்னொரு கேள்வி கேட்கலாமா?" என்றார் உத்தவர்.

 

"கேள்என்றான் கண்ணன்.

"அப்படியானால்கூப்பிட்டால்தான் நீ வருவாயாநீயாகநீதியை நிலை நாட்டஆபத்துகளில் உன் அடியவர் களுக்கு உதவ வரமாட்டாயா?"

 

புன்னகைத்தான் கண்ணன்.

"உத்தவாமனித வாழ்க்கை அவரவர் கர்ம வினைப்படி அமைகிறதுநான் அதை நடத்துவதும் இல்லைஅதில் குறுக்கிடுவதும் இல்லைநான் வெறும் 'சாட்சி பூதம்’. நடப்பதையெல்லாம் அருகில் நின்று பார்த்துக்கொண்டு நிற்பவனேஅதுதான் தெய்வ தர்மம்என்றான்.

 

"நன்றாயிருக்கிறது கிருஷ்ணாஅப்படியானால்நீ அருகில் நின்றுநாங்கள் செய்யும் தீமைகளையெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பாய்நாங்கள் தவறுகளைத் தொடர்ந்து செய்து கொண்டேயிருந்து பாவங்களைக் குவித்துதுன்பங்களை அனுபவித்துக் கொண்டே இருக்க வேண்டும்அப்படித்தானே?" என்றார் உத்தவர்.

 

"உத்தவரேநான் சொன்ன வாசகங்களின் உட்பொருளை நன்றாக உணர்ந்து பாருங்கள்நான் சாட்சி பூதமாக அருகில் நிற்பதை நீங்கள் உணரும் போதுஉங்களால் தவறுகளையோ தீவினைகளையோ நிச்சயமாகச் செய்ய முடியாதுஅதை நீங்கள் மறந்துவிடும் போதுதான்எனக்குத் தெரியாமல் செயல்களைச் செய்துவிடலாம் என்று எண்ணுகிறீர்கள்.

 

பாதிப்புக்கு உள்ளாக்கும் சம்பவங்கள் நிகழ்வதும் அப்போதுதான்எனக்குத் தெரியாமல் சூதாடலாம் என்று தருமன் நினைத்தானேஅதுதான் அவனது அஞ்ஞானம்நான் சாட்சி பூதமாக எப்போதும்எல்லோருடனும் இருப்பவன் என்பதை தருமன் உணர்ந்திருந்தால்இந்த சூதாட்ட நிகழ்ச்சி வேறு விதமாக முடிந்திருக்கும் அல்லவா?" என்றான் ஸ்ரீகிருஷ்ணன்.

 

உத்தவர் வாயடைத்துபக்திப் பரவசத்தில் ஆழ்ந்தார்ஆகாஎத்தனை ஆழமான தத்துவம்எத்தனை உயர்ந்த சத்யம்!பகவானைப் பூஜிப்பதும்பிரார்த்தனை செய்வதும்அவனை உதவிக்கு அழைக்கும் ஓர் உணர்வுதானே! "அவனின்றி ஓர் அணுவும் அசையாதுஎன்ற நம்பிக்கை வரும்போதுஅவன் சாட்சி பூதமாக அருகில் நிற்பதை எப்படி உணராமல் இருக்க முடியும்அதனை மறந்துவிட்டு எப்படிச் செயலாற்ற முடியும்?

 

இந்த தத்துவத்தைதான் பகவத்கீதை முழுவதிலும் கண்ணன் அர்ஜுனனுக்கு உபதேசித்தான்.

 

Comments

Popular posts from this blog

ரசவாதி - The Alchemist (Tamil) : பாலோ கொயலோ

உயர்வு

சூழ்நிலை