ஒரு ஏக்கர்... ரூ.2.45 லட்சம்... செழிப்பான வருமானம் தரும் செம்பருத்தி!

 





விருதுநகரைச் சேர்ந்த வனவியல் பட்டதாரியான சாந்தி சுப்புலெட்சுமி இயற்கை முறையில் செம்பருத்தி சாகுபடி செய்து வருகிறார். இதில் கிடைக்கும் பூக்களை, உலர் பூக்களாக மதிப்புக்கூட்டி விற்பனை செய்வதன் மூலம் நிறைவான லாபம் பார்த்து வருகிறார். விருதுநகர் மாவட்டம் சாத்தூரிலிருந்து 15 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது நள்ளி என்ற கிராமம். இக்கிராமத்தின் தொடக்கத்திலேயே செழிப்பாகக் காட்சி அளித்துக்கொண்டிருக்கிறது, சாந்தி சுப்புலெட்சுமியின் செம்பருத்தித் தோட்டம்.



எங்க குடும்பத்துக்கு நாலு ஏக்கர் நிலம் இருக்கு. ஒரு ஏக்கர் பரப்புல செம்பருத்தி பயிர் பண்ணினேன்.


கடந்த 6 மாசமா, தொடர்ச்சியா வருமானம் கிடைச்சுக்கிட்டு இருக்கு. மீதி மூணு ஏக்கர்ல மருதாணி, துளசி, ஆடாதொடை சாகுபடி செய்ய நிலத்தைத் தயார் படுத்திக்கிட்டு இருக்கேன்” என்று சொன்ன சாந்தி சுப்புலெட்சுமி, செம்பருத்தி சாகுபடி மூலம் கிடைக்கும் வருமானம் குறித்து விவரித்தார்.


“ஒரு ஏக்கர் பரப்புல மொத்தம் 1,800 செம்பருத்தி செடிகள் இருக்கு. கடந்த 6 மாசமா பூ பறிச்சுகிட்டு இருக்கேன். இதுவரைக்கும் 1,700 கிலோ பூ கிடைச்சிருக்கு. அதை நிழல்ல உலர வச்சி பதப்படுத்தியது மூலமா, 340 கிலோ உலர்ந்த பூ கிடைச்சிருக்கு. ஒரு கிலோவுக்குச் சராசரியா 500 ரூபாய் வீதம் மொத்தம் 1,70,000 ரூபாய் வருமானமாக் கிடைச்சிருக்கு. இன்னும் மூணு மாசம் வரைக்கும் பூ பறிக்கலாம். இன்னும் 150 கிலோ உலர்பூ கிடைக்கும்னு எதிர்பார்க்குறேன். அந்த வகையில 75,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். ஆக மொத்தம் 2,45,000 ரூபாய் கிடைக்கும்னு எதிர்ப்பார்க்கிறேன். இந்த 6 மாசத்துக்கான பராமரிப்பு, பறிப்பு கூலி எல்லாம் சேர்த்து 44,000 ரூபாய் செலவாயிருக்கு. அதுபோக 2,01,000 லாபமா கிடைக்கும். அதுக்குப் பிறகு கவாத்து பண்ணணும். அடுத்த மூணு மாசம் கழிச்சி மறுபடியும் மகசூல் கிடைக்க ஆரம்பிக்கும். தொடர்ச்சியா 9 மாசம் வருமானம் பார்க்கலாம்.




உலர் பூவை கோயம்புத்தூர். சென்னை, டெல்லியில இருக்கக்கூடிய சித்த மருத்துவக் கம்பெனிகளுக்கும், ஆயுர்வேத மருந்துகள் உற்பத்தி நிலையங்களுக்கும் நானே நேரடியாக விற்பனை செஞ்சுக்கிட்டு இருக்கேன். இதுபோக, உள்ளூர்ல உள்ள ஒரு சில சித்த மருத்துவர்களும் என்கிட்ட இருந்து உலர் செம்பருத்திப் பூவை வாங்குறாங்க. மூலிகை தேநீர் பொடி, இயற்கை கூந்தலுக்கான இயற்கை பொடி, செம்பருத்தி பானம், செம்பருத்தி ஜாம்னு மதிப்புக்கூட்டி விற்பனை செய்றதுக்கும் முயற்சி செஞ்சிக்கிட்டு இருக்கேன். அதிக பராமரிப்பு இல்லாமலே, நிறைவான வருமானத்தைக் கொடுக்கக்கூடியது செம்பருத்தி” என்றபடியே செம்பருத்திப் பூக்களைக் கைநிறைய அள்ளிக்காட்டினார்.



தொடர்புக்கு,


சாந்தி சுப்புலெட்சுமி,


செல்போன்: 94428 35932

Comments

Popular posts from this blog

ரசவாதி - The Alchemist (Tamil) : பாலோ கொயலோ

உயர்வு

சூழ்நிலை