Rama navami ராம நவமி சிந்தனை

 ராமன் உலகைக் காக்க வந்தான் !

லக்ஷ்மணன் அவனைக் காக்க வந்தான் !

பரதன் நாட்டைக் காக்க வந்தான் !
சத்துருக்கனன் அவனைக் காக்க வந்தான் !

ராமன் தர்மம் சொன்னபடி நடந்தான் !
லக்ஷ்மணன் ராமன் சொன்னபடி நடந்தான் !

பரதன் ராம பாதுகையோடு நடந்தான் !
சத்துருக்கனன் பரதனுக்கு பாதுகையாய் நடந்தான் !

ராமன் சீதையோடு நடந்தான் !
லக்ஷ்மணன் ராமனோடு நடந்தான் !

பரதன் ராமனுக்காய் நடந்தான் !
சத்துருக்கனன் பரதனுக்காய் நடந்தான் !

ராமன் தந்தை சொல் காத்தான் !
லக்ஷ்மண் தாய் சொல் காத்தான் !

பரதன் ராமன் சொல் காத்தான் !
சத்துருக்கனன் பரதன் சொல் காத்தான் !

ராமனோ தர்மம் !
லக்ஷ்மணனோ கைங்கரியம் !
பரதனோ நியாயம் !
சத்துருக்கனனோ சத்தியம் !

புனர்பூசமும், பூசமும், ஆயில்யமும் மூன்றும் தந்ததோ நால்வகை மோக்ஷம் !

நவமியும், தசமியும் தந்ததோ நால்வகை பிரயோஜனம் !

நேற்று ராம நவமி கொண்டாடினாய் !!!
நீ சுகப்பட்டாய் !
இன்று கொண்டாடினால் ராமனே சுகப்படுவான் !

பழி வந்தால் பரதனாயிரு !
சேவை செய்ய லக்ஷ்மணனாயிரு !
சிரத்தையில் சத்துருக்கனனாயிரு !

மொத்தத்தில் ராமனுக்கு பிடித்தமாதிரி இரு ! 🙏🏻

Comments

Popular posts from this blog

ரசவாதி - The Alchemist (Tamil) : பாலோ கொயலோ

உயர்வு

சூழ்நிலை