கிருஷ்ணரின் அருள் வார்த்தைகள்

 காரணம் சொல்லாதே பக்தி செய் ; பக்தி செய்யாமலிருக்க காரணம் சொல்லாதே !

உலகில் காரணம் சொன்னவர்கள் ஜெயித்ததில்லை !!!

நீ சொல்கின்ற காரணங்களில் பல பக்தர்கள் வாழ்விலும் இருந்தது !

அவர்கள் அதையும் தாண்டித்தான் பக்தி செய்தார்கள்நீயும்

அவர்களைப் போல் முயற்சித்துப் பார் !

1. தகப்பன் கொடுமைக்காரனா ? ப்ரஹ்லாதனைப் போல் பக்தி செய் !

2. தாயால் கெட்ட பெயரா ? பரதனைப் போல் பக்தி செய் !

3. அண்ணனே உன்னை அவமதிக்கிறானா ? தியாகராஜரைப் போல் பக்தி செய் !

4. குடும்பத்தில் தரித்ரம் தலைவிரித்தாடுகிறதாகுசேலரைப் போல்பக்தி செய் !

5. மனைவி அடங்காப் பிடாரியா ? சந்த் துகாராமைப் போல் பக்தி செய் !

6. கணவன் கொலைகாரப் பாவியா ? மீராவைப் போல் பக்தி செய் !

7. புகுந்த வீட்டில் கொடுமையா ? சக்குபாயைப் போல் பக்தி செய் !

8. பெற்ற பிள்ளையை இழந்துவிட்டாயா ? பூந்தானத்தைப் போல் பக்தி செய் !

9. பெற்ற தாயை சிறுவயதில் இழந்துவிட்டாயாநாரதரைப் போல் பக்தி செய் !

10. நீ வேலைக்காரி பெற்ற பிள்ளையா ? விதுரரைப் போல் பக்தி செய் !

11. நீ தப்பான குடும்பத்தில் பிறந்தவளா ? கானோ பாத்ராவைப் போல் பக்தி செய் !

12. உடலில் வியாதியால் வேதனையா ? நாராயண பட்டத்ரியைப் போல் பக்திசெய்!

13. யாராவது கை கால்களை வெட்டிவிட்டார்களா ? ஜயதேவரைப் போல் பக்தி செய் !

14. இளம் விதவையாய் குழந்தைகளுக்காக வாழ்கிறாயா ? குந்திதேவியைப் போல் பக்தி செய் !

15. மனைவியை இழந்து குழந்தைகளோடு வாழ்கிறாயா ? மாதவேந்திரபுரியைப் போல் பக்தி செய் !

16. சொந்தக்காரர்களே உன் குடும்பத்தை ஏமாற்றிவிட்டார்களா ? பாண்டவர்களைப் போல் பக்தி செய் !

17. உடன் பிறந்த தம்பியே உனக்கு விரோதியா ? ஜயமல்லரைப் போல் பக்தி செய் !

18. பெற்ற குழந்தையே உன்னை கேவலமாக நடத்துகிறதா ?கைகேயியைப் போல் பக்தி செய் !

19. உன் குழந்தைக்கு மூளை வளர்ச்சி இல்லையா ? நம்மாழ்வாரின் தாயார் உடையநங்கையப் போல் பக்தி செய் !

20. குடும்பத்தினர் யாரும் ஆதரிக்கவில்லையா ? வால்மீகியைப் போல் பக்தி செய் !

21. கல்யாணம் செய்து கொள்ளாமல் வாழ்கின்றாயா ? பீஷ்மரைப் போல் பக்தி செய் !

22. உன் கணவன் கஞ்சனா ? புரந்தரரின் மனைவி லக்ஷ்மியைப் போல் பக்தி செய் !

23. வியாபாரத்தில் நஷ்டமா ? சாருகாதாஸரைப் போல் பக்தி செய் !

24. உன் கணவன் நாஸ்திகனா ? மண்டோதரியைப் போல் பக்தி செய் !

25. உன் கணவன் சன்னியாசியாகிவிட்டாரா ? விஷ்ணுப்ரியாதேவியைப் போல் பக்தி செய் !

26. கணவன் உன்னை கண்டு கொள்வதில்லையா ? சுநீதியைப் போல் பக்தி செய் !

27. குடும்பத்தினர் உன்னை ஒதுக்கிவிட்டார்களா ? ஜடபரதரைப் போல் பக்தி செய் !

28. நீ வேலை பார்க்கும் இடத்தில் தொந்தரவா ? அக்ரூரரைப் போல் பக்தி செய் !

29. ஊரே உன்னை ஒதுக்கிவிட்டதா ? சோகாமேளரைப் போல் பக்தி செய் !

30. சுகமாக வாழ்ந்து இப்பொழுது கஷ்டமா ? ரந்திதேவரைப் போல் பக்தி செய் !

31. உனக்கு குழந்தை பாக்கியம் இல்லையா ? யசோதையைப் போல்பக்தி செய் !

32. பிறந்த குழந்தைகள் எதுவும் தங்கவில்லையா ? தேவகியைப் போல் பக்தி செய் !

33. அறிவு ஒன்றும் இல்லாத முட்டாளா ? கோபர்கள்கோபிகைகள் போல் பக்தி செய் !

34. பிறவிக் குருடனா ? சூர்தாஸரைப் போல் பக்தி செய் !

35. உடல் ஊனமுற்றவரா ? கூர்மதாஸரைப் போல் பக்தி செய் !

36. நீ ப்ருஹந்நிலை போல் அரவாணியா ? சுஹக்ஷாவைப் போல் பக்தி செய் !

37. நீ பிச்சை எடுத்து வாழ்கின்றாயா ? பந்து மஹாந்தியைப் போல் பக்தி செய் !

38. உலகிற்கு நல்லது செய்தும் அவமரியாதையா ? பத்ராசல ராமதாசரைப் போல் பக்தி செய் !

39. வாழ்க்கையே பிரச்சனையா ? மஹாராஜா ஸ்வாதித்திருநாளைப் போல் பக்தி செய் !இன்னும் பலகோடி பக்தர்கள் உண்டு !

பக்தி ஒன்று தான் உன் வாழ்க்கைக்கு என்றும் ஒரே ஆதாரம் ! அதை செய்யாமல் நீ எதைச் செய்தாலும் உனக்கு சமாதானம் இல்லை ! இதுவரை காரணம் சொல்லி உன் ஆனந்தத்தை நீ தொலைத்தது போதாதோ ? இனிமேல் காரணம் சொல்லாதே !

கிருஷ்ணனிடம் பக்தி செய்ய தொடங்கிவிடு !!

Comments

Popular posts from this blog

ரசவாதி - The Alchemist (Tamil) : பாலோ கொயலோ

உயர்வு

சூழ்நிலை