செய்யும்_தொழிலே_சிறந்தது!!!

பரந்தாமன் கல் உடைப்பவன். கல் உடைப்பதைவிட நல்ல வேலை கிடைக்கக் கடவுளை வேண்டினான்.

ஒரு நாள் அவன் முன்னால் கடவுள் தோன்றி 'உனக்கு என்ன வேண்டும்' என்றார்'.

'சூரியன் உலகம் முழுக்கத் தெரியும், நானும் அவ்வாறு தெரிய ஆசைப்படுகிறேன் எனவே 'சூரியனாக வேண்டும் ' என்றான்.

கடவுள் சம்மதம் தெரிவிப்பதற்குள் சூரியனை மேகம் மறைத்தது.  உடனே 'மேகம்'ஆக வேண்டும்' என்றான்.

மேகத்தை மழை மேகங்கள் மறைக்க, தான் 'மழை மேகமாக' ஆக வேண்டும் என்றான்.

மேகம் மழையாகப் பெய்தபின் 'மழையாக' வேண்டும் என்றான்.

மழைநீர் நதியாக ஓடியதைப் பார்த்து 'நதியாக மாறவேண்டும்' என்று ஆசைப்பட்டான்.

ஓடி வந்த நதியை ஒரு பெரிய பாறாங்கல் தடுத்ததைப் பார்த்து 'கல்லாக வேண்டும்'என்றான்.

உடனே கடவுள் அந்தக் கல்லையே உடைக்கும் நீ சிறந்தவன் தானே..என்றார், சற்று சிந்தித்த பரந்தாமன் ஆமாம்..ஆமாம்..என்றான்.

#சிரித்த_கடவுள்

'இருக்கும் இடமே சொர்க்கம்'
'இருக்கும் நிலையே நல்ல நிலை'
'செய்யும் தொழிலே சிறந்த தொழில்'

என்பதை அனைவரும்  உணர்ந்து கொள்ள வேண்டும் என்றார்.

Comments

Popular posts from this blog

சூழ்நிலை

Anger Is The Key To Every Evil

Nothing can compete with The knowledge gained from poor, confidence