Always Be Yourself And Live Happily
😃முகத்தில் புன்னகையோடு
வலம் வந்தேன்
😂"கள்ளச்சிரிப்பு " என்றார்கள்
☺கோபங் கொண்டேன்
☺" சிடுமூஞ்சி" என்றார்கள்.
👨அதிகம் பேசாமலிருந்தேன்,
👨" ஊமையன்" என்றார்கள்.
❤சளசளவென்று பேசினேன்...!!
❤" ஓட்டவாய் " என்றார்கள்.
💙புதிய தகவல்களை பரிமாறினேன்
💙" கருத்து கந்தசாமி " என்றார்கள்.
💚அவர்கள் வார்த்தைகளுக்கு செவி சாய்த்தேன்,
💚" ஜால்ரா " என்றார்கள்.
💖எல்லா செயல்களிலும்
முன் நின்று செய்தேன்....!!
💖முந்திரிக்கொட்டை என்றார்கள்.
💛அவர்களைப் பின் தொடர்ந்தேன்,
💛" நடிப்பு" என்றார்கள்.
🍁யாரைப் பார்த்தாலும் வணங்கினேன்🍁
🍁" ஏமாற்றுக்காரன்" என்றார்கள்.
🌻வணங்குவதை நிறுத்தினேன்,
🌻"தலைக்கனம்" என்றார்கள்.
🌺ஆலோசனை வழங்கினேன்,
🌺" படிச்ச திமிர்" என்றார்கள்.
💓சுயமாக முடிவெடுத்தேன்,
💓" அதிபுத்திசாலி "என்றார்கள்.
😥நான் கண்ணீர் விட்டு அழுததால்,
😥"வேஷக்காரன்" என்றார்கள்.
💕நான் சிரித்த போதெல்லாம்,
💕மறை கழண்டுப் போச்சு" என்றார்கள்
💚எதிர்கேள்வி கேட்டால்,
💚வில்லங்கம் என்றார்கள்
💖ஒதுங்கி இருந்தால்,
💖"பயந்தாங்கொள்ளி " என்றார்கள்.
💛உரிமைக்குப் போராடினால்,
💛"கலகக்காரன் " என்றார்கள்.
❤எதற்கும் கலங்காமல் இருந்தால்,
❤"கல் நெஞ்சன்" என்றார்கள்.
🌻"நாலு பேர் என்ன நினைப்பார்கள்,
நாலுபேர் என்ன பேசுவார்கள்,
யாரோ நாலு பேருக்காக வாழ்ந்தேன்.
தொலைவில் கிடந்தது என் வாழ்க்கை.
அந்த நாலு பேரை கழற்றி விட்டு,
என்னை அணிந்துக் கொண்டேன்,
துலங்கத் துவங்கியது
எனக்கான வாழ்வின் துளிர்
❤வாழ்கிறேன் முழுமையாக, இன்பமாக
குறிப்பாக மிக நிம்மதியாக.
Comments
Post a Comment