Always Be Yourself And Live Happily

😃முகத்தில் புன்னகையோடு

வலம் வந்தேன்

😂"கள்ளச்சிரிப்பு " என்றார்கள்

☺கோபங் கொண்டேன்

☺" சிடுமூஞ்சி" என்றார்கள்.

👨அதிகம் பேசாமலிருந்தேன்,

👨" ஊமையன்" என்றார்கள்.

❤சளசளவென்று பேசினேன்...!!

❤" ஓட்டவாய் " என்றார்கள்.

💙புதிய தகவல்களை பரிமாறினேன்

💙" கருத்து கந்தசாமி " என்றார்கள்.

💚அவர்கள் வார்த்தைகளுக்கு செவி சாய்த்தேன்,

💚" ஜால்ரா " என்றார்கள்.

💖எல்லா செயல்களிலும்

முன் நின்று செய்தேன்....!!

💖முந்திரிக்கொட்டை என்றார்கள்.

💛அவர்களைப் பின் தொடர்ந்தேன்,

💛" நடிப்பு" என்றார்கள்.

🍁யாரைப் பார்த்தாலும் வணங்கினேன்🍁

🍁" ஏமாற்றுக்காரன்" என்றார்கள்.

🌻வணங்குவதை நிறுத்தினேன்,

🌻"தலைக்கனம்" என்றார்கள்.

🌺ஆலோசனை வழங்கினேன்,

🌺" படிச்ச திமிர்" என்றார்கள்.

💓சுயமாக முடிவெடுத்தேன்,

💓" அதிபுத்திசாலி "என்றார்கள்.

😥நான் கண்ணீர் விட்டு அழுததால்,

😥"வேஷக்காரன்" என்றார்கள்.

💕நான் சிரித்த போதெல்லாம்,

💕மறை கழண்டுப் போச்சு" என்றார்கள்

💚எதிர்கேள்வி கேட்டால்,

💚வில்லங்கம் என்றார்கள்

💖ஒதுங்கி இருந்தால்,

💖"பயந்தாங்கொள்ளி " என்றார்கள்.

💛உரிமைக்குப் போராடினால்,

💛"கலகக்காரன் " என்றார்கள்.

❤எதற்கும் கலங்காமல் இருந்தால்,

❤"கல் நெஞ்சன்" என்றார்கள்.

🌻"நாலு பேர் என்ன நினைப்பார்கள்,

நாலுபேர் என்ன பேசுவார்கள்,

யாரோ நாலு பேருக்காக வாழ்ந்தேன்.

தொலைவில் கிடந்தது என் வாழ்க்கை.

அந்த நாலு பேரை கழற்றி விட்டு,

என்னை அணிந்துக் கொண்டேன்,

துலங்கத் துவங்கியது

எனக்கான வாழ்வின் துளிர்

❤வாழ்கிறேன் முழுமையாக, இன்பமாக

குறிப்பாக மிக நிம்மதியாக.

Comments

Popular posts from this blog

சூழ்நிலை

எந்த சூழ்நிலையிலும் இறைவன் கைவிட மாட்டார்..!

இளம் வயதில் முன்னேற்றம்... 10 பாசிட்டிவ் வழிகள் !