Posts

யாரிடம் எப்போது எப்படிப் பேச வேண்டும்

  மன்னருக்கு   மீன்   கொண்டு   வந்தான் ஒரு   மீனவன்  ' அரிதான   இந்த   மீனை   தாங்கள்   வாங்குவது   தான்   பொருத்தமாக   இருக்கும் '  என்றான் .  மன்னரும்   மகிழ்ந்து   அவனுக்கு   ஐந்தாயிரம்   பொற்காசுகள்   கொடுத்தார் . மகாராணி   கொதித்து   விட்டார் . ' ஒரு   அற்ப   மீனுக்கு   இவ்வளவு   பணமா ?'  அதை   திரும்ப   வாங்குங்கள்   என்றாள் . ' முடிந்தவியாபாரத்தை   மாற்றுவது   அழகல்ல '  என்று   மன்னர்   மறுத்தார் . ' சரி   அவனை   கூப்பிட்டு   இந்த   மீன்   ஆணா   பெண்ணா   என்று   கேளுங்கள்   ஆண்   மீன்   என்று   அவன்   சொன்னால்   பெண்   மீன்தான்   வேண்டும்   என்றும்   பெண்   மீன்   என்று   சொன்னால்   ஆண்   மீன்   தான்   வேண்டும்   என்றும்   கேளுங்கள் .  எப்படியும்   அவனிடமிருந்து   பொற்காசுகளை   பிடுங்கி   ஆக   வேண்டும் '  என்றாள்   மகாராணி .   மீனவன்   திருப்பி   அழைக்கபட்டான் .  கேள்வி   கணையை   மகாராணி   தொடுத்தாள் .  அவன்   உஷாராக   பதில்   சொன்னான்  ' இது   ஆணுமில்லை   பெண்ணுமில்லை '  இரண்டின்   குணங்களையும்   கொண்ட   அதிசய   மீன் .  அதனால்   தான்   அத

இந்தக் கணப்பொழுது முக்கியம் நண்பர்களே!

 அது ஒரு பெரிய மைதானம். அங்கே மூன்று பையன்கள் விளையாடிக்கொண்டிருந்தார்கள். அந்த வழியாகச் சென்ற ஒரு சாமியார் அவர்களைக் கவனித்தார். குழந்தைகள் உற்சாகமாகச் சிரித்து விளையாடுவதைச் சிறிது நேரம் ரசித்தார். அதன்பிறகு அவர் மெல்லமாகக் கைதட்டி அவர்களை அழைத்தார். பையன்கள் சாமியாரை மேலும் கீழும் பார்த்தார்கள். அவருடைய விநோதமான உடை அலங்காரமும் ஜடாமுடியும் அவர்களுக்குச் சிரிப்பு மூட்டியது. சாமியார் அவர்களைக் கேட்டார். ‘கண்ணுங்களா, நீங்க எப்பவும் இந்த மைதானத்திலதான் விளையாடுவீங்களா?’ ‘ஆமா சாமி!’ ‘எதுக்காக தினமும் விளையாடறீங்க? அதனால உங்களுக்கு என்ன பலன்?’ முதல் பையன் சொன்னான். ‘நல்லா விளையாடினா உடம்பு பலமாகும். அதுக்கப்புறம் நாம யாரையும் பார்த்துப் பயப்படவேண்டியதில்லை. எதிர்த்து வர்றவங்களையெல்லாம் ஊதித் தள்ளிடலாம்!’ இந்த பதிலைக் கேட்டுச் சாமியாருக்கு மிகவும் மகிழ்ச்சி. ‘நீ பெரிய பயில்வானா வருவே’ என்று அவனை ஆசிர்வதித்தார். அதன்பிறகு இரண்டாவது பையனின் பக்கம் திரும்பினார். ‘நீ ஏன்ப்பா தினமும் விளையாடறே?’ ’ஜாலியா விளையாடினாதான் மனசுக்கு ரிலாக்ஸா இருக்கும். அதுக்கப்புறம் முகத்தைக் கழுவிகிட்டு உட்கார்ந்து

உங்களுக்கு பிடித்த கோடைக்கால உணவு எது? ஏன்?

Image
  கோடைகாலம் ஆரம்பித்து விட்டாலே உடலுக்கு குளிர்ச்சி தரும் உணவுகளையே விரும்பி சாப்பிடுவேன். அதிலும் முக்கியமாக தயிர் கொண்டு தயாரித்த உணவு தான் பிரதானம். இப்பொழுதெல்லாம் தயிர் என்றாலே கடையில் பத்து ரூபாய்க்கு ஒரு பாக்கெட்டில் வாங்கிக் கொள்கிறார்கள். வீட்டில் தயிர் தயாரிப்பது வழக்கொழிந்து போய்விடும் போலிருக்கிறது. நேற்று கூட சூப்பர் மார்க்கெட்டில் ஒருவர் 5 பாக்கெட் வாங்கி செல்கிறார். ஃப்ரிட்ஜ்-ல் ஒரு வாரத்திற்கு வைத்து கொள்வார்கள் போலிருக்கு. விலையோ எக்கச்சக்கம். உடலுக்கும் கெடுதல். பால் காய்ச்சி, உறை ஊற்றி தயிர் தயாரிப்பதில் என்ன சோம்பேறித்தனமோ அல்லது பாலில் இருந்து தயிர் தயாரிக்க முடியும் என்று தெரியாதோ:)) சரி விஷயத்துக்கு வருவோம். கோடைகாலம் ஆரம்பித்து விட்டாலே தினமும் தயிருக்கு என தனியாக, பாலை இரண்டு நிமிடங்கள் கூடுதலாக காய்ச்சி, பதமாக ஆறிய பின் 2 அல்லது 3 பாத்திரத்தில் தனித்தனியாக உறை ஊற்றி, தோய்ந்த பின் ஃப்ரிட்ஜில் வைத்துக் கொள்வேன். தேவைக்கு ஏற்ப பயன்படுத்தி கொள்வேன். 1) மாம்பழ லஸ்ஸி. மாம்பழ லஸ்ஸி என்றால் கொள்ளை பிரியம்.

எந்த சூழ்நிலையிலும் இறைவன் கைவிட மாட்டார்..!

 ஒரு வணிகா் விமானம் ஏறுவதற்கு மிக மிக தாமதமான வந்தாா். போா்டிங் வாயில் மூடப்படும் முன் அவசரமாக அவரது போா்டிங் பாஸ் ஸ்கேன் செய்து கொண்டு விரைவில் விமானம் ஏறினார். அது மூன்று பேர் அமரும் இருக்கை.ஒரு நடுத்தர வயது பெண் ஜன்னலோரமும், நடைபாதை அருகே ஒரு சிறிய பெண்ணும் இருந்தார்கள். அவா்கள் இருவரையும் பாா்த்து புன்னகைத்தவாறே தனது பெட்டியை மேலே வைத்து விட்டு வடிவில் அமா்ந்தாா். அவா் அந்த சிறு பெண்ணை பாா்க்கும் போது தனது மகளை நினைத்தாா். இருவருக்கும் ஒரே வயது தான் இருக்கும். அமைதியாக வண்ணம் தீட்டிக் கொண்டிருந்தாள். அவரும் அந்த சிறு பெண்ணிடம் எப்போதும் போல் பேர் என்ன பொழுதுபோக்கு என்ன என்று பேச்சு கொடுத்துக் கொண்டே வந்தாா். அவா் மனதில் இந்த சின்ன பெண் தனியாக பயணம் செய்வது விசித்திரமாக இருந்தது. ஆனால், தன்னை தனது எண்ணங்களை தன்னுள்ளே புதைத்து வைத்து கொண்டாா். எனினும் பயணம் முழுவதும் அவள் மீது ஒரு கண் வைக்க வேண்டும் என நினைத்தாா். அவரும் பெண்ணை பெற்றவரல்லவா? சுமார் ஒரு மணிநேரம் பயணத்திற்கு பின் விமானம் திடீரென குலுங்க தொடங்கியது. பைலட் ஓலிப்பெருக்கி மூலம் பயணிகளிடம் “நாம் கடினமான வானிலை எதிா் கொண்டிர

Save Tax

Image
 

இறைவா.! உன்னையே நாங்கள் வணங்குகிறோம்.!

 ஒருவன் 20 வயதில் திருமணம் செய்கிறான். ஆனால், 10 வருடங்கள் கழித்தே குழந்தை கிடைக்கிறது ...! இன்னொருவன் 30 வயதில் திருமணம் செய்கிறான். 1 வருடத்தில் குழந்தை கிடைக்கிறது...! ஒருவன் 22 வயதில் பல்கலைக்கழக பட்டதாரி ஆகிறான். ஆனால், 5 வருடங்களுக்குப் பின்பே தொழில் கிடைக்கிறது...! இன்னொருவன் 27 வயதில் பட்டதாரி ஆகிறான். அடுத்த வருடமே தொழில் கிடைத்து விடுகிறது...! ஒருவர் 25 வயதில் நிறுவனத்தில் தலைமைப் பொறுப்பை ஏற்கிறார். 45 வயதில் அவர் மரணித்து விடுகிறார்...! இன்னொருவர் 50 வயதில் நிறுவனத்தில் தலைவர் ஆகிறார். 90 வயது வரை வாழ்ந்து விட்டு செல்கிறார்...! நம்மால் புரிந்துகொள்ள சிரமமான இத்தகைய ஏற்பாடுகள் எல்லாம் வல்ல இறைவன் முன்பே கணித்து வைத்தவை. எழுதுகோல்கள் தூக்கப்பட்டு விட்டன. ஏடுகளும் மடித்து வைக்கப்பட்டு விட்டன...! அவனைப் போல் எனக்கில்லையே என்று நீ புலம்பும் அதே நேரத்தில், உன்னைப்போல் நான் இல்லையே என்று அவன் புலம்பிக் கொண்டிருப்பான். உனக்கு விதிக்கப்பட்டது வேறு.. அவனக்கு விதிக்கப்பட்டது வேறு.. ஆக, உனது நேரத்தில் உனது வேலையை திறம்பட செய்துவிடு...! உனக்கு முன்னால் உள்ளவர்கள் முந்தியவர்களும் அல்ல, உ

இறைவன் கணக்கு.

 மனிதன் போடும் கணக்கிற்கும் இறைவன் போடும் கணக்கிற்கும் இடையே நிறைய வித்தியாசங்கள் உள்ளன. மனிதன் பெரியது என்று நினைக்கும் விஷயங்கள், இறைவன் கணக்கில் மதிப்பில்லாதவையாக குறிக்கப்பட்டு இருப்பதும் உண்டு. மனிதன் ஒன்றுமில்லை என்று நினைக்கும் விஷயங்கள் இறைவனின் புத்தகத்தில் தங்க எழுத்துக்களால் பொறிக்கப்படுவதும் உண்டு. எனவே ஒரு விஷயத்தில் தன் பங்கை மனிதன் நிர்ணயிப்பதற்கும், அதே விஷயத்தில் அவன் பங்கு இவ்வளவென்று இறைவன் தீர்மானிப்பதற்கும் இடையே பெருத்த வித்தியாசம் இருக்கிறது. மனிதன் தன் வாழ்நாளில் இத்தனை சாதித்தோம் என்று எண்ணி இறைவனிடம் எடுத்துப் போகும் கணக்கும், இறைவன் வைத்திருக்கும் மனிதனின் கணக்கும் பெரும்பாலும் ஒத்துப்போவதில்லை. மனிதன் எதையும் பெரும்பாலும் பணத்தால் அளக்கிறான். இறைவன் மனத்தால் அளக்கிறான். மனிதன் ஒன்றிற்கு எவ்வளவு செலவானது என்று பார்த்து மதிப்பிடுகையில் இறைவன் அது எத்தனை ஆத்மார்த்தமாய் செய்யப் பட்டது என்பதை வைத்து மதிப்பிடுகிறான். மனிதன் எத்தனை மணி நேரம் பிரார்த்தனையிலும் தியானத்திலும் செலவாகி உள்ளது என்பதை வைத்து தன் இறைபணியை அளக்கையில் இறைவன் அதில் எத்தனை மணித்துளிகள் தன் மீத