Posts

நல்லவற்றை நமக்குள் நிரப்பி வைப்போம்

  ( அர்த்தமுள்ள   வாழ்க்கையை   அழகாகச்   சொல்கிறது   இந்தச்   சிறிய   கட்டுரை ) * நீங்கள்   ஒரு   கப்   காபியைக்   கையில்   வைத்திருக்கிறீர்கள் .* அந்த   நேரத்தில்   அங்கு   வரும்   ஒருவர்   உங்கள்   மீது   மோதி ,  உங்கள்   கைகளைத்   தட்டி   விடுகிறார் .  காபி   வெளியே   சிதறிவிடுகிறது . நீங்கள்   ஏன்   காபியைச்   சிந்தினீர்கள் ? ஒருவர்   தட்டிவிட்டதால்   காபி   சிந்திவிட்டது ”  என்பது   உங்கள்   பதிலாக   இருக்கலாம் . ஆனால்   அந்தப்   பதில்   ஒருவகையில்   தவறானது .  அப்படியென்றால்   என்ன   காரணம் ? உங்கள்   கப்பில்   காபி   இருந்தது .  அதனால்   காபி   சிதறிவிட்டது .  ஒருவேளை   அந்தக்   கப்பில்   தேநீர்   இருந்திருக்குமானால்   தேநீர்தான்   சிதறியிருக்கும் . கப்பின்   உள்ளே   என்ன   இருக்கிறதோ   அதுதானே   சிதறும் . இதை   வாழ்க்கையில்   பொருத்திப்   பார்ப்போம் . வெளியிலிருந்து   ஏதேனும்   நம்மை   அசைத்துப்   பார்க்கும்போது ,  நம்   உள்ளே   என்ன   இருக்கிறதோ   அதுவே   வெளியே   சிந்திச்   சிதறும் . இதைச்   சொல்வது   எளிது ,  கடைப்பிடிப்பது   கடினம்தான் . ஆனாலும்   நம்மால்   முடிந்தவ

'பொறுத்தார் பூமி ஆள்வார்.

  இப்போதெல்லாம் சிறிய செயலுக்குக் கூட பொறுமை இல்லாமல் கொதித்துப் போய் விடுகின்றோம்.. இதனால் பகைமை வளர்ந்து விடுகிறது. இந்தப் பகைமை நம் உறவுகளையும் நட்புகளையும்இழந்து ஒன்றும் இல்லாமல் செய்து விடுகிறது. நாம் பொறுமை இழப்பதால் நம்மையே இழந்து போகிறோம் என்பதை யாரும் உணர்வதில்லை. எந்த செயலையும் எளிதாக எடுத்துக் கொள்ளாமல் அதைப் பெரியதாக நினைத்துக் கொள்வதால்,அதைத் தாங்கிக் கொள்ள முடியாத நிலைக்குப் போய் விடுகிறோம். எந்த நிகழ்வையும் முழுமையாகத் தெரிந்து கொள்ளாமலும் போய் விடுகிறோம்..ஆம் எந்தவொரு செயலிலும் பொறுமை தேவையாக இருக்கிறது. பொறுமையாயிருப்பவர்கள் பல இடங்களில் நல்ல பெயரைப் பெற்று இருக்கிறார்கள். பல தொழில்களில் முன்னேற்றம் கண்டு இருக்கிறார்கள். ஒரு மண் ஜாடியின் கதையைக் கேளுங்கள்.., ஒரு கலைப்பொருள் கண்காட்சியில் அனைவரது கவனத்தையும் கவர்ந்தது. ஒரு மண் ஜாடி.அதில் அவ்வளவு கலை நுணுக்கம். அதிலிருந்த மலர் ஓவியங்கள் அழகிய கலை வேலைப்பாடுகளுடன் காட்சியளித்தது. இந்த ஜாடியின் அழகைக் கண்டு வியந்த சிறுவன் ஒருவன் அந்த மண் ஜாடியிடம்,“எப்படி இந்த அழகிய வடிவத்தைப் பெற்றாய்?” என்று கேட்டான். சிறுவனே,நான் உடனே இ

கோபத்தை விரட்ட என்ன செய்வது?

 ஒருத்தர் தலையில் கட்டுப் போட்டுக் கொண்டு தெருவில் நடந்து வந்து கொண்டிருந்தார். ‘‘என்னங்க இது?’’ என்றார் எதிரே வந்த நண்பர். ‘‘எல்லாம் கோபத்தினால் வந்த விளைவு!’’ என்றார் அவர். ‘‘கொஞ்சம் விவரமாகத்தான் சொல்லுங்களேன்?’’ ‘‘குடும்பத்துல சண்டை. ஆத்திரப்பட்டு என்னமோ சொல்லிப்புட்டேன்… அதுக்காக ஏதோ ஒரு பாத்திரத்தை எடுத்து என் முகத்துக்கு நேரா வீசிப்புட்டா என் வீட்டுக்காரி… அவ்வளவுதான்!’’ ‘‘குடும்பம்னு இருந்தா இதெல்லாம் சகஜம்தானே…!’’ ‘‘உங்க வீட்டுலேயும் இப்படி நடக்கறது உண்டா?’’ ‘‘தாராளமா உண்டு!’’ ‘‘ஆனா, உங்க தலையில கட்டு எதையும் காணோமே..?’’ ‘‘நாம கொஞ்சம் அனுசரிச்சு நடந்துகிட்டா எதுவும் பிரச்னை வராது!’’ ‘‘எப்படி அனுசரிச்சுப் போறது…? அதைக் கொஞ்சம் எனக்கும் சொல்லிக் கொடுங்களேன்?’’ ‘‘சொல்லிக் கொடுக்கறேன். அதுக்கு முன்னாடி ஓர் உண்மையைப் புரிஞ்சிக்கணும்!’’ ‘‘என்ன அது?’’ ‘‘கோபம்கறது ஒரு தற்காலிகப் பைத்தியம் தான்!’’ ‘‘அப்படியா?’’ ‘‘ஆமாம். தற்காலிகமா ஒருத்தருக்குப் பிடிக்கிற பைத்தியம்தான் கோபம். அந்த நேரத்துலே அவரு மறைச்சு வெச்சிருக்கிற பைத்தியக்காரத்தனம் வெடிச்சிக்கிட்டு வெளியிலே வருது… அவ்வளவு தான்!’’ ‘

ஒத்திசைவு...

  வாழ்க்கையில் மனமும் உடலும் ஒரே அலைவரிசையில் பயணித்தால் மகிழ்ச்சி அதிகபட்சமாக இருக்கும். இதுதான் ஒத்திசைவு எனப்படுகிறது... இதனை இன்னும் தெளிவாக தெரிந்து கொள்வோம். அப்போது அதிகாலை நான்கு மணியிருக்கும். அவசரமாக அந்த தம்பதியினர் திருநெல்வேலி பேருந்து நிலையத்தில் ஆட்டோவில் வந்து இறங்கினர். பத்து நிமிடம் தாமதமாக வந்ததால் 3.50 க்கு புறப்பட்டுச் சென்ற கோதையார் பேருந்தை தவறவிட்டு விட்டனர். வீடு பூட்டிவிட்டு வந்தோமா என்று மனைவிக்கு திடீரென சந்தேகம். கணவரிடம் மெதுவாக கேட்டாள். மனைவியின் சந்தேகம் கணவருக்கும் தொற்றிக் கொண்டது. யோசித்துப் பார்த்தார். சாவியை எடுத்து வீட்டை பூட்டியது ஞாபகத்துக்கு வரவில்லை. சாவியை வீட்டிலிருந்து எடுத்தது ஞாபகத்துக்கு வருகிறது. இப்போது சாவி கைப்பையில் இருக்கிறது. பூட்டியது மட்டும் ஞாபகத்துக்கு வரவில்லை.  வெளியூர் சென்றிருப்பவர்கள் வீடு அடிக்கடி கொள்ளையடிக்கப்படும் தொலைக்காட்சி செய்திகள் கணவருடைய மனத்திரையில் ஓடிக்கொண்டிருந்தது. சில வினாடி யோசித்துவிட்டு வீட்டுக்குச் சென்று பார்த்துவிட்டு வருவதாக கூறிவிடுச் சென்றார். பேருந்து நிலையத்தில் காத்திருந்த மனைவியின் முகத்தில்

சுய ஒழுக்கம் (Self Discipline) - ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டியது

  1.தொடர்ச்சியாக இரண்டு முறை யாரையும் Phoneல் அழைக்காதீர்கள். அவர்கள் முக்கிய வேலையாக இருக்கலாம், அல்லது பேச முடியாத சூழ்நிலையில் இருக்கலாம். 2.திருப்பித் தருகிறேன் என்று உங்களிடம் பணம் கடனாக கேட்பவரிடம் மனப்பூர்வமாக கேட்டுக்கொடுங்கள். இது திரும்ப வருமா, வராதா என. இது உங்கள் Character ரை அவர் உணரச் செய்யும். இதே போல், இரவல் கொடுக்கும் பேனா, புத்தகம், Lunch box, குடை போன்றவைக்கும். 3. Hotelல் சாப்பிடலாம் என நண்பர் உட்பட யார் அழைத்தாலும், Menu cardல் costly யாக உள்ள எதையும் Order செய்யாதீர்கள். அழைத்தவரையே உங்கள் விருப்பப்படி Order சொல்லுங்கள் என வேண்டலாம். 4.தர்மசங்கடமான இது போன்ற கேள்விகளை தவிர்க்கலாம். இன்னும் கல்யாணம் ஆகலயா? குழந்தைகள் இல்லையா? இன்னும் சொந்தவீடு வாங்கவில்லையா? ஏன் இன்னும் Car வாங்கவில்லை? இது நமது பிரச்சினை இல்லைதானே!" 5.தானியங்கி கதவை திறக்க நேர்ந்தால் பின்னால் வருபவர் ஆணோ, பெண்ணோ, சிறியவரோ, பெரியவரோ அவர்கள் வரும்வரை மூடாமல் பிடித்திருப்பது அவர்களை சமூகத்தில் பொறுப்புள்ளவர்களாக மாறச்செய்யும்! 6. நண்பருடன் Taxiயில் சென்றால் இம்முறை இயலாவிட்டால் மறுமுறை நீங்கள் க

லட்சுமி கடாட்சம் கிடைக்கும்

  அர்ஜுனனும் ,  கிருஷ்ணரும்   தெருவில்   உலவிக்   கொண்டிருந்த   போது ,  ஒரு   முதியவர்   தர்மம்   செய்யும்படி   கேட்டார் . அர்ஜுனன்   ஆயிரம்   பொற்காசுகளை   கொடுத்தான் .  முதியவருக்கு   மகிழ்ச்சி . '' ஆகா ...  இது   நம்   குடும்பத்திற்கு   ஐந்தாறு   ஆண்டுகளுக்கு   போதுமே !''  என்றெண்ணி   வீட்டுக்கு   புறப்பட்டார் .  இதைக்   கவனித்த   ஒரு   திருடன் ,  பொற்காசுகளை   வயோதிகரிடமிருந்து   பறித்துச்   சென்று   விட்டான் .   சில   தினங்கள்   கழித்து ,  மீண்டும்   அவ்வழியே   வந்த   அர்ஜுனனிடம்   முதியவர்   நடந்ததைச்   சொல்ல ,  விலையுயர்ந்த   நவரத்தின   கல்லை   கொடுத்து ,  அதையாவது   பத்திரமாக   கொண்டு   செல்லும்படி   கூறினான் . முதியவரும்   கவனமாக   வீட்டுக்குக்   கொண்டு   சென்று ,  மனைவி ,  பிள்ளைகளிடம்   கூட   சொல்லாமல் ,  பரணில்   இருந்த   பானையில்   ஒளித்து   வைத்து   விட்டார் .  இதைஅறியாத   அவரது   மனைவி   பரணிலிருந்த   பானையை   எடுத்துக்   கொண்டு   ஆற்றுக்கு   தண்ணீர்   எடுக்க   சென்றாள் . பானையை   கழுவும்   போது   உள்ளிருந்த   கல்   ஆற்றில்   விழுந்து   விட்டது . அவள்