Posts

5 ஏக்கர்... ஆண்டுக்கு ரூ.12,50,000 அருமையான லாபம் கொடுக்கும் அடர்நடவு கொய்யா!

Image
  வெளிநாட்டு வேலை... லட்சங்களில் வருமானம்... ஆனால், அவை அனைத்தையும் உதறிவிட்டு பலரும் இயற்கை விவசாயம் பக்கம் திரும்பி வருகின்றனர். அந்த வரிசையில், சுந்தர்ராஜ - சாந்தி தம்பதியர் தாங்கள் பார்த்துக்கொண்டிருந்த ஐ.டி வேலையை உதறிவிட்டு, தற்போது முழு நேரமாக இயற்கை விவசாயத்தில் இறங்கி அசத்தி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியைத் அடுத்துள்ள, ரெகுநாதபுரத்திலிருந்து 5 கி.மீ தொலைவில் இருக்கிறது காடம்பட்டி. அங்குதான் இருக்கிறது இவர்களுடைய கொய்யாத் தோட்டம். 5 ஏக்கரில் கொய்யா நடவு செய்து அதில் நல்ல வருமானம் ஈட்டிக்கொண்டிருக்கின்றனர். ஒரு காலை வேளையில், கொய்யா அறுவடையில் தீவிரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்த சாந்தியைச் சந்தித்தோம். “நான் பொறந்து வளர்ந்தது எல்லாம் சேலம். ‘இன்ஜினீயரிங்’ முடிச்சிட்டு ‘எம்.பி.ஏ’ பண்ணுனேன். அதற்கப்புறம் ஒரு ‘சாஃப்ட்வேர் கம்பெனி’யில வேலைக்குப் போயிட்டேன். இடையில, திருமணம் ஆச்சு. கணவருக்கும் நான் வேலை செய்ற ‘ஐ.டி’ துறையிலதான் வேலை. சில வருஷங்கள்ல ரெண்டு பேரும் தனியாக ‘சாஃப்ட்வேர் கம்பெனி’ ஆரம்பிச்சு நடத்துனோம். கிட்டத்தட்ட 30 வருஷம் ரெண்டு பேரும் ‘ஐ.டி பீல்டு’ல இருந்து

பிடிவாதம் சிறந்த கதை

 பிடிவாதம் கொண்ட சிறுமி       ஒரு ஊரில் கீதா என்ற ஒரு சிறுமி இருந்தாள். அவள் நன்றாகப் படிப்பாள், அவளிடம் கொடுக்கும் வேலையை சரியாக செய்து முடிக்கும் திறமைசாலியானவள், பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரிடமும் அன்பாகவும், பணிவாகவும் நடந்து கொள்வாள்.     ஆனால் கீதாவின் பிடிவாத குணம் மட்டும் யாருக்கும் பிடிக்கவில்லை. கீதா அவள் அம்மா, அப்பாவிடம் எது கேட்டாலும் உடனே வாங்கி தந்துவிட வேண்டும். இல்லாவிட்டால் வீட்டையே போர்க்களம் போல ஆக்கிவிடுவாள்.        அடுத்த நாள் கீதாவின் பிறந்தநாள். ரொம்ப நாட்களாகக் கேட்டுக்கொண்டிருந்த விலை உயர்ந்த கைக்கடிகாரத்தை அன்றே வாங்கித் தரச்சொல்லி அடம்பிடித்தாள்.         கீதாவின் பெற்றோர் தங்கள் சூழ்நிலையைக் கூறி, அடுத்த மாதம் வாங்கித் தருகிறேன் என்றனர். அதெல்லாம் முடியாது நான் பள்ளிக்கூடத்திற்கு சென்று வீட்டிற்கு வரும்போது நான் கேட்ட கைகடிகாரம் வேண்டும். இல்லாவிட்டால் நடப்பதே வேறு என்று சொல்லிவிட்டுச் சென்றாள்.     கீதாவின் பெற்றோர் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தனர். பள்ளி முடிந்ததும் கீதா வீட்டிற்கு வந்து கொண்டிருந்தாள். அப்போது திடீரென்று மழை பெய்யத் தொடங்க

உன் பலம் என்ன? சிறுகதை

 நீதிக்கதை     ஓர் ஆலமரத்தில் குயில் ஒன்று வசித்துவந்தது. ஒருநாள், இரண்டு வழிப்போக்கர்கள் அந்த மரத்தடியில் இளைப்பாறியபோது, குயிலைப் பார்த்தார்கள்.        தன் முட்டையைக்கூட அடைகாத்துக் குஞ்சுப் பொரிக்காமல், காகத்தின் கூட்டில் இடும் சோம்பேறி’’ , என்றார்கள்.       அதைக் கேட்ட குயில், ‘நான் சோம்பேறி பறவைதானா?’ என்று வருத்தப்பட்டது. மற்ற பறவைகளைப் பற்றி மனிதர்கள் கருத்தைத் தெரிந்துகொள்ள விரும்பியது.      அந்த மரத்தில் வந்துமர்ந்து ஆலம்பழத்தைக் கொறித்த கிளி, “தத்தை மொழி பேசும் கிள்ளை என என்னைப் புகழ்வார்கள்” என்றது.      கோயில் மண்டபத்தில் வசித்து புறா, “கொஞ்சும் புறா, சமாதானத் தூதுவன் எனப் பெருமையாப் பேசுவாங்க” என்றது.       குயில் அடுத்ததாக மொட்டைப் பாறை மீது நின்றிருந்த மயிலிடம் சென்றது. “நான் தோகை விரித்தாடினால் காணக் கண்கோடி வேண்டும்னு பாராட்டுவாங்க!” என்றது.      அடுத்ததாகச் சிட்டுக்குருவி, “என்னைப் பார்த்துத்தான் சுறுசுறுப்பைக் கத்துக்கணும்னு மனுஷங்க பேசிப்பாங்க!” என்றது.        இப்படிக் குயில் சந்தித்த பறவைகள் அனைத்தும் தங்களைப் பற்றி மனிதர்கள் உயர்வாகப் பேசுவதாகத் தெரிவித்தன.      

கடந்த 10 ஆண்டுகளில், ஒரு குடும்பத்தின் நிதி நிலைமை சீரழிவதற்கான பத்து அதி முக்கிய காரணங்கள்

 1. குடும்பத்தில் உள்ள அனைவரின் கரங்களில் தவழும் ஸ்மார்ட்போன்கள்... 2. சமூக அந்தஸ்திற்காக மேற்கொள்ளப்படும் விடுமுறை சுற்றுலாக்கள்... 3. வாகனங்கள் மற்றும் மின்னணுப் பொருட்கள் சமூக அந்தஸ்தின் அடையாளமாக மாறிப்போனது... 4. வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவைத் தவிர்த்து, வார இறுதி மற்றும் பிற நாட்களிலும் தேவையில்லாமல் வெளியே சாப்பிடுவதை அத்தியாவசியமாகவும், உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும், தங்கள் மேன்மையை பறைசாற்றும் வடிகாலாகவும் நினைக்கத் தொடங்கியது... 5. சீரழிந்த வாழ்க்கைமுறை மருத்துவச் செலவுகளை அதிகரிக்கச் செய்வது... 6. சலூன்கள், பார்லர்கள் மற்றும் ஆடைகளை சமூக மதிப்பிற்கான பெரு நிறுவன தயாரிப்பினை (BRAND VALUE) குறியீட்டு உணர்வாக வளர்த்துக் கொண்டது...   7. ஒன்றாக நேரத்தைச் செலவழிப்பதை விட, அதிகப் பணத்தை பிறந்தநாள் மற்றும் ஆண்டுவிழாவை சிறப்பாக்க செலவழிப்பதன் மூலம்... 8. பிரமாண்ட திருமணங்கள் மற்றும் குடும்ப விழாக்கள்... 9. வணிகமயமாக்கப்பட்ட உணவுகள், மருத்துவமனைகள், பள்ளிகள்,  பயிற்சிகள் மற்றும் கல்வி போன்றவற்றினால்... 10. தங்கள் சம்பாத்யத்தில் அனுபவிக்க இயலாததை குறித்த காலத்தில் குறைந்த காலத்தில் அ

அமெரிக்கா நமக்குப் பாடமாக அமையட்டும்

 வீடுகளில் சமைப்பது நின்ற அமெரிக்காவில் என்ன நடந்தது?* *1980-ல் புகழ் பெற்ற அமெரிக்க பொருளாதார நிபுணர்கள்.* சமையல் அறையை தனியார் கம்பெனிகளுக்கு கொடுத்தாகிவிட்டது,  வயதானவர்கள் குழந்தைகள் பராமரிப்பை அரசாங்கத்துக்கு கொடுத்துவிட்டால், குடும்பப் பொறுப்பும், பாங்கும் அழிந்துவிடும்”  என்று தீர்க்கதரிசனமாகக் கூறினார்கள்.* அதாவது வீட்டில் சமைப்பது நிறுத்தி விட்டு,* கடைகளில் வாங்கி கொள்ளும் பழக்கம் வந்தது இதனால் அவர்கள் எச்சரித்தபடியே பொறுப்பும் பாங்கும் அற்ற அமெரிக்க குடும்பங்கள் ஏறக்குறைய அழிந்துவிட்டன.* அன்புடன் சமைப்பது என்பது பாசத்துடன் குடும்பத்தை இணைப்பது.* சமையல் கலை மட்டும் அல்ல. குடும்ப கலாச்சாரத்தின் மையப்புள்ளி.* சமையல் அறை இல்லாது, வெறும் படுக்கை அறை மட்டும் இருந்தால் அது குடும்பம் அல்ல, தங்கும் விடுதி தான்.* சமையல் அறையை மூடிவிட்டு, படுக்கை அறை மட்டும் போதும் என்று நினைத்த அமெரிக்க குடும்பங்களின் நிலை என்ன?.* 1971-ல் மொத்த குடும்பங்களில் கணவனும்-மனைவியும் குழந்தைகளுடன் இருந்த அமெரிக்க குடும்பங்கள் 71 சதவிகிதம்.* 2020--ல் அது 20 சதவிகிதமாக நலிந்துவிட்டது.* அன்று வாழ்ந்த குடும்பங்கள

தெளிவான மனநிலை என்பது!!!

 அதிக மகிழ்ச்சியோ… அதிக துக்கமோ இன்றி சரி எது தவறு எது என்பதை தன்னுடைய உணர்வால்… தன்னுடைய அறிவால் அறிந்து தன்னுடைய உணர்ச்சிகளை ஓரம் கட்டி பிடித்தவர் பிடிக்காதவர் என்ற பாரபட்சம் இன்றி நடுநிலையில் எடுக்கும் மனநிலை.

வீட்டிலிருந்து பணம் சம்பாதிக்க​ பெண்களுக்கான​ தொழில் | House Wife Work From Home Business Ideas Tamil

 பெரும்பாலும் வீட்டில் இருக்கும் பெண்கள் தங்கள்து குழந்தைகள் மற்றும் தங்கள்து குடும்பத்தை கவனிக்க வேண்டும் மேலும் குடும்ப​ சூழ்நிலைக்காரணமாக​ வேலைக்கு செல்ல முடியாத​ சூழ்நிலை பெண்களுக்கு ஏற்படும்.​ குடும்பத்தை கவனிக்கும் பெண்கள் மற்றும் தாய்மார்களுக்கு பெரும்பாலான​ பெண்களுக்கு வேலைக்கு சென்று பணம் சம்பாரிக்க​ வேண்டும் என்ற​ ஆர்வம் இருக்கும். இது மாதிரி வீட்டில் இருந்து வேலை செய்து பணம் சம்பாரிக்க​ விரும்பும் இல்லதரசிகளுக்கான​ பல தொழில்கள் இருக்கு அவற்றில் சில​ எளிமையான​ முறையில் உங்க​ வீட்டிலிருந்தே வருமானம் ஈட்டும் தொழில்களை பார்க்கலாம். 1.Work From Home Virtual Assistant Job வேலையின் விவரங்கள் Virtual Assistant) விர்சுவல் அசிஸ்ட்டென்ட் வேலை என்பது அதிக​ நிறுவனத்தில் - போன் கால் கஸ்டமர் சர்விஸ், போன் அட்டன் பன்னுவது, அப்பாய்மெண்ட் பிக்ஸ் பன்றது, கஸ்டமர் பீட் பேக் கால் அட்டன் பன்றது, இது மாதிரி நரைய​ சேவைகள் இதில் அடங்கும். இந்த​ வேலையை நீங்கள் செய்வதற்க்கு ஒரு ஆண்ட்ராய்ட் முபைல் போன் மற்றும் தேவைப்பட்டால் உங்களிடம் ஒரு மடிக்கனினியாவது இருக்க​ வேண்டும். இதற்க்கான​ கல்வித் தகுதிகள் 10ஆம