Posts

Showing posts from 2016

The mirror lesson

🖼*கண்ணாடி சொல்லும் மூன்று பாடங்கள்*🖼 🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃 🎀நம் *முகத்தில் ஏதேனும் அழுக்கோ கறையோ பட்டு விட்டால்* கண்ணாடியில் அது தெரிகிறது. அந்தக் கறையைக் கண்ணாடி, *கூட்டுவதும் இல்லை, குறைப்பதும் இல்லை*. உள்ளது உள்ளபடி காட்டுகிறது அல்லவா? அதே போல் உன் சகோதரனிடம்- நண்பனிடம்- கணவரிடம்/ மனைவியிடம் எந்த *அளவுக்கு குறை இருக்கிறதோ அந்த அளவுக்குத்தான்* அதனைச் சுட்டிக்காட்ட வேண்டும். எதையும் *மிகையாகவோ, ஜோடித்தோ சொல்லக் கூடாது*. துரும்பைத் தூண் ஆக்கவோ, கடுகை மலையாக்கவோ கூடாது. இது 🖼கண்ணாடி சொல்லும் முதல் பாடம்!" 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 🎀கண்ணாடிக்கு முன்னால் நீ நிற்கும்போதுதான் *உன் குறையைக் காட்டுகிறது*. நீ *அகன்று விட்டால் கண்ணாடி மௌனமாகிவிடும்*. அதே போல் மற்றவரின் குறைகளை அவரிடம் *நேரடியாகவே சுட்டிக்காட்ட வேண்டும்*.அவர் இல்லாத போது *முதுகுக்குப் பின்னால் பேசக்கூடாது*. இது 🖼கண்ணாடி தரும் இரண்டாவது பாடம்!” 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 🎀ஒருவருடைய முகக் கறையைக் கண்ணாடி காட்டியதால் *அவர் அந்தக்கண்ணாடி மீது கோபமோ, எரிச்சலோ படுகிறாரா*? இல்லையே…! அதே போல் *நம்மிடம் உள்ள குறைகளை யாரேனும் சுட்டிக...

Practice makes a man perfect

Image
ஒரு ராஜாவுக்கு இரண்டு பஞ்சவர்ண கிளிக் குஞ்சுகள் வெகுமதியா வந்துன. ராஜா அந்த ரெண்டையும் பறக்க வைத்து பேசப் பயிற்சி கொடுக்கச் சொன்னாரு. அதுல ஒரு கிளி நல்லா பறந்து வார்த்தைகளும் கத்துக்க ஆரம்பிச்சது.  ஆனா இன்னொரு கிளி பறக்க கூடத் தெரியாம ஒரு கிளையில உட்கார்ந்தது உட்கார்ந்தபடியே இருந்தது. ராஜா பெரிய அமைச்சர்கள், ஆலோசகர்கள் எல்லோரையும் விட்டு, பயிற்சி கொடுக்க வச்சும் கிளி பறக்கல. இதைக் கேள்விப்பட்டு ஒரு வயசான விவசாயக் குடிமகன் வந்து "நான் பறக்க வைக்கிறேன்"னு சொன்னான். . ♥  அடுத்த நாள் காலை ராஜா கண் விழிக்கும்போது, பறக்காத அந்த பஞ்சவர்ணக்கிளி மரத்தைச் சுற்றி அங்கும் இங்கும் பறந்து சுத்திகிட்டிருப்பதைப் பார்த்தான். . ♥  அவனுக்கு ஒரே சந்தோஷம். "இந்த அற்புதத்தை எப்படி செய்தீங்க?"ன்னு கேட்க, அதுக்கு அந்த விவசாயி பணிவோட, "அது ரொம்ப சுலபமான காரியம் அரசே.! ♥  மரத்தில் ஏறி அந்த பறவை உட்கார்ந்திருந்த கிளையை நான் வெட்டி விட்டேன். வேறொன்றுமில்லை"ன்னாரு. . -  ♥  இறைவனும் சில சமயம் நம்மை நமது சக்தியை உணரச் செய்ய வேண்டி, நாம் அமர்ந்திருக்கும் கிளையை வெட்டிவிடுவான். அது நம்ம ...

Marketing tricks - வியாபார தந்திரம்

Image
தந்திரம் 1: பேருந்து நிலையத்தில் பழ வியாபாரம் செய்யும் ஒரு முதியவர் அந்தப் பேருந்தில் பழக் கூடையுடன் ஏறினார். இவர் ஐந்து பழங்கள் பத்து ரூபாய்!’ என்று கூவி, பழங்களை விற்க முயன்றார். எவரும் பழங்களை வாங்க முன்வரவில்லை. இந்த முதியோர் பலக்கூடையயை சுமக்க முடியாமல் சுமந்தபடி முதியவர் கீழே இறங்கியதும், மீண்டும் ஒரு இளைஞர் பேருந்தில் ஏறினார். ‘ஆறு பழங்கள் பத்து ரூபாய்!’ என்று கூவினான். அவனுக்கு நல்ல விற்பனை. மற்றொரு பேருந்தில் ஏறிய முதியவர் அங்கும், ‘ஐந்து பழங்கள் பத்து ரூபாய்!’ என்று விற்க முயன்றார். அங்கும் பலன் இல்லாமல் போகவே, கீழே இறங்கி விட்டார். அடுத்து, ‘ஆறு பழங்கள் பத்து ரூபாய்’ என்று கூவியபடி அந்தப் பேருந்தில் ஏறிய இளைஞன், ஏகத்துக்கு விற்பனை செய்தான். மிகப் பெரிய கம்பெனியின் விற்பனை ஆலோசகரான ஒருவர் இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தார். முதியவரை அருகில் அழைத்தவர், “அந்த இளைஞனின் சாமர்த்தியம் உங்களிடம் இல்லையே! அவனுக்குப் போட்டியாக நீங்களும் ‘ஆறு பழம் பத்து ரூபாய்’ என்று விற்றால்தானே உங்களுக்கு விற்பனை ஆகும். அதிகக் கொள்முதல் மூலம் குறைந்த விலைக்குப் பழங்களை வாங்கி,...

Change Yourself, Not The World!

ஒரு ஊரில் ஒரு கோடீஸ்வரன் இருந்தான். அவனுக்குக் கடுமையான தலைவலி ஏற்பட்டது. பல ஊர்களிலிருந்து மிகப் பெரிய வைத்தியர்கள் வந்து பார்த்தும், வண்டி வண்டியாக மருந்துகள் சாப்பிட்டும் அந்தத் தலைவலி குணமாகவில்லை. ஒருநாள் அந்த ஊருக்கு ஒரு சன்யாசி வந்தார். அவர் பணக்காரனை வந்து பார்த்தார். பார்த்துவிட்டு, அவருக்கு ஏற்பட்ட தலைவலிக்குக் கண்ணில் இருக்கும் ஒரு நோயே காரணம் என்று கூறினார். அந்தக் கண்ணைக் குணப்படுத்த ஒரே ஒரு வழிதான். அந்தப் பணக்காரன் பச்சை நிறத்தைத் தவிர வேறெதையும் பார்க்கக்கூடாது என்று கூறிவிட்டுப் போய்விட்டார். பணக்காரன் முதலில் தன் வீட்டில் இருக்கும் எல்லாவற்றையும் பச்சையாக மாற்றினான். தலைவலி குணமாகி விட்டது. சன்னியாசி கூறியது சரிதான். உடம்பு சரியாகவே வீட்டைவிட்டு வெளியே போகத் தொடங்கினான். வெளியே போனால், இயற்கை எல்லா வண்ணங்களையும் அள்ளித் தெளித்திருந்தது. ஆனால், அவற்றைத்தான் அவன் பார்க்கக்கூடாதே! நிறையப் பச்சைப் பெயிண்டையும் பிரஷ்ஷையும் கொடுத்து சில ஆட்களை நியமித்தான். அவன் போகும் வழியில் இருக்கும் ஆடு, மாடு, மனிதர், குடிசை, வண்டி, மேசை, நாற்காலி எல்லாவற்றுக்கும் பச்சை நிறத்தை அ...

Get Service - Change Your Thinking, Change Your Life.

This 4 minute eye-opening video is a great reminder to us all that there's more to the story than we realize.

Nothing can compete with The knowledge gained from poor, confidence

Image
அமெரிக்க பாராளுமன்றத்தில், அதிபர் ஆப்ரஹாம் லிங்கன் உரை நிகழ்த்தும்போது, அவரை மட்டம்தட்டும் நோக்கில் எதிர் தரப்பு பிரமுகர் ஒருவர் எழுந்து, .  ஆப்ரஹாம் ... ... . உங்கள் தந்தை தைத்துக்கொடுத்த செருப்பு இன்னும் என் கால்களை அலங்கரித்துக்கொண்டு இருக்கிறது என்றாராம் .... . அதற்கு ஆப்ரஹாம் லிங்கன் சொன்னாராம், . " நண்பரே என் தந்தை இறந்து பலவருடங்கள் ஆகிவிட்டது, இருப்பினும் அவர் தைத்து கொடுத்த செருப்பு உங்களின் காலை இன்னும் அலங்கரித்துக்கொண்டு இருக்கிறதென்றால், அது அந்த அளவுக்கு நேர்த்தியாக தைக்கப்பட்டுள்ளது ...... . இருப்பினும் அவர் தைத்த இடத்தில் ஏதேனும் பழுது ஏற்ப்பட்டிருந்தால் அதை என்னிடம் கொடுங்கள் நான் அதை உங்களுக்கு சரி செய்து தருகிறேன் .  எனக்கு செருப்பு தைக்கவும் தெரியும் .... . நாட்டை ஆளவும் தெரியும் என்று பதிலுரைத்தாராம் ... .  தன்னம்பிக்கை விடாமுயற்சி இவைகளில் இருந்து பெற்ற ஏழ்மையின் அனுபவ அறிவுக்கு நிகராக ... . வேறெதுவும் போட்டியிட முடியாது......... .

Strength and growth come only through continuous effort and struggle

கஜினி 17 முறை தோற்று 18வது முறை வென்றவர். எடிசன் 1000 முறை தோற்றவர் , இந்த உலகில் ஆஸ்கார், நோபல் இரண்டு விருதையும் வாங்கிய, மிக சிறந்த எழுத்தாளர், நாடக ஆசிரியரான பெர்னாட்ஷாவின் படைப்புகள் தொடர்ந்து 9 வருடங்கள், அனைத்து பிரபல பத்திரிகைகளாலும் நிராகரிக்கப்பட்டது. பின்னர் அதே பத்திரிகைகள். அவர் கேட்கும் பணத்தை கொடுக்க தயாராக இருந்தனர். நம்மில் பலரோ, சின்ன, சின்ன தோல்விகளுக்கே நாம் அலுத்து கொள்கிறோம், சலித்து கொள்கிறோம், வெறுத்து கொள்கிறோம்... இந்த உலகத்தில் எனக்கு மட்டும் தான் கஷ்டம் இருக்கு.. இது அனைத்து முட்டாள்களும் சொல்லும் வசனம். எடிசன், லிங்கன், பெர்னாட்ஷா ரேஞ்ச்க்கு கூட யோசிக்க வேண்டாம். ஒரு எறும்பு, தேனி, சிலந்தி போன்ற சின்ன, சின்ன உயிரினங்களுக்கு உள்ள விடா முயற்சி, சுறு, சுறுப்பு கூட பல மனிதர்களுக்கு இல்லையே.  முடியும் வரை செய்வது முயற்சி அல்ல. மூச்சு உள்ளவரை செய்வதே முயற்சி.  விடாது முயலுங்கள், வெற்றி நமதே !!!  காலம் இன்னும் இருக்கின்றன நண்பா காலத்தை மாற்றி அமைக்க வேண்டிய நிலை நம் கையில் தான் உள்ளது...

How to survive difficult times in your life

அது ஒரு கிராமம். சிறுவன் ஒருவன் ஏரிக்கரையில் விளையாடிக் கொண்டு இருக்கிறான். அப்போது, “என்னை காப்பாற்று, காப்பாற்று“ என்று ஓர் அலறல். ஆற்றோரத் தண்ணீரில், வலைக்குள் சிக்கி இருக்கும் முதலை ஒன்று சிறுவனைப் பார்த்துப் பரிதாபமாக கதறுகிறது. ’மாட்டேன். உன்னை விடுவித்தால் என்னை விழுங்கி விடுவாய். காப்பாற்ற மாட்டேன்’ என மறுக்கிறான் சிறுவன்.  ஆனால் முதலை, “நான் உன்னை சத்தியமாகச் சாப்பிட மாட்டேன். என்னை காப்பாற்று” என்று கண்ணீர் விடுகிறது. முதலையின் பேச்சை நம்பி, சிறுவனும் வலையை அறுக்க ஆரம்பிக்கிறான். அறுத்து முடிப்பதற்குள், சிறுவனின் காலைப் பிடித்துக் கொண்டது .  ”பாவி முதலையே இது நியாயமா? என்று சிறுவன் கண்ணீருடன் கேட்க, “அதற்கென்ன செய்வது, பசி வந்தால் பத்தும் பறந்துவிடும். இதுதான் உலகம். இதுதான் வாழ்க்கை” என்று சொல்லிவிட்டு விழுங்க ஆரம்பித்தது முதலை. சிறுவனுக்கு சாவது பற்றிக்கூட கவலை இல்லை. முதலை ஏமாற்றி விட்டதோடு மட்டும் அல்லாமல், நன்றிகெட்டதனத்தை, ’இதுதான் உலகம்’ என்று சொல்வதை அவனால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. மரத்திலிருந்த பறவைகளைப் பார்த்துக் கேட்டான். இதுதான் உலகமா?. அதற்...

Beware! of Freebie

திருடன் ஒருவன் ஒரு வீட்டுக்கு திருடச் சென்றான். அங்கு காவலுக்கு ஒரு நாய் இருந்தது. அது இவனைப் பார்த்து எதுவுமே செய்யவில்லை. வெறுமனே பார்த்துக் கொண்டே இருந்தது. இவனுக்கு திருடச் செல்லலாமா? வேண்டாமா? உள்ளே போனவுடன் நாய் குரைத்தால் என்ன செய்வது.. இப்போதே குரைத்தால் அடுத்த வீடாவது பார்க்கலாம். அதுவும் செய்யாமல் இருக்கிறதே என்று யோசித்துக் கொண்டிருக்கிறான்.  யோசித்தவன் முடிவாக ஒரு பிஸ்கட்டை எடுத்து நாயிடம் வீசி இருக்கிறான். அதை கண்டவுடன் நாய் திருடனை பார்த்து சத்தம்போட்டு குரைத்து, கடிக்க பாய்ந்தது.. அப்போது திருடன் நாயிடம், ''ஏன் சும்மா வேடிக்கை பார்த்த நீ, இலவசமாக பிஸ்கட்டை எடுத்து வீசியவுடன் என்னை கடிக்க வருகிறாய்'' என்று கேட்டான்..  அதற்கு அந்த நாய் சொல்லியது, ''நீ சும்மா இருந்தபோது வீட்டு உரிமையாளருக்கு உறவினராக இருக்குமோ அல்லது நண்பராக தெரிந்தவராக இருக்குமோ என்று நினைத்திருந்தேன்.. எப்போது நீ இலவசமாக ஒரு பொருளை கொடுத்தாயோ, அப்போதே உறுதியாகி விட்டது நீ திருடன் தான் என்று''.. யோசிக்க வேண்டிய விஷயம்..

Knowledge is More Valuable than Money

சீனா வில் நடந்த ஒரு வங்கி கொள்ளையின் போது ..... கொள்ளையா்கள் துப்பாக்கியடன் அனைவரையும் மிரட்டினா் . ""இந்த பணம் அரசுக்கு சொந்தமானது , ஆனால் உங்கள் உயிர் உங்களுக்கு சொந்தமானது"" அனைவரும் அசையாமல் படுத்துவிட்டார்கள் .... . மனதை மாற்றும் முறை என்பது இதுதான் . ". This is called "Mind Changing Concept” Changing the conventional way of thinking." . அங்கே ஒரு பெண் கொள்ளையர்களின் கவனத்தை திருப்ப அநாகரிகமாக நடந்தாள் . அப்பொழுது கொள்ளையா்களில் ஒருவன் , இங்கு நடக்க போவது கொள்ளை, கற்பழிப்பு அல்ல என்று மிரட்டி அமர வைத்தான்.... . இதை தான் செய்யும் தொழில்களில் கவனம் தேவை என்று சொல்கிறோம் "Being Professional & Focus only on what you are trained"" . கொள்ளையடித்துவிட்டு வீட்டிற்கு வந்தவுடன் கொள்ளையா்களுள் ஒருவன் கேட்டான் "" வாருங்கள் சீக்கிரம் பணத்தை எண்ணி விடலாம்"" என்று . மற்றாரெுவன் சொன்னான் , பொரு , அவசரம் வேண்டாம் . பணம் நிறைய இருக்கிறது நேரம் செலவாகும் அரசே நாம் எவ்வளவு கொள்ளை அடித்தோம் என்று நாளை செய்திகளில் சொல்லி விடும...

No idea is too small

ஒரு பெரிய பணக்காரர்... அவருக்குப் பிஸினஸில் ஏதோ பிரச்சனை. மன அழுத்தம் தாங்காமல் தவித்தார். அப்போது அந்த ஊருக்கு ஒரு ஜென் துறவி வந்திருந்தார். ‘அவரைச் சந்திச்சா  உன்னோட மனசுக்கு நிம்மதி கிடைக்கும்’ என்று சில நண்பர்கள் சிபாரிசு செய்தார்கள். பணக்காரருக்குப் பெரிய நம்பிக்கை எதுவும் இல்லை. ஆனாலும், நண்பர்கள் சொல்கிறார்களே என்பதற்காக அந்தத் துறவியைச் சந்திக்கச் சென்றார். அவரிடம் தன்னுடைய பிரச்னைகளை விளக்கிச் சொன்னார். எல்லாவற்றையும் கேட்டுக்கொண்ட துறவி, அவருக்கு ஆறுதலாக சில வார்த்தைகளைச் சொன்னார். அவருடைய பிரச்னைகள் தீர்வதற்கு ஒன்றிரண்டு யோசனைகளையும் முன்வைத்தார். அவற்றைக் கேட்ட பணக்காரருக்குச் சிரிப்பு வந்துவிட்டது. ‘ஐயா, நீங்க என்னைத் தப்பா நினைச்சுக்கக்கூடாது... நான் சந்திக்கிற பிரச்னைகள் ரொம்பப் பெரிசு... அதையெல்லாம் இந்தமாதிரி சின்னச் சின்ன யோசனைகளால தீர்த்துட முடியுமா? என்னால நம்பமுடியலை!’ என்றார். ஜென் துறவி கோபப்படவில்லை. ‘இங்கிருந்து உங்க வீடு எவ்வளவு தூரம்?’ என்றார். 'ஏழெட்டுக் கிலோ மீட்டர் இருக்கும். ஏன் கேட்கறீங்க?’ ‘பொழுது இருட்டிடுச்சே... நீங்க எப்படித் திரும்பிப் போ...

Anger Is The Key To Every Evil

Anger is an acid that can do more harm to the vessel in which it is stored than to anything on which it is poured. -Mark Twain பக்கத்து ஊருக்குச் செல்லும் கடைசி பரிசல் அது. அதை விட்டால் மறுநாள் காலையில் தான் பரிசல். பரிசலில் கூட்டம் நிரம்பி வழிந்தது.  பரிசல் புறப்பட தயார் ஆனது.  தாமதமாக வந்த துறவி ஒருவர் அந்த பரிசலில் ஏறினார்.  பரிசலில் இருந்தவர்கள் "நாங்களே இங்கே நெருக்கி அமர்ந்து இருக்கிறோம். உங்களுக்கு இடமில்லை. காலையில் வாருங்கள் " என்றார்கள்.  படகோட்டியோ " துறவியாரே நீங்கள் இங்கே அமருங்கள் " என்று அவருக்கு ஒரு இடம் தந்தார்.  பரிசல் புறப்பட்டது.  பயணிகள் அனைவரும் வெறுப்புடன் துறவியை பார்தனர். அவரோ கண்களை மூடியபடி தியானத்தில் ஆழ்ந்து இருந்தார்.  " தடிமாடு போல இருக்கிறான். உழைத்து சாப்பிட்டால் என்ன? காவி உடை அணிந்து உலகத்தை ஏமாற்றுவது ஒரு பிழைப்பா? " என்று கேலி செய்தான் ஒருவன்.  அவரோ ஏதும் பேசாமால் அமைதியாக இருந்தார்.  என்ன நடந்தாலும் அவர் எதுவும் பேசமாட்டார் என்பது மற்றவர்களுக்கு புரிந்தது. அவர்கள் எல்லோரும் அவரைத் தாறுமாறா...