Posts

செல்வங்களிலெல்லாம் சிறந்த செல்வம்.

 மும்பையில், இந்து ஒருவர் மிகப் பெரும் செல்வந்தர்.. அவருக்கு மனைவி குழந்தைகள் என்று யாரும் இல்லை. பரோபகாரி. ஒரு தீபாவளி பண்டிகையையொட்டி , தன்னிடம் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு மிக சிறந்த விருந்து ஏற்பாடு செய்து அவரே முன்னின்று அனைவரையும் உபசரிக்கிறார்.. விருந்து முடிந்தவுடன், ஒவ்வொருவருடைய இருக்கைக்கு முன் இரண்டு பெரிய வண்ண கவர்கள் வைக்கப் பட்டுள்ளன. ஒன்றில் பணம் என்றும் மற்றொன்றில் புனித ராமாயணம் புத்தகம் என்றும் எழுதி வைக்கபட்டுள்ளது.. நண்பர்களே, நீங்கள் எனக்காக உண்மையாக உழைக்கின்றீர்கள். உங்கள் வேலைக்கேற்ற அல்லது அதற்கும் அதிகமாகவே உங்களுக்கு சம்பளமும் கொடுத்து வந்துள்ளேன்.. என்னுடைய இந்த செல்வம் இறைவனால் அருளப்பட்டது.. என்னுடைய செல்வத்தை எவ்வாறு செலவழித்தேன் என்று இறைவனுக்கு பதில் சொல்ல கடமைபட்டுள்ளேன்... உங்கள் முன் இரண்டு கவர்கள் உள்ளன. ஒன்றில் பணம், மற்றொன்றில் ராமாயணம் புத்தகம் இதில் ஏதாவது ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்... முதலாமவர் தயங்கியவாறே சொன்னார்... முதலாளி, நான் ராமாயணத்தை மதிக்கிறேன். ஆனால் இப்போதைக்கு, நோய்வாய்பட்டிருக்கும் என் தாய்க்கு நல்ல சிகிச்சை அளிக்க வேண்

The book of lies... [பொய் புத்தகம்...]

 இன்று எங்கு பார்த்தாலும் போலிகள், ஊழல்கள், மோசடிகள், எதிலும் பொய் மற்றும் நேர்மை இல்லாத தன்மைப் பெருகி விட்டது..  அமெரிக்காவின் எழுத்தாளர் மேரிலேன்ட் மாகாணத்து ஆளுநருமான ஹிர்ஷ் கோல்ட்பெர்க் “The book of Lies” என்ற புத்தகம் எழுத, இவர் செய்த ஆய்வு இவரை இதற்குத் தூண்டியது. இந்தப் புத்தகம் எழுத இவர் சுமார் நான்கு வருடங்கள் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் ஒரு நாளைக்கு சுமார் 200 முறை மனிதர்கள் சாதாரணமாக பொய்களை உதிர்க்கிறார்கள் என்று கண்டு அறிந்தார்..  இந்த நிலை நீடித்தால் பொய் என்பது வாழ்வியல் முறை என்றாகி விடும். நேர்மை என்ற ஒரு கோட்பாடு அழிந்து விடும் என்று அவர் கருதினார். நேர்மை என்ற கோட்பாடு பாதுகாக்கப்பட வேண்டுமானால், வருடத்தில் ஒரு நாளாவது நேர்மையை நினைவு கூறுவது அவசியம் என்று அவர் கருதினார்.  இதனால் முட்டாள்கள் தினம் அனுசரிக்கப்படும் ஏப்ரல் மாதத்தின் கடைசி நாள் நேர்மை தினமாக அனுசரிக்கப்பட வேண்டும் என விரும்பினார். இந்த நாளை அனுசரிக்கப் பல ஆலோசனைகளும் கோல்ட்பெர்க் தருகிறார்.  உலகின் மிக மோசமான ஊழல்கள் பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது, நேர்மை பற்றி உலகப் புகழ் பெற்ற எழுத்

வேலையா? வியாபாரமா?

 சீனாவின் பெரிய செல்வந்தர் ஜாக் மா வின் கூற்றின்படி குரங்கிற்கு முன்பாக பணத்தையும் வாழைப்பழத்தையும் வைத்தால் அது வாழைப்பழத்தையே தெரிவு செய்யும். ஏன் என்றால் அதற்கு பணத்தைக் கொண்டு அதிக வாழைப்பழங்களை வாங்கலாம் என்று தெரியாது. அதே போல் மக்களுக்கு முன் வேலையையும் வியாபாரத்தையும் வைத்தால் பெரும்பாலானோர் வேலையையே தெரிவு செய்வார்கள். ஏன் எனில் அவர்களுக்கு வேலையை விட வியாபாரத்தில் அதிக பணம் ஈட்டலாம் என்பது தெரியாது. ஏழைகள் ஏழைகளாகவே இருப்பதற்குரிய காரணங்களில் ஒன்றாக அவர்கள் சுய தொழில் வாய்ப்புகளை அடையாளம் காணக்கூடிய பயிற்சியை பெற்றுக்கொள்ளாமை காணப்படுகிறது. அவர்கள் பாடசாலைகளில் கூடுதலான நேரத்தை செலவு செய்து கற்றுக்கொள்வது யாதெனில் தமக்காக வேலை செய்யாது மாதாந்த ஊதியத்துக்கான வேலைகளை செய்வதற்கே. இலாபம் சம்பளத்தை விட சிறந்தது. ஏனெனில் சம்பளம் உங்களுக்கு உதவலாம். ஆனால் இலாபம் உங்களுக்கு உயர்ந்த வாழ்க்கையை தரும். நம்மை சுற்றி இருப்பவர்களில் வாழ்க்கையில், வாழ்வில் உயர்ந்த நிலையை அடைந்தவர்களை எடுத்து பார்த்தோமென்றால் உங்களுக்கு நன்றாகவே புரியும் அவர்கள் எப்படி இந்த நிலையில் இருக்கிறார்கள் என்று. எனவ

வயதொன்றும் எல்லை இல்லை

  எல்லோருக்கும் எல்லாமும் அது அதற்கு உண்டான வயதில் கிடைப்பது அரிது. ஒபாமா தனது 55 வது வயதில் அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறார். ஆனால் டொனால்ட் டிரம்ப் தனது 70 வது வயதில் தான் அதிபர் ஆகிறார். பில்கேட்ஸ் தனது 30 களிலேயே உலகின் பெரிய செல்வந்தர் ஆனார். ஆனால் INDITEX SPAIN நிறுவனத்தை தனது 50 ஆவது வயதில் தான் தொடங்கி அமான்சியோ ஓர்டேகா 80 வயதில் தான் உலகின் இரண்டாவது பெரிய செல்வந்தர் ஆனார். ஒருவருக்கு அவர் விரும்பிய வேலை வாய்ப்பு தானாகவே தேடி வருகிறது. இன்னொருவருக்கோ எல்லா திறமைகள் இருந்தும் சரியான வேலையோ அல்லது தொழிலோ அமைவது இல்லை. ஒருவர் 22 வயதில் தனது வியாபாரம் தொழிலில் கோடீஸ்வரரான ஒருவர் 45 வயதில் எல்லாம் இழந்து ஏழ்மை ஆகிறார். ஒருவர் 40 வயது வரை தன் தொழில் வியாபாரத்தில் சகல கஷ்ட நஷ்டங்களை அனுபவித்து 50 வது வதில் கோடீஸ்வரர் ஆகிறார். எம்ஜியாருக்கு மொத்தம் 70 வயது வரை வாழ்க்கை வரலாறு. அதில் முதல் 40 வயது வரை வாழ்க்கையில் பயங்கர கஷ்டம். கடைசி 30 வருடங்கள் சாகும்வரை ராஜயோக வாழ்க்கை. சர்ச்சில் தனது 82 வது வயதில் History of English Speaking People என்ற புத்தகத்தை எழுதினார். பெர்னாட்ஷா தனது 93 வ

பழநிமலையில் இருப்பது முருகனா? தண்டாயுதபாணியா?

 பழநி மலை போகரின் உபாசனா தெய்வமான புவனேஸ்வரியின் அறிவுரைப்படி போகர், பழநி மலையில் தவம் இருந்தார். அவரது தவத்துக்கு இரங்கிய பழநி ஆண்டவர், தன்னை பிரதிஷ்டை செய்யும் முறை மற்றும் வழிபாடுகள் குறித்துச் சொல்லிவிட்டு மறைந்தார். அதன்படி, தண்டாயுதபாணி வடிவை உருவாக்கி, ஆகம விதிப்படி கர்ப்பக்கிரகத்துக்குள் பிரதிஷ்டை செய்தார் போகர். போகரின் சீடர் புலிப்பாணிச் சித்தரும், அவரது வழிவந்த பண்டாரப் பெருமக்களும் தண்டாயுத பாணியைப் பராமரித்து வந்தனர்.  போகருக்குப் பழநி கோயிலில் தனிச் சந்நிதி உள்ளது. போகரின் சீடர் புலிப்பாணி முனிவருக்கு ஒரு மடம் உள்ளது. இவரின் சந்ததியினருக்கு கோயிலில் பூஜை செய்யும் உரிமையும், விஜய தசமி அன்று அம்பு போடும் உரிமையும் இருந்து வருகிறது. ஆலயத்தின் தென்மேற்கு மூலையில் போகரின் சமாதி உள்ளது. அதில், அவர் வழிபட்டதாகக் கருதப்படும் புவனேஸ்வரியின் திருவுருவமும், மந்திரச் சக்கரங்களும், மரகதலிங்கமும் உள்ளன. இவற்றுக்குத் தினசரி வழிபாடுகள் நடைபெறுகின்றன.  நவபாஷாணத்தினாலான மூலவர் விக்கிரகத்தை அபிஷேகிக்கும்போது, மேலிருந்து கீழாகவே தேய்ப்பர். இந்த விக்கிரகத்தின் மேற்பரப்பு கீழ்நோக்கிய நிலையில்

செல்வங்களையும் வசதிகளையும் அனுபவித்தவர்கள் சொல்லிய அனுபவ வாசகம்!!!

 வைர வியாபாரி ஒருவன் தன் வைரங்கள் அனைத்தையும் விற்றுவிட்டு பணத்தை ஒரு மூட்டையில் கட்டிக்கொண்டு தன் சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்தான். வழியில் ஒரு ஆற்றை கடக்க வேண்டி இருந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக அந்த ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வெள்ளத்தை பொருட்படுத்தாத வைர வியாபாரி எப்படியாவது ஆற்றை கடந்து சென்றுவிடலாம் என்று எண்ணி அந்த ஆற்றில் இறங்கினான். அப்போது வெள்ளம் அவனை நிலை தடுமாற செய்தது. இதனால் அவன் தன் பண மூட்டையை வெள்ளத்தில் தவறவிட்டான். உடனே "ஐயோ என் பண மூட்டையை வெள்ளம் அடித்து செல்கிறதே யாராவது காப்பாற்றுங்கள்" என்று கதறினான். அந்த ஆற்றில் மீன் பிடித்து கொண்டிருந்த ஒரு மீனவனின் காதில் இந்த வைர வியாபாரியின் கதறல் சத்தம் கேட்டது. உடனே அவன் ஆற்றில் குதித்து கடுமையாக போராடி அந்த பணமூட்டையை எப்படியோ மீட்டு எடுத்து கரையை அடைந்தான். இந்த பண மூட்டையை காப்பாற்ற சொல்லி யாரோ கதறினீர்களே, நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் ? நான் உங்கள் பண மூட்டையை மீட்டுக்கொண்டு வந்துவிட்டேன். வந்து பெற்றுக்கொள்ளுங்கள்" என்று சத்தம் போட்டு அழைத்தான். ஆனால் வெகு நேரம் ஆகியும் யாரும் அதை பெ

நீங்கள் கொச்சிக்கு வருகை தரும் போது ருசிக்க வேண்டிய தெருவோர கடை உணவுகள் : Street Foods You Should Try When You Visit Kochi

Image
 கொச்சி, "கேட்வே டு கேரளா" என்றும் அழைக்கப்படுகிறது, இது இந்தியாவின் தென்மேற்கு கடற்கரையில் உள்ள ஒரு நகரம் மற்றும் கேரளாவின் மிகவும் பிரபலமான இடங்களில் ஒன்றாகும்.இந்த நகரத்தின் அழகு கண்களை அமைதிப்படுத்தும் அதே வேளையில், பலவிதமான சுவையான உணவு வகைகளை வழங்கும்.மலபாரி சமையலில் இருந்து கொச்சியின் உணவுகள் தனித்துவமாக இருக்கிறது.நீங்கள் கொச்சிக்கு வருகை தந்தால் கண்டிப்பாக ருசிக்க வேண்டிய பிரபலமான தெருவோர கடை உணவுகளின் பட்டியல் இங்கே:- 1. Kadala Curry And Puttu 2. Thattu Dosa 3. Appam And Stew 4. Pazhampori